(புருஜோத்தமன் தங்கமயில்)
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட போது, அதைத் தேர்தல் அரசியலுக்கான ஒரு பிரபலமான கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் நம்பின. அப்போது, கூட்டமைப்புக்குள் பெரும் அதிருப்தியோடு அல்லாடிக்கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப், பேரவையைத் தனக்கான புதிய போக்கிடமாகவே பார்த்தது. ஆனாலும், தேர்தல் அரசியலை மய்யப்படுத்திய எதிர்பார்ப்புகளோ, செயற்பாடுகளோ தங்களிடத்தில் இல்லை என்று, பேரவையில் அங்கம் வகிக்கும் கல்வியாளர்களும் வைத்தியர்களும் வெளிப்படுத்தியிருந்தனர். (“சி.வி. விக்னேஸ்வரன் இன்றைக்குக் கூறப்போவது என்ன?” தொடர்ந்து வாசிக்க…)