கப்பல் சேவை மீண்டும் ​ஆரம்பம்

வடகிழக்கு பருவமழை காரணமாக ஒக்டோபர் மாதம் 23ஆம்  திகதியுடன் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில்,  நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் தகவல்கள் வெளியாகின.

​மேலும், முன்னதாக இயக்கப்பட்ட ‘செரியாபாணி’ கப்பலுக்கு மாற்றாக ‘சிவகங்கை’ என்ற பெயர் கொண்ட மற்றொரு பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே கடல் பயணத்தை ஆரம்பிக்கள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இதனிடையே நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் மே மாதம் 13ஆம் திகதி முதல் இயக்கப்படும் என கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதற்கமைய, நாகை-இலங்கை இடையை இயக்கப்படும் சிவகங்கை கப்பல் அந்தமானில் தயாராகி வந்தது. அந்த கப்பல் வெள்ளிக்கிழமை (10) சென்னை துறைமுகம் வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல் சென்னையில் இருந்து சனிக்கிழமை (11​) நாகை துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை (12) நாகை துறைமுகத்தை வந்தடையவுள்ளதோடு திங்கட்கிழமை (13) ஆரம்பிக்கப்படவுள்ளது.

160 பேர் பயணிக்கும் வகையில் இந்த கப்பல் இயக்கப்படவுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.