”அமெரிக்காவைக் கதறச் செய்யுங்கள்!” ரஷ்யாவிடம் ஈரான் ஜனாதிபதி வேண்டுகோள்!

(எஸ். ஹமீத்.)

”சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராகக் குண்டு வீசிய அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்துக் கதறச்செய்யுங்கள். தமது நடவடிக்கைக்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அமெரிக்காவும் வருந்தக் கூடிய நிலையை ஏற்படுத்துங்கள்.” மேற்கண்டவாறு ரஷ்யப் பிரதமர் விளாதிமிர் புட்டினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி.

(“”அமெரிக்காவைக் கதறச் செய்யுங்கள்!” ரஷ்யாவிடம் ஈரான் ஜனாதிபதி வேண்டுகோள்!” தொடர்ந்து வாசிக்க…)

Syria: UN Mission Report Confirms that “Opposition” Rebels Used Chemical Weapons against Civilians and Government Forces

(By Carla Stea, Global Research, April 08, 2017)

There is no basis to the Trump Administration’s accusations that the government of Bashar al Assad was involved in deliberately triggering a chemical weapons attack with a view to killing Syrian civilians. This December 2013 article by Global Research’s Correspondent Carla Stea at UN Headquarters confirms that the “Opposition” rebels were in possession of chemical weapons. According to the UN mission report, Syrian soldiers as well as civilians were the target of chemical weapons attacks led by opposition rebels.

(“Syria: UN Mission Report Confirms that “Opposition” Rebels Used Chemical Weapons against Civilians and Government Forces” தொடர்ந்து வாசிக்க…)

ஈக்குவடோர்: இன்னொரு லெனினின் வருகை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நாடுகள் அளவில் சிறியதாய் இருந்தாலும் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் பிராந்தியத்தையே திரும்பிப் பார்க்க வைத்துவிடும். தன்னளவில் அரசியல் ரீதியான கவனம்பெறுவதற்கு, நாட்டின் நிலப்பிரதேசத்தின் அளவோ சனத்தொகையின் அளவோ முக்கியமல்ல என்பதைப் பல உதாரணங்கள் தொடர்ந்தும் நிறுவியுள்ளன. அரசியலில் ‘அலை’ ஒரு முக்கியமான குறிகாட்டி. குறித்த ஒரு திசைவழியில் அரசியல் அலை வீசத் தொடங்குகின்ற போது, அது நாட்டின் எல்லைகளைக் கடந்து வீசும். அவ்வாறான ஒரு சூழலில் அவ்வலைக்கு எதிராகப் பயணித்தல் மிகக் கடுமையான காரியம். அதைச் செய்ய இயலுமானவர்கள், பல தருணங்களில் உலக அரங்கின் எதிர்காலத்தின் பாதையைச் செதுக்க வல்லவர்கள்.

(“ஈக்குவடோர்: இன்னொரு லெனினின் வருகை” தொடர்ந்து வாசிக்க…)

உணவு விஷமான விவகாரம்: பாதித்தோர் எண்ணிக்கை 1,005ஆக உயர்வு

அம்பாறை, இறக்காமம், வாங்காமம் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக சுகவீனம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,005ஆக உயர்வடைந்துள்ளது என, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.    வாங்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கந்தூரி வைபவத்தையிட்டு, கடந்த புதன்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. இதன்போது, உணவு ஒவ்வாமையால் 950 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 3 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மேலும் 55 பேர், வைத்தியசாலைகளில் சனிக்கிழமை (8) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர், அம்பாறை பொது வைத்தியசாலையிலும் இன்னுமொரு பகுதியினர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போதைய நிலையில், அம்பாறை பொது வைத்தியசாலையில் 18 பேரும், இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் 25 பேரும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 35 பேரும், மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 27 பேருமென 105 பேர் மட்டுமே, தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதேவேளை, இந்தச் சம்பவத்தையடுத்து, கந்தூரிக்காக சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்களில் சமையற்காரர்கள் இருவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டனர்.

 

சிரியாவை மீண்டும் தாக்கினால் கடும் விளைவுகள் ஏற்படும் அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

சிரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவின் அல்-சாய்ரத் விமானப் படை தளத்தை குறிவைத்து அமெரிக்க கடற்படை நேற்றுமுன்தினம் 59 டோமாஹாக் ஏவுகணைகளை வீசியது. இதில் அல்-சாய்ரத் விமான தளம் கடுமையாக சேதமடைந்தது. 6 வீரர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

(“சிரியாவை மீண்டும் தாக்கினால் கடும் விளைவுகள் ஏற்படும் அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி (ஏப்ரல் 12) நடைபெறவிருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி, தேர்தல் ஆணையர்கள் ஓ.பி.ராவத், ஏ.கே.ஜோதி ஆகியோர் தேர்தல் ரத்து உத்தரவில் கையெழுத்திட்டனர்.

