முதலமைச்சர் விக்கி மீது நடவடிக்கை ஏன்?

செய்தி: விக்கினேஸ்வரன் மீது ஒழுங்கு நடவடிக்கை! 11-ம் திகதி கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவு – மாவை சேனாதிராஜா
இந்தியாவில் குடியிருக்கும் தலைவர்களை தெரிவு செய்யாமல் மக்கள் மத்தியில் வாழும் தலைவர்களை தெரிவு செய்யுங்கள் என்று விக்கி கூறினார். இது தவறா?
மக்களுக்கு ஒரு கருத்தும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இன்னொரு கருத்தும் சொல்லும் தலைவர்களை தெரிவு செய்யாதீர்கள் என்று விக்கி சொன்னார். அது தவறா?
உள்ளக விசாரணை வேண்டாம். சர்வதேச விசாரணையே வேண்டும் என்று விக்கி கூறினார். அது தவறா?
ரணில் விக்கிரமசிங்காவிடம் சிலர் இரகசியமாக பணம் பெற்றுக் கொண்டதை மக்களுக்கு விக்கி வெளிப்படுத்தினார். இது தவறா?
எதற்காக விக்கி மீது ஒழுங்கு நடவடிக்கை?
நீங்களே அவரை பெரும் நீதிமான் என அழைத்து வருவீர்கள். அப்புறம் நீங்களே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பீர்கள்.
உங்க கூத்துக்கு எல்லாம் ஆமாம் போட மக்கள் என்ன வெங்காயங்களா?
(Ponniya Rasalingam)