இணைந்து செயற்படுவதற்கான கூட்டமே நாளை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில், நாளை (27) காலை 10 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்த, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் ஜீ. எல் பீரிஸ், இக் கலந்துரையாடலானது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அல்லவென்றும் தெரிவித்தார்.

பொது வேட்பாளரை களமிறக்க முயற்சி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை சாராத வேட்பாளர் ஒருவரையே களமிறக்க முயற்சிகள் இடம்பெறுவதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வின்போது, கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நெடுந்தீவை தீவை சுற்றி வரலாம்…

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சோழர் வம்சம், போர்த்துகீச, ஒல்லாந்த, பிரித்தானியர் காலனித்துவ காலத்திலிருந்து சிறந்த வரலாற்றைக் கொண்ட ஒரு அற்புதமான தீவு இந்த நெடுந்தீவாகும்.

‘இராஜினாமா செய்யப்போவதில்லை’

சபாநாயகர் பதவியை தான், இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என, சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் கரு ஜயசூரிய இதுவரை தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என்றும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.

இந்தியாவின் அணுவாயுத அரசியல்

(ஜனகன் முத்துக்குமார்)

இந்தியாவின் அணுசக்தி கொள்கையில் ஒரு புதிய மாற்றத்தை இந்தியாவின் பாதுகாப்பமைச்சரின் அறிக்கை பிரதிபலிக்கிறது. இந்தியா ஏற்கெனவே அதன் விநியோக முறைகளையும், ராடார் திறனையும் பூர்த்தி செய்துள்ளதாக குறித்த அறிக்கை மூலம் தெரிகிறது. இதன் ஒரு பிரதிபலிப்பாகவே தான் இரட்டை நோக்கங்களுடன் செவ்வாய் மற்றும் சந்திரன் பயணங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அண்மையில் ஏவியிருந்தது. இந்நிலை, பாகிஸ்தானில் அணுவாயுதங்கள் உள்ளிட்ட இலக்குகளை இந்திய வான்படை கண்டுபிடித்து சரிசெய்ய முடியும் என்று இந்திய வான்படை தலைவர் கூறுகிறார்.

ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி; சில கேள்விகள்

2020ஆம் ஆண்டுக்குரிய ஜனாதிபதித் தேர்தலில், மூன்றாவது அணியாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தன்னை களமிறக்கியுள்ளது. ஜே.வி.பி, சில சிவில் அமைப்புகளுடன் சேர்ந்து உருவாக்கியுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’யின் ஜனாதிபதி வேட்பாளராக, அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாயநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அறிவிக்க, ஞாயிற்றுக்கிழமையன்று (18), காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், ஏராளமானோர் பங்குபற்றினர்.

ஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள்

(இலட்சுணனன்)

லங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கருத்தாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தனது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ எனப் பெயரிட்டுள்ளது. இச்சூழலில், மக்கள் விடுதலை முன்னணியும் தனது வேட்பாளர் அநுரகுமார எனப் பிரகடனப்படுத்தியுள்ளது.

சிதம்பரத்துக்குத் தடுப்புக் காவல்

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், மோசடி, பணச் சலவையில் பங்கெடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை, தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு, சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கிரீன்லாந்தை விலைபேசல்; நாடுகள் விற்பனைக்கு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
காணிகளும் வீடுகளும் வாங்கி விற்கப்படுவது போல, நாடுகளும் வாங்கி விற்கப்படுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவ்வாறு ஒரு நாட்டையோ, அதன் பகுதியையோ விலை பேசுவதும் விற்கச் சொல்லிக் கேட்பதும், அதற்காகத் தயாரித்திருக்கும் பேரமும் அபத்தமாகத் தெரியுமல்லவா? ஆனால், இன்றைய உலக அரங்கு, அபத்தமும் அவலமும் ஆபத்தும் கலந்த கலவையாய் இருக்கின்றது. இதை மெய்யாக்கும் கதை ஒன்றையே, நாம் இன்று பார்க்கவிருக்கிறோம்.

வரதராஜப்பெருமாள் என் மதிப்புக்குரிய போராளி

(Arun Ambalavanar)
வரதராஜப்பெருமாள் என் மதிப்புக்குரிய போராளி-அரசியல்வாதிகளில் ஒருவர். ஒரு புத்திஜீவி. மிகவும் வறிய குடும்பப்பின்னணியிலிருந்து வந்து சுய படிப்பாலும் சுய முயற்சியாலும் முன்னேறி பல்கலைக்கழக விரிவுரையாளராகி முதல் ஈழத்தமிழரசின் நிறைவேற்று அதிகாரி- முதலமைச்சராக வந்த அவர் கதை ஒரு Fairy Tale ஸ்ரோறி . அவர் ஒரு போராளி இராணுவத்தளபதி அல்ல. அவர்கைகளில் இந்தியப்படைக்காலத்தில் ரத்தம் உண்டான குற்றச்சாட்டுக்களும் இல்லை. தன் பல்கலைக்கழககாலத்தில் சுயமாக ஆங்கிலம் கற்று ஆங்கிலத்தில் வாசித்து ஏட்டுச்சுரைக்காய் மார்க்சியத்தின் குறைபாடுகளை அறிந்தவர். பின் இந்திய வனவாச காலத்தில் ஆங்கிலத்தில் சட்டம் படித்தவர். புலிகள் எல்லா தமிழ் இயக்கங்களையும் “வைபோசாக” கூட்டமைப்புக்குள் கொண்டுவர அதை மறுத்து கொள்கை குன்றாக நின்றவர்.