முஸ்லீம் சமூகம் இன்று சிந்தித்து கடமையாற்ற வேண்டும்

(Spartacusthasan Dasan)

இம்மாதிரியான பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போது அதிகமான இலங்கை முஸ்லீம் புத்திஜீவிகள் (ஆண்கள்) வளக்கமான ஒரு ரெம்பிலேர்ரையே (template) பதிலையே பாவிப்பார்கள் இம்முறையும் அதையே பாவிக்கிறார்கள். ஆனால் சகோதரிகள் Fathima Majitha அவர்களினதும் ஸர்மிளா செயித் அவர்களினதும் பதிவுகளைப் பாருங்கள்.

‘அரசும் மேலைத்தேயமும் இயக்கும் பொம்மைகளாக நம் இளைஞர்களை இழுத்துச் சென்ற காரணிகளைத் தேட ஏன் தயங்குகிறோம்?’

2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி பார்ப்பது ”ஹராம்” என்று பிரச்சாரம் செய்யத்தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. வீடு வீடாகச் சென்று அன்டனாக்களை உடைப்பது, சீடி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து, கடைகளை எரிப்பது என்று வன்முறையாக மாறியது.

வலி ரணமானது

“வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே..”

“இங்லாந்து வாழ் தமிழ் நண்பர்களிடம் சொல்லிச்சென்றேன் உங்கள் நாட்டை பார்க்க போகிறேன் என்று. குடும்பத்துடன் சென்றேன் தனிமையில் வருகிறேன்.

என் மனதும் என் நினைவும் அவர்களாகவே இருக்கபோகிறது. இலங்கை வரும்போது விமான இருக்கை அருகே இன்பத்துடன் இருந்து கதைத்தவர்கள், இங்லாந்து திரும்பும் போது விமான இருக்கை வெறுமனே இருக்க வேதனைப்பட போகிறேன்….

என் நிலை அறிந்த சகோதரர்கள், நண்பர்கள் பெற்றோர்கள், விமானநிலையத்தில் காத்திருக்க அவர்களுக்கு என்ன சொல்வேன்! வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே…

மனைவியின் அன்பு என்னை அழைக்காது பிள்ளைகளின் பாசம் என்னை அழைக்காது. என் தனிமை மட்டும் அவர்களின் அனைத்திலும் சிந்திக் கிடக்கப் போகிறதே..

என் பிள்ளைகளின் பள்ளி நண்பர்களுக்கு என் மனைவியின் சக தோழிகளுக்கு என்ன சொல்லப்போகிறேன்.

இனிவரும் காலத்தில் என் உயிர்களின் நினைவையும், அதன் வேதனையையும் மறக்க என் இருப்பிடத்தை மாற்றினாலும் அவர்கள் இறந்த இடத்தை நான் மறவேன்… 
நன்றி இலங்கை. #Srilanka #EasterSundayAttackLK

நன்றி முகப்புத்தகம் – manmathanbasky

உயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்

(புருஜோத்தமன் தங்கமயில்)
சித்திரைப் புத்தாண்டுக் காலத்தையொட்டி, ஆரம்பித்த தொடர் விடுமுறைக் காலம், உயிர்த்த ஞாயிறுக் கொண்டாட்டங்களோடு முடிவுக்கு வரவிருந்தது. ஆனால், உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளை மக்கள் முடிப்பதற்கு முன்னரேயே, நாடு, பேரிழப்பைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது.

குண்டுகளுடன், ‘உலகத்துக்கு ஒரே கடவுள்’ என எழுதப்பட்ட வாகனங்கள் நடமாட்டம்

வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இரண்டாவது தாக்குதல்?

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் இரண்டாவது குழு குண்டுத் தாக்குதல் ஒன்றை முன்னெடுக்கத் தயாராகி வருவவதாக இந்திய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக “ ஹிந்துஸ்தான் டைம்ஸ்” பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நைஜீரியா பிரஜைகள் உட்பட 9 பேரிடம் விசாரணை

யாழ்ப்பாணத்தில், நைஜீரியா பிரஜைகள் இருவர் உட்பட ஒன்பது நபர்கள், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். யாழ் நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கி இருந்தவர்கள், இன்றைய தினம் மதியம் யாழ் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் நைஜீரியா நாட்டு பிரஜைகள் இருவர் உட்பட ஒன்பது பேரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து அவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவர்களின் ஆவணங்களையும் பரிசோதித்து வருகின்றனர்.

‘நியூசிலாந்துத் தாக்குதலுக்னே இலங்கையில் பதிலடி’

இலங்கையின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட திடீர் வெடிகுண்டுத்தாக்குதல், கடந்த மாதம் நியூசிலாந்து, க்ரைஸ்சேர்ச் பகுதியிலுள்ள முஸ்லிம் பள்ளியொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே முன்னெடுக்கப்பட்டிருப்பதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தண, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நியூசிலாந்திலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது, 50 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.