(சாரதா மனோகரன்)
உலகளாவிய ரீதியிலே பல பில்லியன் மக்கள், அதிலும் மிகவும் வறிய வகுப்பைச் சேர்ந்தோர் தமது வாழ்வாதாரத்துக்காக, தொழிலுக்காக, உணவுக்காக, கடல், சமுத்திர சூழற்றொகுதிகளால் வழங்கப்படும் பண்டங்களையும் சேவைகளையும் நம்பியே வாழ்கின்றனர். உலக சனத்தொகையின் 10- -முதல் 12 சதவீதம் ஏறத்தாழ 4.3 பில்லியன் மக்கள் தமது 15 சதவீத புரதத்தேவையை நன்னீர், கடல் வாழ் மீன்கள் மூலம் பூர்த்தி செய்து கொள்வதாக உலக விவசாய ஸ்தாபனம் கண்டறிந்திருக்கிறது. ஏறத்தாழ 200 மில்லியன் மக்கள் புயலிலிருந்தும் கடலைகளிடமிருந்தும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள பவளப்பாறைகளை நம்பியிருக்கின்றனர். ஆயினும் சமுத்திரங்களின் ஆரோக்கியம், உற்பத்தித்திறனைப் பேணுவதற்கு அத்தியாவசியமான வாழிடங்கள் சில மிக வேகமாகக் குறைவடைந்து செல்வதை ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. (“நன்னீர் மீனை மட்டுமே நம்பும் காலம் வெகு தொலைவிலில்லை!” தொடர்ந்து வாசிக்க…)