(“பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

மரத்துப்போன மனிதம்! தொடரும் வன்மம்.?

அண்மைக்காலமாக எம்மவரிடையே விரும்பத்தகாத, தவிர்க்ககூடிய செயல் ஒன்று, அருவருக்கத்தக்க விதமாக பதிவேறுகின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தம்மோடு வாழ்ந்து மறைந்தவரை  நினைவு கூரல் மனித பண்புமட்டுமல்ல, அது நாலுகால் நன்றி உள்ள பிராணிக்கும் பொருந்தியதால் தான், ஹிஸ் மாஸ்டர்ஸ் வொயிஸ் HMV (His Masters Voice) என்ற இசைத்தட்டு குறியீடே உருவானது.

(“மரத்துப்போன மனிதம்! தொடரும் வன்மம்.?” தொடர்ந்து வாசிக்க…)

திருமதி நேசம்மா செபரெத்தினம் அவர்கள் காலமானார்.

அமரர் வித்துவான் செபரெத்தினம் அவர்களின் அன்பு மனைவி திருமதி நேசம்மா செபரெத்தினம் அவர்கள் , ஏப்ரல் 6ம் திகதி, நேற்று இரவு Scarborough, ரொறொண்டோவில், Canada காலமானார். 

திருமதி நேசம்மா செபரெத்தினம் அவர்கள் மட்டக்களப்பு திருப்பளுகாமத்தை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டு, தான் பிறந்த கிரமத்தில் நீண்ட காலம் ஆசிரியையாகக் கடமையாற்றியவராவார்.

தனது கணவர் அமரர் செபரெத்தினம் ஐயாவின் இலக்கியப்ப் பணிக்கு பக்க பலமாக விளங்கிவராவார்.

அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலிகள்.
அவர்தம் குடும்பத்தினரின் துயரில் பங்கெடுப்போம்.

Viewing: Friday, April 14th 5:00- 9.00 pm
Viewing: Saturday, April 15th 9:00- 10:00 am
Service: Saturday 10:00- 11:00 am
Chapel Ridge Funeral Home
8911 Woodbridge Ave- Markham

Funeral: Saturday 11:00- 12:00
Christ the King Cemetery
7770 Steels Ave E, Markham, ON L6B 1A8
Markham

தொடர்புகளுக்கு:
416-809-4338 (நாளோ – மகள்)
416-697-1321 (போதகர் ஜெயராஜா)
416-779-5589 (போதகர் மில்ரன்)

வளைகுடாவில் மீண்டும் ஆட்டம் தொடங்கிவிட்டது

(சாகரன்)
 
தந்தை அல் அசாத்தின்(Hafez al-Assad) ஆட்சியில் சமாதான பூங்காகவும் தனது நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள் பலதும் இலவசமாகவும் வழங்கி நல்லாட்சி நடந்து வந்ததே சிரிய வரலாறு. கூடவே உலகெங்கும் விடுதலை வேண்டி நிற்கும் ஒடுகப்பட்ட மக்களின் விடுதலைக்கான தார்மீக ஆதரவை வழங்கி வந்ததும் இதே சிரியா. குறிப்பாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கும் அகதி வாழ்விற்கும் பக்கபலமாக நின்று உலகில் இன்றுவரை பாலதீனம் என்ற நாட்டையும் பாலஸ்தீன மக்களின் இருப்பை உறுதி செய்வதில் சிரியாவின் பங்கு மகத்தானது. சோவியத் யூனியனின் உடைவிற்கு 6 மாத காலத்தின் பின்பு தந்தையின் பொறுப்பை தனையன் ஏற்றுக்கொண்டு தந்தை வழியில் தனது ஆட்சிப் பயணத்தை தொடர்ந்தார்.

(“வளைகுடாவில் மீண்டும் ஆட்டம் தொடங்கிவிட்டது” தொடர்ந்து வாசிக்க…)

கனடிய  அரசியல் கட்சிகளை  நாறடிக்கும் தமிழர்கள்

தமிழர்களில் சிலர் சென்ற இடங்களில் எல்லாம் தம் கைவரிசையை காட்ட தவறுவதில்லை. அவர்களை  சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துவிட்டு கறிவேப்பிலை போல் தூக்கி எறியவும் தயங்கிய தில்லை. குறிப்பாக கட்சி தலைமைத்துவ போட்டிகளின் போதும் கட்சி நியமன தேர்தல்களின் போதும் கட்டுக்கட்டாக உறுப்பினர்களை சேர்ப்பதில் தமிழருக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது கனடிய மைய அரசியல் வாதிகளுக்கு  தெரிந்ததே.

(“கனடிய  அரசியல் கட்சிகளை  நாறடிக்கும் தமிழர்கள்” தொடர்ந்து வாசிக்க…)