நானே பிரதமர்: இல்லையேல் இடைக்கால அரசாங்கம் இல்லை – மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், “நானே பிரதமர்“ என மீண்டும் அழுத்தமாக தெரிவித்துள்ளார். “தான் பிரதமர் இல்லாத, இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்கவும் முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், அரசாங்கத்துடன் பேசவில்லை என்றால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.