அதிவேக நெடுஞ்சாலை விபத்துக்கள்; இதுதான் காரணம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களுக்கு முக்கிய காரணம் விதிமுறைகளை கடைப்பிடிக்காத சாரதிகளே என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விசேட வேலைத்திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.இதேவேளை, கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு வரையிலான நெடுஞ்சாலையில் மின்சார விளக்குகளை பொருத்தும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.