தீபாவளிப் பண்டிகை.

பண்டிகைகள் எல்லாம் வியாபாரத்தை பெருக்க உருவாக்கப்பட்ட நாட்கள் என்று உருமாற்றப்பட்ட உலகில் பண்டிகைகளை கொண்டாடும் மகிழ்சியான மனநிலை ஏற்படாது என்பது மனித நேயம் மிக்க யாரும் பொதுவாக ஏற்படக்கூடியதே. இவ் மனநிலையில் இருந்து இந்த தீபாவளி பண்டிகையை பார்த்தாலும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடன் நிகழ்காலப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தி இந்த பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். குறிப்பாக தமது உறவுகளை, வாழ்நிலங்களைத் தொலைத்தவர்களின் மிக நீண்ட இடையறாத போராட்டங்களின் மத்தியல் பண்டிகைகளை கொண்டாடும் மனநிலையை ஏற்படுத்துவது கடினமானதே. ஆனாலும் பண்டிகை கொண்டாடும் உங்கள் மகிழ்சியான தருணங்களில் நானும் இணைந்து கொள்கின்றேன். அடுத்த தீபாவளி ‘தமிழ் ஈழத்தில்” என்று ‘நம்பிக்கையூட்டிய” காலம் போய் அடுத்த தீபாவளி ‘புதிய அரசியல் தீர்வுத் திட்டம்” உடன் என்று மாறிப் போன காலத்தில் நாம் தற்போது இருக்கின்றோம் என்பதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.