வாகன விபத்தில் பிரபல நடிகர் மரணம்

தீப் சித்து  பயணித்த காரானாது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றில் மோதியமையினாலே இப்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படுகாயங்களுக்குள்ளான தீப் சித்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கிப்பட்டுள்ளது.

தீப் சித்து கடந்த ஆண்டு டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில், செங்கோட்டையில் அத்துமீறி சீக்கிய மதக் கொடியை சிலர் ஏற்றியமை தொடர்பில் , போராட்டத்தைத் தூண்டிய  வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு   அண்மையில் பிணையில் வெளியே வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரது மரணம் பொலிவூட் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.