டொறன்டோவில் புதுவகை உயிர்கொல்லி ஆபத்து

இந்நிலையில், உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பக்றீரியா தொற்று தொடர்பில், இதுவரையில் குறித்த பக்றீரியா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேசமயம், குறித்த பக்றீரியா தாக்கத்தினால் மூளையுறை அழற்சி ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தடுப்பூசி ஏற்றிக் கொள்வதன் மூலம் இந்த நோயை தடுத்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள அதே நேரம், ஏனைய நாடுகளில் இந்த நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்க விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது