யாழ்.பல்கலையில் பதற்றம்: வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம்

யாழ்.பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இதனால் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் என எவரும் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாத நிலையில் வீதியில் காத்திருக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த சில மாதங்களாக செயலிழந்து காணப்படுகின்றன.  அதனை அங்கீகரிக்குமாறு கோரியே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.