கனேடிய பிரதமரை சாடுகிறார் அலி சப்ரி

கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது என நியுயோர்க்கில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் கனடாவிற்கிடையில் நிலவும் பதற்ற நிலை குறித்து இந்திய ஊடகமான ANI க்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.