தரப்படுத்தல்: முரண்பாட்டின் புதுவெளி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

1971ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழக அனுமதிகளில் அறிமுகப்படுத்திய தரப்படுத்தல் முறையானது தமிழர்கள் அரசாங்கத்தால் திட்டமிட்ட முறையில் ஒதுக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும். சுதந்திர இலங்கையில் மலையகத் தமிழரின் குடியுரிமைப்பறிப்பு, தனிச்சிங்களச் சட்டம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக சிறுபான்மையினரை சட்ட நிர்வாக ரீதியாக கட்டமைப்பு ஒதுக்கலை நிகழ்த்திய மூன்றாவது நிகழ்வு தரப்படுத்தலாகும்.