ஆளுநர்கள் மத்தியின் அரசியல் கருவிகள்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

நாட்டில் எது நடந்தாலும் அதனை தமது அரசியல் கண்ணோட்டத்தின் படி அல்லது தமது எதிரிக்கு எதிராக பாவிக்கும் நோக்குடன் வியாக்கியானம் செய்வதையே பலர் விரும்புகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் மூன்று மாகாண ஆளுநர்களை பதவி நீக்கம் செய்து அவர்களுக்கு பதிலாக வேறு மூன்று பேரை நியமித்த போதும் அதனையே அவதானிக்க முடிந்தது.