கரையோர மாவட்டமும் தனி அலகும் தெளிய வேண்டிய மயக்கங்கள்

(மொஹமட் பாதுஷா)

மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருப்பவர்களுக்கும் கூட, சில வேளைகளில் அந்தமொழிகளில் இருக்கின்ற சில சொற்களின் அர்த்தங்கள் விளங்காமல் போவதுண்டு. ஒரே மாதிரியான இரு சொற்கள் மயக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. அதுபோல, முஸ்லிம் மக்களால் கோரப்படுகின்ற கரையோர மாவட்டம் மற்றும் முஸ்லிம் தனியலகு ஆகியவை தொடர்பிலும் பெருமளவானோர் குழம்பிப் போய் இருக்கின்றனர். இரண்டினதும் ஆழ அகலங்கள் என்ன? அவற்றுக்கிடையான வித்தியாசங்கள் என்ன? என்பது பற்றி, ஒருசில மக்கள் பிரதிநிதிகளும் விளங்காத்தனமாக அறிக்கை விடுவதைக் காண முடிகின்றது.

(“கரையோர மாவட்டமும் தனி அலகும் தெளிய வேண்டிய மயக்கங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கில் பூரண ஹர்த்தால்

அநுராதபுரம் சிறையில் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று, அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு மாற்றுமாறும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படவேண்டுமெனவும் கோரி வடக்கு மாகாணத்தில் இன்று (13) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. போக்குவரத்து சேவைகள், வர்த்தக நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“யுனெஸ்கோவில்” இருந்து அமெரிக்கா, இஸ்ரேல் விலக தீர்மானம்

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவில் இருந்து அ​மெரிக்கா விலகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்தே இவ்வாறு விலக தீர்மானித்துள்ளது. அடுத்த வருடம் ( 2018) டிசம்பர் இறுதியில் யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளும் எனவும், அதுவரை அமெரிக்கா முழு உறுப்பினராக இருக்கும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என்றும் கூறியுள்ளது. யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்ததையடுத்து இஸ்ரேலும் விலகப் போவதாக அறிவித்துள்ளது. எனினும் அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து யுனெஸ்கோ கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் அதிக அளவில் பிழையான உணவு பழக்கத்தை முஸ்லிம்களே கொண்டுள்ளனர்

மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சி தலைவர் கவலை!
கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரை ஏனைய இனத்தவர்களை காட்டிலும் அதிக அளவில் முஸ்லிம் மக்களே பிழையான உணவு பழக்கத்தை கைக்கொண்டு நோயாளிகளாக மாறுகின்றனர் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர் கட்சி தலைவர் எம். எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

(“கிழக்கில் அதிக அளவில் பிழையான உணவு பழக்கத்தை முஸ்லிம்களே கொண்டுள்ளனர்” தொடர்ந்து வாசிக்க…)

இறக்காமம் பிரதான வீதிக்கு காபட் இடுவதற்கான ஆரம்ப பணி ஆரம்பம்

இறக்காமம் பிரதான வீதிக்கு காபட் இடுவதற்கான ஆரம்ப வேளைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (13) ஆரம்பித்து வைத்தார். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 86 மில்லியன் ரூபா செலவில் இப்பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதில் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர், முன்னால் மாகாண சபை உறுப்பினர்கள், இறக்கமா பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மற்றும் மத்திய குழு உறுப்பினர் கட்சியின் முக்கிஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏனைய அபிவிருத்தி திட்டங்களின் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நடும் வைபவம் பிற்போடப்பட்டுள்ளது.. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜப்பார் அலியின் திடிர் மரணத்தையடுத்து பிற்போடப்பட்டுள்ளது

