ஈழத்தமிழர்கள் எனும் புலிக்குட்டிகள்

(Kiri Shanth)
அண்மையில் சகோதரி ஒருவரின் கலங்கடிக்கும் கண்ணீர் கொட்ட வைக்கும் வாய் மூடவைக்கும் அதிர்ச்சியளிக்கும் புல்லரிக்கும் வெறி கொள்ள வைக்கும் பேச்சைக் கேட்க வேண்டி நேர்ந்தது. அதற்கு காரணம் அள்ளுக்கொள்ளையாக ஈழத்தமிழர்கள் என்றாலே கண்ணீர் வடிக்கும் கும்பலும் அதை வைத்து காசு பார்க்கும் கும்பலும் , இன்னும் சில அப்பாவி நண்பர்களும் அந்தப் பேச்சை தாறு மாறாக பகிர்ந்துகொண்டிருந்தமை தான்.

(“ஈழத்தமிழர்கள் எனும் புலிக்குட்டிகள்” தொடர்ந்து வாசிக்க…)

வரலாற்றுப் பதிவுகள்:

மரணத்தை கொண்டாடும் மனநிலையை தவிர்ப்போம்! மனித நேயத்தை வளர்போம்!!

(சாகரன்)

கடந்த வாரம் கந்தன் கருணைப் படுகொலை பற்றிய பதிவொன்றை மேற்கொண்டிருந்தேன். இதற்கு கிடைத்த ஆதரவு எதிர்வினைகள் என்னை தொடர்ந்தும் எழுதத் தூண்டியிருக்கின்றது. ஈழவிடுதலை அமைப்புக்களிடையேயான முரண்பாடு நட்பு முரண்பாடே ஒழிய பகை முரண்பாடு அல்ல என்பதை ஏற்றுக்கொண்டதனாலேயே சகோதரப்படுகொலைக்கு எதிரான பாசறையில் தொடர்ந்து பொது வெளியில் வேலை செய்து வருகின்றேன். இதனை இன்றும், இன்னமும் இறுகப் பற்றி வருகின்றேன் ஒரு மனிதனின் உயிர் வாழ்தல் என்ற மனிதாபிமான எதிர்பார்பை பகைவர் புலத்திலும் சீர்தூக்கிப் பார்க்கும் மனப் பக்குவத்தை 40 வருடங்களுக்கு முன்பு மக்களின் வடுதலைக்காக புறப்பட்ட நாட்களிலேயே எனக்குள் வளர்த்துக் கொண்டேன். இது நான் நம்பும், கைகொள்ளும் இடதுசாரி சிந்தனையில் இருந்து உருவானது.

(“வரலாற்றுப் பதிவுகள்:” தொடர்ந்து வாசிக்க…)

‘கூட்டமைப்பை ஏமாற்றுவது போல மக்களை ஏமாற்ற முடியாது’ – கருணா

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏமாற்றுவதைப்போல் நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. நாட்டில் இனிமேல்தான் நல்லாட்சி ஏற்படப்போகின்றது என மீள் குடியேற்றத்துக்கான முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் பட்டதாரிகள் உட்பட பல்வேறு தரப்பினர் மேற்கொண்டு வரும் பல்வேறு போராட்டங்கள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டார்.

(“‘கூட்டமைப்பை ஏமாற்றுவது போல மக்களை ஏமாற்ற முடியாது’ – கருணா” தொடர்ந்து வாசிக்க…)

விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் தமிழகத்தில் இன்று பொது வேலைநிறுத்தம் :திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

ரயில், பஸ் மறியல் போராட்டமும் நடத்த முடிவு

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங் களின் கூட்டியக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது. இதற்கு திமுக, காங்கிரஸ் அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) உள்ளிட்ட கட்சிகள், வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

(“விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் தமிழகத்தில் இன்று பொது வேலைநிறுத்தம் :திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு” தொடர்ந்து வாசிக்க…)

உண்மையை அறியுங்கள் உண்மையையே கூறுங்கள்.

