இலங்கை: கொரனா செய்திகள்

ஓகஸ்ட் 7ஆம் திகதி வரையிலும் கொரோனா ​தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் எண்ணிக்கை தொடர்பிலான புள்ளிவிவரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் மொத்த சனத்தொகை, 2 கோடி​யே 19 இலட்சத்துக்கு 19ஆயிரம் பேர். அதில், 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 இலட்சத்துக்கு 45ஆயிரத்து 788 ஆவர்.

கொரோனா மரணங்கள்; காரணம் சொன்ன ரணில்

தற்போது ஏற்படும் கொரோனா மரணங்களுக்கு கொரோனா ஒழிப்பு செயலணியே காரணம் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். வீடியோ தொழிநுட்பம் மூலம் கொழும்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டபோதே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார்.

’இந்திய மீனவர்களால் இரண்டு கோடி ரூபாய் நட்டம்’

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறை காரணமாக, தமது வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றமையினால், எந்த வழியிலேனும் இந்தியக் கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

ஓ! மானே மானே உன்னைத்தானே.. எதிர்காலம்?

(எப். முபாரக்)

இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களை வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகள் பார்வையிடுவர். இதன்மூலம்  பெருமளவான அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரக்கூடிய ஒரு துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.  கடந்த வருடத்திலிருந்து, கொடிய நோயான கொவிட்- 19 பெருந்தொற்று நோயின் தாக்கம் காரணமாக, நாட்டின் சுற்றுலாத்துறை முடங்கியதோடு, தற்போது கொஞ்சம் கொஞ்சமாகச் செழித்து வருகின்றது.

ஸ்ரீசபாரத்தினத்தை விடுதலைப் புலிகளே கொன்றனர் – செல்வம் அடைக்கலநாதன்

ஸ்ரீசபாரத்தினத்தினை விடுதலைப்புலிகளே கொன்றனர்.  வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும், தேசத்தின் விடுதலைக்காக விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.  

மட்டக்களப்பில் கண்டன பேரணி

கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்தும் இலவச கல்வியில் இராணுவத்தின் தலையீட்டைக் கண்டித்தும் மட்டக்களப்பில், இன்று (05) பேரணி நடைபெற்றது. இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணியை  முன்னெடுத்தன.

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் — பகுதி 3

(அ. வரதராஜா பெருமாள்)

இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சி அல்லது தேக்க நிலையைப் பற்றிய ஆய்வுகளும், நாட்டினுடைய சமூக பொருளாதார கட்டமைப்பு மற்றும் அது கொண்டிருக்கும் உற்பத்தி உறவுகள் பற்றிய ஆய்வுகளும், சர்வதேச பொருளாதார கட்டமைப்பில் இலங்கையின் அரசியல் பொருளாதாரம் இணைந்திருக்கும் தன்மைகள் பற்றிய ஆய்வுகளும் பெரும்பாலும் தேசிய பொருளாதாரம் பற்றிய பருமட்டான அறிவியல் ஆய்வுகளாகவே அமையும். ஆனால் மொத்த தேசிய பொருளாதாரத்தில் தேச மக்களின் பொருளாதாரம் பற்றிய ஆய்வுகளின் மூலமே தேச மக்களின் உண்மையான பொருளாதார வாழ்வின் நிலைமைகளையும் அரசுக்கும் பரந்தபட்ட குடிமக்களின் நலன்களுக்கும் இடையேயென அரசியல் பொரளாதார நெருக்கடிகளும் மற்றும் முரண்பாடுகளும் வெளிப்படும். இவை தொடர்பான விரிவான விபரிப்புகளையோ விவாதங்களையோ இக்கட்டுரையில் மேற்கொள்வது இங்கு நோக்கமல்ல. மாறாக, சுருக்கமாக இலங்கைவாழ் மக்களின் சம்பளம் மற்றும் கூலி வழியிலான வருமானங்களுக்கும் அதைக் கொண்டு அவர்கள் பெறுகின்ற பொருளாதார வாழ்வின் நிலைமைகளையும் அடையாளம் காட்டுவதே இக்கட்டுரைப் பகுதியின் நோக்கமாகும்.

‘சமூக நீதி’ கோரிக்கையாக மாற வேண்டிய நீதிக்கான கோஷங்கள்

(மயில்வாகனம் திலகராஜா – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

கடந்த இரண்டு வாரங்களும் மலையகத்தில் மட்டுமல்லாது மலையகத்துக்கு வெளியேயும் இலங்கையில் ‘நீதி’ கோரிய கோஷங்கள் எழுந்திருந்தன. அந்த கோஷத்தை முன்னிறுத்தச் செய்தது ஒரு சிறுமியின் உயிர். அந்த சிறுமியின் துர்பாக்கிய நிலை மரணத்துக்கு நீதி வேண்டிய கோஷங்களுக்கு மத்தியில் ‘அரசியல்’ நிகழ்ச்சி நிரல்களும் தம்மைப் பிணைத்துக்கொண்டன என்பது வெளிப்படை. ஆனால், அதனையும் தாண்டிய சமூக ‘உணர்ச்சி’ நிலை மலையகத்தில் ஆத்மார்த்தமாக மேம்பட்டு நின்றது.

மாத்தளை கார்த்திகேசு

கலையும்¸ இலக்கியமும் தன் வாழ்க்கையின் ஒரு பகுதி என வாழ்ந்துக் காட்டிய கார்த்தி இன்று எம்மிடம் விடை பெற்றுச் சென்று விட்டார் மேடை நாடகக் கலைஞனாக வானொலி கலைஞனாக சினிமா கலைஞனாக இலக்கியக்காரனாக இவை யாவற்றுக்கும் மேலாக சக மனிதனோடு நெருக்கமாக வாழ்ந்துக் காட்டிய பண்பாளன்!

முகமது அலி ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசியெறிந்தது ஏன்?

சொந்த நாட்டில் வசிக்கும் கறுப்பின மக்களை இழிவாக நடத்தும் அமெரிக்கா, பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் வியட்நாமுக்கு சென்று யாரைக் காப்பாற்றப் போகிறது என்று கேள்வி எழுப்பியவர் குத்துச் சண்டை வீரர் முகமது அலி.