இன்றைய நாளின் இறுதி பயணமாக மாதகல், கீரிமலை, காங்கேசன்துறை என்று கடந்த வருடம் முற்பகுதியில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசத்தை பார்வையிடுவது எனத் தீர்மானித்து பண்ணைப் பாலத்தினூடு யாழ் பெரு நிலப்பரபை அடைந்தேன். நேரப் பற்றாக்குறையை சரி செய்ய நாவாந்துறைஇ காக்கைதீவு சந்தியூடாக மானிப்பாயை அடைந்து சித்தங்கேணி பண்டத்தரிப்பு ஊடாக மாதகல் கடற்கரையை அடைவது திட்டம். எனக்கு மிகவும் அத்துப்படியான பிரதேசங்கள் இவை. எனது வழிகாட்டல்களும்? சந்திகளில் திருப்பல் என்ற குறுக்குப் பாதை அறிவுறுத்தல்களும் எனது வான சாரதிக்கு ஆச்சரியமாக இருந்தாலும் எனக்கு இது ஒன்றும் 30 வருடங்கள் கடந்தாலும் எனக்கு புதிதாக தோன்றவில்லை.
(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….! (Part 6)” தொடர்ந்து வாசிக்க…)