அன்புள்ள சுமந்திரன் அவர்களுக்கு,

எனது இச்சிறிய கடிதத்துக்கு மன்னிக்கவும் அன்றேல் இது பல பக்கங்களுக்கு sangary6நீடித்திருக்கும். 1959ம் ஆண்டு கொழும்பு மாநகரசபை வேட்பாளனாக அரசியலில் ஈடுபட்டபோது நீங்கள் பிறந்திருக்கவில்லை. 1991ம் ஆண்டு சட்டத்தரணியாக நீங்கள் சத்தியபிரமாணம் செய்தபோது அத்துறையில் நான் 27 ஆண்டுகளை கடந்துவிட்டேன். நான் ஒரு செல்வந்தன் அல்ல. பெரிய ஒரு குடும்பத்தில் உறுப்பினர் ஆகையால் அன்று எஸ்.எஸ்.சி இன்றைய க.பொ.த(சா.தரம்) வகுப்புக்கு மேல் எனது பெற்றோரால் கல்வியை தர முடியவில்லை. ஓர் ஆரம்ப பாடசாலையில் ஆசிரியனாகவும், பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தி கிடைத்த வருமானத்திலேயே சொந்த முயற்சியால் சட்டக்கல்லூரியில் கல்வி கற்க முடிந்தது. போதியளவு வருமானம் இன்மையால் அவசிய தேவைகள் பலவற்றைக்கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. எனது அறிவை நூல் நிலையங்கள் மூலமாக பெருக்கிக் கொண்டேனே ஒழிய சட்டப்புத்தகங்கள் ஒன்றையேனும் என்னால் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ள முடியவில்லை.

(“உண்மையை அறியுங்கள் உண்மையையே கூறுங்கள்.” தொடர்ந்து வாசிக்க…)

விவசாயிகளுக்கான முதல் போராட்டத்தை 60 ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுத்த நாராயணசாமி நாயுடு

தங்களின் ஜீவாதார பிரச்சினை களுக்காக கடந்த 18 நாட்களுக்கும் மேலாக தமிழக விவசாயிகள் நடத்தும் நூதன போராட்டங்களால் தலைநகர் டெல்லியில் பதற்ற மான சூழ்நிலை உருவாகிக் கொண் டிருக்கிறது. இந்த வேளையில், 60 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயி களுக்கான முதல் உரிமை போராட் டத்தை நடத்தியவர் கோவையை அடுத்த செங்காலிபாளையத்தைச் சேர்ந்த விவசாயத் தோழர் நாராய ணசாமி நாயுடு. அவரைப் பற்றி நினைவு கூர்கிறார்கள் அவரோடு போராட்டக் களங்களில் இருந்தவர் கள்.

(“விவசாயிகளுக்கான முதல் போராட்டத்தை 60 ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுத்த நாராயணசாமி நாயுடு” தொடர்ந்து வாசிக்க…)

கந்தன் கருணைப் படுகொலைகள்

(சாகரன்)

30 விநாடிகளில் 60 இற்கும் மேற்பட்ட உயிர்க் கொலைகள். உலகின் பிரசித்தி பெற்ற ஆயுதம் SMG (ஏகே 47, (ஏனையவர்களின் தகவல் அடிப்படையில் திருத்தப்பட்டுள்ளது) இனால் தொடர்ச்சியான குண்டுப் பாய்ச்சல்கள். தொடர்ந்தாற்போல் குற்றுயிராய் இருந்தவர்கள், தப்பி ஓடி மதகிற்குள் புகுந்து மறைந்தவர்களை குண்டு வீசி மரணத்தை உறுதி செய்த கொலைகள். எல்லாம் 30 நிடத்திற்குள் முடிக்கப்பட்டுவிட்டன. பிணக் குவியலுக்குள் பிணம் போல் இரத்த வெள்ளத்திற்குள் முழ்கி அசையாமல் இருந்த ஒருவர் மட்டும் உயிர் தப்பிய கோர நிகழ்வு. இவரின் வாக்கு மூலமும் அதனைத் தொடர்ந்த பதிவுகளும் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் குறிப்பீடுகள் சம்பவத்தை உறுதி செய்திருக்கும் பதிவுகளும் நடைபெற்று 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. மனித உரிமை அமைப்புக்களோ ஐ.நா. சபையே ஏறெடுத்துப் பார்க்காத படுகொலைகள் இது. வெலிக்கடைப் சிறைப்படுகொலையை விஞ்சிய வீச்சுப் படுகொலை. கறுப்பு ஜுலையை பின்னுக்கு தள்ளிய மார்ச் 30 படுகொலை அது கந்தன் கருணைப் படுகொலை. எம்மவர்களால் எம்மவர்கள் மீது எமது மண்ணில் எமது சுற்றத்தவர் பார்த்திருக்க நடைபெற்ற கைதிகளின் படுகொலை இது.

(“கந்தன் கருணைப் படுகொலைகள்” தொடர்ந்து வாசிக்க…)