ஐந்து தமிழ் கட்சிகளின் சந்திப்பை சி.வி, சுரேஷ் புறக்கணிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று (23) நாடாளுமன்றக் கட்டத்தொகுதியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற போது, இன்று கூடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.

எனினும், பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஒன்றிணைந்த ஐந்து தமிழ் கட்சிகளும் தீர்மானமொன்றுக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு கலந்துரையாடல் மற்றும் புதிய தீர்மானங்கள் தேவையில்லை என்பதால், இன்று (24) நடைபெறும் கூட்டத்தை புறக்கணிக்க தீர்மானித்ததாக, சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் சுரோஷ் பிரேமசந்திரன் ஆகியோர் தமிழ்மிரருக்கு தெரிவித்தனர்.

RECOMMENDED