சிலுவை சுமக்கக் கடமைப்பட்டவர்கள் யார்?

(எஸ்.கருணாகரன்)

தமிழ் அரசியல் கைதிகளை, அரசாங்கம் விடுவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்குக் காரணமாக இருந்த தூண்டல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் மதியரசன் கிருஷாந்தி என்பவர், பகிரங்கமாக எழுதிய ஒரு கடிதமாகும். தன்னுடைய சகோதரர் ஒருவர், அரசியல் கைதியாக அநுராதபுரம் சிறைச்சாலையில், வழக்கு விசாரணையை எதிர்கொள்வதில் சந்தித்து வரும் நெருக்கடிகளை வெளிப்படுத்தி, அந்தக் கடிதத்தை, மதியரசன் கிருஷாந்தி எழுதியிருந்தார்.

(“சிலுவை சுமக்கக் கடமைப்பட்டவர்கள் யார்?” தொடர்ந்து வாசிக்க…)

கலவரமாகுமா உள்ளூராட்சி தேர்தல் களம்?

உள்ளூராட்சி தேர்தலை நடத்தும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் பெறப்படும் முன்பே அரசியல் புகைக்கத் தொடங்கிவிட்டது. எதிர்வரும் காலங்களில் தமிழ் அரசு கட்சியுடன் இணைந்து செயல்ப்படவோ அன்றி அதன் வீட்டு சின்னத்தில் போட்டியிடவோ போவதில்லை என ஈ பி ஆர் எல் எப் கட்சி பிரேமசந்திரன் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

(“கலவரமாகுமா உள்ளூராட்சி தேர்தல் களம்?” தொடர்ந்து வாசிக்க…)

2009ம் ஆண்டு வரை யுத்தம் நீடித்தமை நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் அழிவை ஏற்படுத்தியது

2004 இல் ஏப்ரல் மாதம் முடிவுக்கு வந்திருக்க வேண்டிய யுத்தம் விடுதலைப்புலிகளின் பூரண செயலிழப்புடன் 2009 ல் மே மாதம் வரை ஐந்து ஆண்டுகள் எவ்வாறு நீடித்தது? யுத்தத்தின் விளைவால் பல்வேறு இனங்களைச் சார்ந்த அப்பாவி பொதுமக்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கொல்லப்பட்டார்கள் என்பது இரகசியமல்ல. யுத்தம் முடிந்தவுடன் ஒர் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தால், தேசத்துரோகம் உட்பட பல்வேறு குற்றங்களுக்கு ஆளாகவேண்டியவர்கள் தாம் பெரும் வீரர்கள் என எடுத்துக்காட்ட மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.

(“2009ம் ஆண்டு வரை யுத்தம் நீடித்தமை நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் அழிவை ஏற்படுத்தியது” தொடர்ந்து வாசிக்க…)

அதாவுல்லாவுக்கு பல முனைகளிலும்               பலம் சேர்த்த பாலமுனை பிரகடன மாநாடு!

 

(விருட்சமுனி)

தேசிய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாவுல்லாவின் அரசியல் மீள் எழுச்சியில் கடந்த வாரம் நடந்து முடிந்த பாலமுனை பிரகடன மாநாடு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல் கல் ஆகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக எம். எச். எம். அஷ்ரப் பதவி வகித்தபோது அவருடன் சேர்ந்து பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தை நிர்மாணித்து கொடுத்ததில் அதாவுல்லாவின் பங்கும், பங்களிப்பும் நேரடியானதாக அமைந்து இருந்தது.

(“அதாவுல்லாவுக்கு பல முனைகளிலும்               பலம் சேர்த்த பாலமுனை பிரகடன மாநாடு!” தொடர்ந்து வாசிக்க…)

நெஞ்சம் நெகிழ வைத்தது .. நேற்று நான் பார்த்த ஒரு புகைப்படம் !

இதோ ..இந்தப் படத்தின் இடது ஓரத்தில் நிற்கும் இந்த இளம்பெண் …
தன்னைத் தூக்கி வளர்த்த , தன் தலையை பாசத்துடன் தடவிக் கொடுத்த ,
அள்ளி அரவணைத்து வளர்த்த … தன் அப்பாவின் கைகளைத்தான் நேருக்கு நேர் பார்க்கிறாள் .
கைகள் மட்டும்தான் இங்கே இருக்கின்றன ..
ஆனால் அவள் அப்பா , எப்போதோ கர்த்தரிடத்தில் போய் சேர்ந்து விட்டார் !

