யோஷித்த ராஜபக்ஷ கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசாரணைகளுக்காக கடற்படை தலைமையகத்துக்கு இன்று காலை 10.30 மணியளவில் அவர் சென்றிருந்தார். விசாரணைகளை அடுத்து, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ஷ, கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.மஹிந்த சற்று முன்னர் வந்தடைந்தார். அவர் ஆஜர்படுத்தப்பட்டு ஒரு மணித்தியாலம் ஆகிறது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, கடுவலை நீதவான் நீதிமன்றத்துக்கு சற்று முன்னர் வந்தடைந்தார்.