சாரதி ஆசனத்தில் ‘அவ்வாறானவரை’ அமரச் செய்தது சரியா?

எமது நாட்டில் மட்டுமன்றி, உலகநாடுகளில் இடம்பெறும் பாரிய விபத்துகளில் பெரும்பாலானவை சாரதியின் தவறால் இடம்பெற்றிருக்கும். எனினும், சாரதியின் மீது நேரடியாக குற்றஞ்சுமத்தாது, வாகனங்கள், வீதிகள், இயற்கை ஆகியவற்றின் மீது குற்றஞ்சுமத்தித் தப்பித்துக்கொள்வர். சில சந்தர்ப்பங்களில் எதிரே வந்த வாகனத்தின் மீதும் கையை நீட்டுவர். சிலவேளைகளில் அது உண்மையாகியும் விடும்.