(“நெஞ்சம் நெகிழ வைத்தது .. நேற்று நான் பார்த்த ஒரு புகைப்படம் !” தொடர்ந்து வாசிக்க…)

அக்டோபர் புரட்சியும் பெர்லின் சுவரும்

(தோழர் சுகு)

யார் சொன்னது அக்டோபர் புரட்சியின் அறங்கள் தோற்றதென்று ! அது காட்டாற்று வெள்ளம்!!;

நாம் வாழும் காலத்து பதிய தலைமுறைக்கு அகடோபர் புரட்சி பற்றிய அறிவு பிரக்ஞை இல்லை என்றே கூறிவிடலாம்.

1990 பெரும் பிரளயம் போல் உருவான நுகர்வுக்கலாச்சாரம் மற்றும் தாராளவாத பொருளாதாரமுறையில் அடிபட்டுச் செல்லும் தலைமுறை இது.

பொதுவாகவே சுதந்திரப்போராட்டம் ,சமூகமாற்றம் பற்றிய கருத்துக்கள் பலவீனப்படுத்தப்பட்ட நகர்ப்புற இளைஞர் குழாம் ஒன்று உருவாகியுள்ளது.

(“அக்டோபர் புரட்சியும் பெர்லின் சுவரும்” தொடர்ந்து வாசிக்க…)

திருத்தப்பட வேண்டிய தவறுகள்

(எஸ்.கருணாகரன்)

இலங்கைத் தீவில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களில் கூடுதலானவர்கள், வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களே என்று சனத்தொகை, புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களே கடுமையான வறுமைச் சூழலுக்குள் சிக்கியுள்ளன. அதிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 18.2 சதவீதமான மக்கள், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய இது ஓர் அபாய அறிவிப்பே.

(“திருத்தப்பட வேண்டிய தவறுகள்” தொடர்ந்து வாசிக்க…)

குழம்பிப் போயுள்ள வடக்கு அரசியல்

(கே. சஞ்சயன்)

புதிய கட்சிகளின் உருவாக்கம், உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள், ஏட்டிக்குப் போட்டியான விமர்சனங்கள், எதிர்கால முதலமைச்சர் யார் என்ற அனுமானங்கள் போன்றவை, வடக்கின் அரசியல் களத்தை மீண்டும் சுவாரசியப்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. அடுத்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என இரண்டு தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. எனவே கொள்கை, கோட்பாடுகளுக்கு அப்பால், எல்லாக் கட்சிகளும், அதற்குத் தயாராக வேண்டிய நிலையில் உள்ளன.

(“குழம்பிப் போயுள்ள வடக்கு அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)

தலைகீழாய் தொங்கவிடப்பட்டான் முசோலினி!

ஆட்சிக்கு வந்த முசோலினி ‘இத்தாலியின் முன்னேற்றத்திற்காக நான் பல தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறேன். இதை எதிர்ப்பவர்கள் யாராக இருப்பினும் அவர்களை அழித்துவிடுவேன்’ என்று பகிரங்கமாக அறிவித்தான். எதிர்க்கட்சிகள் அனைத்தையும் தடைசெய்தான். பத்திரிகை சுதந்திரத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கினான். தன்னை எதிர்ப்பவர்களை நாடு கடத்தினான். தன் எதிரிகள் என்று அடையாளம் கண்ட அனைவரின் தலைகளையும் துண்டிக்கும்படி உத்தரவு பிறப்பித்தான்.

(“தலைகீழாய் தொங்கவிடப்பட்டான் முசோலினி!” தொடர்ந்து வாசிக்க…)

சாய்ந்தமருது – கல்முனை விவகாரம்: இயலாமையின் வலி

(மொஹமட் பாதுஷா)

தனித்துவ அடையாளம் என்றும் அபிவிருத்தியோடு சேர்ந்த உரிமை அரசியல் என்றும் பல வருடங்களாகப் பேசி வருகின்ற முஸ்லிம்களின் அரசியல் இயலாமை, கிழக்கில் மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி இருக்கின்றது. வரலாற்றில் இருந்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதையும், அரசியலில் இன்னும் அவர்கள் பக்குவப்படவில்லை என்பதையும், மக்களை உசுப்பேற்றி விடுவதில் கைதேர்ந்த அளவுக்கு காரியம் முடித்துக் காட்டுவதில் அவர்களுக்கு ஆற்றல் கிடையாது என்பதையும், சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் வெளிக்காட்டியிருக்கின்றது. (“சாய்ந்தமருது – கல்முனை விவகாரம்: இயலாமையின் வலி” தொடர்ந்து வாசிக்க…)