ஊவா மாகாண ஆசிரியர் உதவியாளர்கள் மட்டுமன்றி அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் தமது உரிமைகளுக்காக அணிதிரளவேண்டும் – மக்கள் ஆசிரியர் சங்கம்

கடந்த வருடம் கல்வி அமைச்சினால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்தக் கொடுப்பனவான ரூபா.6000 ற்கு மேலதிகமாக ஊவா மாகாணத்தில் மாத்திரம் மேலும் ரூபா.10,000 யும் சேர்த்து ரூபா. 16,000 ஆக சில மாதங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் அதனை அம்மாகாண கல்வி அமைச்சு நிறுத்தியுள்ளது. அத்தோடு தற்போது வழங்கப்படும் ரூபா. 6000 இல் இருந்து மேலதிகமாக வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை மாதம் ரூபா. 2000 படி மீளப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலை முன்னிட்டு அரசியல் இலாபம் கருதி அப்போதைய ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்களினால் இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

(“ஊவா மாகாண ஆசிரியர் உதவியாளர்கள் மட்டுமன்றி அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் தமது உரிமைகளுக்காக அணிதிரளவேண்டும் – மக்கள் ஆசிரியர் சங்கம்” தொடர்ந்து வாசிக்க…)

குற்றம் செய்த புலி உறுப்பினர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

தேசிய நல்லிணக்கத்திற்கான இறுதித் தீர்வு என்பது, நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்குமான நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கும் தீர்வு என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். தமது அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட அதிகார பரவலாக்க யோசனையில் இருந்து தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உதலாகம அறிக்கை வரை அனைத்து யோசனைகள் குறித்தும் அவதானம் செலுத்தி இந்த இறுதித் தீர்மானத்தை வௌியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த அவரது நிலைப்பாடு என்ன என இதன்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சந்திரிக்கா, சுமார் 300 பேர் வரையிலேயே உள்ளதாகவும் அவர்களை மூன்று கட்டங்களாக விடுவிக்க வேண்டும் எனவும் கூறினார்.

(“குற்றம் செய்த புலி உறுப்பினர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா” தொடர்ந்து வாசிக்க…)

தெரிந்த நடிகர் தெரியாத விவசாயி- “வில்லன்” கிஷோர்

தான் சம்பாதிச்ச பணத்தில் பெங்களூர் அருகே நிலம் வாங்கி, தானே கெமிக்கல் உரங்கள் இன்றி இயற்கை விவசாயம் செய்கிறார் நம்ம தமிழ் சினிமா வில்லன் கிஷோர்.விதைக்கிற மற்றும் அறுவடை சீசனில் சினிமா வாய்ப்பு வந்தால் எனக்கு வேறு பட வேலைகள் இருப்பதாகச் சொல்லி சினிமா வாய்ப்பை தள்ளி விட்டு விவசாயம் செய்கிறார்,தன் மனைவி தனக்கு விவசாயத்தில் பேருதவி செய்வதாகச் சொல்கிறார். கம்பு, தினை,சாமை போன்ற சிறு தானியங்கள் பயிடுகிறார் 6 ஏக்கரில் பழமரங்கள் வைத்துள்ளார்.வாழை மட்டும் பயிரிடுவதில்லை,வாழைப் பழங்களின் வாசனைக்கு யானைகள் வந்து பயிர்களை அழித்துவிடுமாம்.கிஷோர் இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் தீவிர ரசிகர். விவசாயத்திற்கு_உயிர்கொடுப்போம்‬. விஷ குளிர்பானத்தை வேரறுப்போம்.