ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமனம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும் யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயருமான யோகேஸ்வரி பற்குணராஜா இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமைக்கான விசேட வர்த்தமானி நேற்று (12) வௌியிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

இந்நிலையிலேயே ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.