குர்திஷ் பொதுசன வாக்கெடுப்பு: தனிநாடு என்ற சூதாட்டம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஒடுக்குமுறைக்காளாகிய சமூகங்கள் போராடுகின்றபோது, அதன் இறுதி இலக்காகத் தனிநாட்டைக் கொள்வது இயல்பு. இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்த, கொலனியாதிக்க விடுதலைப் போராட்டங்கள், பலநாடுகள் விடுதலையடையவும் புதிய நாடுகள் தோற்றம் பெறவும் உதவின. கெடுபிடிப்போரின் முடிவு, நாடுகள் பிரிக்கப்பட்டு, புதிய நாடுகள் பலவற்றின் தோற்றத்துக்கும் வழிவகுத்தது. புதிய நாடு இவ்வாறுதான் தோற்றம் பெறவேண்டுமென்ற சூத்திரமெதுவும் இல்லை.

(“குர்திஷ் பொதுசன வாக்கெடுப்பு: தனிநாடு என்ற சூதாட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

முட்டை கோழி பண்ணையாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு தர வேண்டும்!

 

அம்பாறை மாவட்ட கோழி வளர்ப்போர் சம்மேளன தலைவர் சுஹீட் உருக்கம்

முட்டை கோழி பண்ணையாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்க எதிர்வரும் வரவு – செலவு திட்டம் மூலமாகவேனும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அம்பாறை மாவட்ட கோழி வளர்ப்போர் சம்மேளன தலைவர் ஏ. சி. எம். சுஹீட் கோரி உள்ளார்.

(“முட்டை கோழி பண்ணையாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு தர வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

பிரின்ஸ் காசிநாதர் அவர்கள் வாழும் போதே நினைவு மீட்கும் என் பதிவு.

என்ன மாதவம் செய்தேன் இத்துணை பெரியவர்களுடன் நானும் சரிசமமாக அமர என என்னை அன்று எண்ண வைத்த தருணம் நான் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண பேரவை தலைவராக தேர்வான தினமே. எமை அவையத்து முந்தி இருக்க செய்தல் தந்தை செயல் என்பதை எனக்கு செய்தது நான் இணைந்து செயல்ப்பட்ட நாபா தலைமையிலான ஈ பி ஆர் எல் எப் கட்சி என்பதை என்றும் மறவேன்.

(“பிரின்ஸ் காசிநாதர் அவர்கள் வாழும் போதே நினைவு மீட்கும் என் பதிவு.” தொடர்ந்து வாசிக்க…)

‘புதிய அரசமைப்புக்கு சவாலான ஆதரவு’ – ஜே.வி.பி

“சவாலுக்கு மத்தியிலும் புதிய அரசியலமைப்புக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கும்” என, ஜே.வி.பியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டில்வின் சில்வா தெரிவித்தார். யாழ்ப்பாணம் அரியாலையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

(“‘புதிய அரசமைப்புக்கு சவாலான ஆதரவு’ – ஜே.வி.பி” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணி தேடும் புதிய தலைவர் யார்?

(புருஜோத்தமன் தங்கமயில்)

எதிர்வரும் 2018, தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப் போகின்றது. முதலாம் காலாண்டுப் பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களோடு ஆரம்பிக்கும் தேர்தல் பரபரப்பு, மாகாண சபைத் தேர்தல்கள் வரையில் நீடிக்கும் வாய்ப்புண்டு. அந்தக் காலப்பகுதிக்குள், புதிய அரசமைப்பு மீதான, பொது வாக்கெடுப்புக்கான சாத்தியமும் காணப்படுகின்றது. தமது அரசியல் தலைமைத்துவத்தை, வாக்கு அரசியல் மூலமாகத் தேடிக்கொள்ள நினைக்கும் சமூகமொன்றில், தேர்தல்கள் செலுத்தும் தாக்கம் மிகப்பெரியது. அப்படியான கட்டத்தை தென்னிலங்கை 1950களின் ஆரம்பத்திலேயே அடைந்துவிட்டது.

(“கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணி தேடும் புதிய தலைவர் யார்?” தொடர்ந்து வாசிக்க…)