நான்கு நாடுகளை அவசரமாக அழைக்கிறார் செல்வம் எம் .பி

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தொடருமானால் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என்பது எமது பிரதான கோரிக்கையாக இருக்கும் என்று தெரிவித்த வன்னி மாவட்ட பாராளுமன்ற செல்வம் அடைக்கலநாதன், இல்லாவிட்டால் எம்மை வைத்து தங்கள் நலனை பார்க்கும் பேச்சாக அமைந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

SL இல் INR ஐ சர்வதேச நாணயமாக நியமித்தல்

ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி, வறுமை போன்ற சூழல் நிலவுகிறது என்றால் அந்நாட்டு அரசிடமும், மக்களிடமும் போதிய பணம் இல்லை என்று பொருளாகும். இலங்கையை பொறுத்தவரையில், நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து கொண்டே செல்கின்றது.

கால்நடைகளின் மாதிரிகள் பரிசோதனை

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், கரைதுறைப்பற்று போன்ற பிரதேசங்களில் மண்டோஸ் புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் இதுவரை 800 கால்நடைகள் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த கால்நடைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன 

மான்டஸ் புயலை வென்ற பூங்குழலி

(சாகரன்)


தாழ் அமுக்கமும் உயர் அமுக்கமும் என்ற சீரற்ற அமுக்கங்கள் காரணமாக காற்றும் மழையும் சீரற்று புயலாக அடை மழையாகவும் அடிக்கின்றன.

சுற்றுச் சூழல் வெப்பநிலை ஏற்படும் திடீர் மாற்ற நிகழ்வுகள் இந்த அமுக்க மாற்றத்திற்கு பிரதான காரணம் என்பது இயற்பியலை கற்றவர்கள் பட்டறிவு மூலம் உணர்ந்தவர்கள் புரிந்து கொள்ளப்பட கூடிய ஒன்று.

சீரற்ற காலநிலையால் 165 மாடுகள் இறப்பு

தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள  கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பலகிராமங்களில் 165 க்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் 3 ஆடுகள் என்பன இறந்துள்ளன.

இமாச்சலில் காங்கிரஸ் – பாஜக வாக்கு வித்தியாசம் 0.9%, குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு 12.92% வாக்குகள்!

அகமதாபாத் / ஷிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் பாஜகவைவிட காங்கிரஸ் 0.9% மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. குஜராத்தைப் பொறுத்தவரையில், ஆம் ஆத்மி 12.92% வாக்குகளைப் பெற்றுள்ளது. இவ்விரு மாநிலத் தேர்தல்களின் வாக்கு விகித தரவுகளைப் பார்ப்போம்.

குஜராத்தில் 7-வது முறையாக பா.ஜ.க ஆட்சி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க)  வரலாறு காணாத வகையில் 156 தொகுதிகளில் வென்று, 7-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸுக்கு 17, ஆம் ஆத்மிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

வேலுகுமார் அதிரடி தீர்மானம்

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வேலுகுமார், தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு நேற்று (08) நடைபெற்றது. அதனை  வேலுகுமார் புறக்கணித்திருந்தார்.

காற்று மாசுபாடு படிப்படியாக குறைவு

டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நேற்றைய தினம் பதிவான காற்று மாசுபாட்டுடன் ஒப்பிடுகையில் காற்று மாசுபாட்டின் அளவு தற்போது கணிசமாக குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

விலங்குகளைக் கொன்று குவிக்கும் எலான் மஸ்க்

ஆராய்ச்சி என்ற பெயரில் அதிகளவானவிலங்குகளைக்  கொன்று குவித்து வருவதாக  டெஸ்லா , நியூராலிங் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன்  தலைமை செயற்பாட்டு அதிகாரியுமான  எலோன் மஸ்கின் மீது (Elon musk) புகார் அளிக்கப்பட்டுள்ளது.