5ஆவது வருடத்தை நோக்கி நகரும் “நீதிக்கான ஏக்கம்”

(ஜே.ஏ.ஜோர்ஜ்)

 “திடீரென சத்தமொன்று கேட்டது. ஒரு கணம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. நான் கண்ணை திறந்து பார்த்தபோது, எனக்கு அருகில் காயமடைந்து விழுந்த எனது தம்பியை அங்கிருந்தவர்கள் முச்சக்கரவண்டியில் ஏற்றியதை பார்த்தேன். பின்னர் என தம்பி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ளதை இரண்டு நாட்களுக்கு பின்னரே என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. இரண்டு நாட்களாக தம்பியை பற்றி எந்த தகவலும் இல்லை” இவ்வாறு தனது கதையை பகிர்ந்து கொள்கிறார் கட்டுவாப்பிட்டிவில் வசிக்கும் 22 வயதான தினுக்கி கௌசல்யா.