பத்மநாபா படுகொலை

(Bala R Ganesh)

இந்த வருடத்தின் முதல் வாசிப்பு, இதற்கு முன்பே இந்திர நீலம் சிறுகதைத் தொகுப்பை எடுத்துவிட்டாலும் வரலாறு, கட்டுரைத் தொகுப்புகளின் மீதிருக்கும் மோகம் எனக்கு வடிவதேயில்லை. இருந்த ஒரு விடுமுறை நாளில் சிறுகதையா, வரலாறா என்னும்பொழுது, இந்திர நீலம் என்னை இறுக்கிக் கட்டிப் போட்டிருந்தது. ஆனால் அதை மீறி ஸ்டீபன் ஹாக்கிங்கும், பத்மநாபாவும் வா வா என்றார்கள். ஓடிப்போய் பத்மநாபாவைத் தழுவிக் கொண்டேன்.