நாமலின் வங்கிக் கணக்குகள் முடக்கம்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் நிறுவனங்களின் நான்கு வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளை பணமோசடி தொடர்பான சட்டத்தின் கீழ், நாமல் ராஜபக்‌ஷ உட்பட 8 பேருக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் (FCID) இன்று வழக்கொன்றும் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸின் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.