‘அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் தவறாக வழிநடத்த முயன்ற ரஷ்யா’

தேசிய புலனாய்வு பணிப்பாளர் அலுவலகத்தால் நேற்று பிரசுரிக்கப்பட்ட தேர்தல் தலையீடு குறித்த 15 பக்க அறிக்கையிலேயே குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கான ஆதரவைக் குறைக்கும் வகையிலான ஈரானின் பல முனை தாக்கம் செலுத்துதல் மூலம் வாக்காளர்களை மாற வைக்கும் ஏனைய முயற்சிகளையும் புலனாய்வு முகவரகங்கள் கண்டுபிடித்துள்ளன.

இதுதவிர, கியூபா, வெனிசுவேலா, லெபனானிய குழுவான ஹிஸ்புல்லாவும், தேர்தலில் தாக்கம் செலுத்த மேற்கொண்ட முயற்சிகள் குறித்து தான் கண்ணுற்றதாக, ஐ. அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.