27 வது தியாகிகள் தினத்தில் அனைவரும் இணைந்து கொள்வோம்

உலகெங்கும் நடைபெறும் இந்நிகழ்வுகளில் அந்தந்த நாட்டில்வாழும் எமது உறவுகள் போராட்டதிற்காக தம்மை அர்பணித்த போராளிகள் பொது மக்களை நினைவு கூர அணிதிரளுவோம்.
தோழர் தங்க மகேந்திரன் என்ற ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளுடன் எமது அரசியல் வேலைகள் ஆரம்பமானது. ஈழமாணவர் பொது மன்றத்தினூடாக எமது அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்த காலங்களில் கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற வகையில் உயர்தர மாணவர்களுக்கான இலவச கல்வியை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அடுத்ததாக திருகோணமலையில் நாம் ஆரம்பித்திருந்தோம். கிழக்கில் 1978 ஏற்பட்ட சூறாவளி அனர்த்தங்களைத் தொடரந்து இந்த இலவச வகுப்புக்கள் ஆரம்பமானது தம்பலகாமம் கிளிவெட்டி 1ம் நம்பர் என்று பல இடங்களிலும் அரசியல் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. தோழர் சின்னவன் அன்பு முகுந்தன் கைலன் என பன்முகத்தன்மையுடைய தோழர்கள் தமது அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்தனர். தோழர் பீற்ரின் பங்களிப்பை சகல தோழரகளும் அறிவர். தோழர் லிங்கன் போன்ற இளம் தலைமுறையினரும் மகாண சபை காலத்தில் தமது உயிரையும் அர்பணிக்கும் அளவிற்கு செயற்பட்டனர். தோழர் ஜோர்ஜ் சர்வதேச சோசலிச நாடுகளுடனான தனது உறவு மூலம் ஈழவிடுதலைக்கு பலம் சேர்த்தார். வடக்கையும் மட்டக்களப்பையும் இணைக்கும் பாரிய தொர்பாடல்களை மட்டக்களப்பு சிறையுடைப்பு காலங்களிலும் போராட்டத்திற்கான வளங்களை இடம்மாற்றம் செய்வதிலும் திருகோணமலை மாவட்டத்தின் பங்கு அளப்பரியது

’கடமையை மறந்த தமிழ்த் தலைமைகள்’

தற்போது நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்தங்களின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களது கடமைகளைப் புறக்கணித்துள்ளனர் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சி, குற்றஞ்சாட்டியுள்ளது.

(“’கடமையை மறந்த தமிழ்த் தலைமைகள்’” தொடர்ந்து வாசிக்க…)

மூதூரில் நடந்த கொடூரமும் நாமும்

(Gopikrishna Kanagalingam)

இலங்கையின் சுமார் 15 மாவட்டங்களைத் தாக்கியுள்ள வெள்ளம், மண்சரிவுகள் காரணமாக, முழு இலங்கையுமே சோகத்தில் மூழ்ந்திருக்கும் நிலையில், திருகோணமலையின் மூதூர்ப் பகுதியில் இடம்பெற்ற இன்னொரு சோகம், பெருமளவு கவனத்தை ஈர்த்திருக்கவில்லை. பாடசாலை செல்லும் 3 சிறுமிகள், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது தான் அச்செய்தி. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்தில், பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற இந்தச் சிறுமிகளை, பெரியவெளிக் கிராமத்திலுள்ள சிலரே, வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகத் தெரியவருகிறது. இந்தச் சிறுமிகள் அனைவருக்கும், 9 வயதை விடக் குறைவு எனவும் அறிவிக்கப்படுகிறது.

(“மூதூரில் நடந்த கொடூரமும் நாமும்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கைப் பயணி செய்த வேலை; அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்குப் புறப்பட்ட விமானம் ஒன்று இலங்கைப் பயணி ஒருவரின் நடத்தை காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிலே மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(“இலங்கைப் பயணி செய்த வேலை; அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர்களினதும் அவர்களின் தலைவர்களினதும் அவலநிலை

நான் ஒரு அவுஸ்ரேலிய குடிமகன், ஆனால் தற்போது இலங்கையின் உண்மையான நிலையை அறிந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளேன். இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்களுடனும் யாழ் பல்கலைக்கழக அரசியல் அறிவியல்துறை விரிவுரையாளர்களுடனும் கலந்துரையாடியள்ளேன். முப்பது வருட ஆயுத போராட்ட தோல்வியின் பின்னரும் இவர்களின் சிந்தனைகள் செயல்களில் மாற்றம் இல்லை. சிங்கள மக்களின் சனத்தொகையில் ஒப்பிடும் போது உலக தமிழர் ஐந்து மடங்கு, ஆனாலும் இன்று அவலநிலை. தமிழ்த் தலைவர்கள் உண்மையை உணராதவர்கள் அல்லது தங்களின் சுயநலத்திற்காக உண்மையை மறைப்பவர்கள் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட பீடாதிபதியின் வார்த்தைகள் “இன்று தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு காரனம் புலிகள், இறந்த புலிகள்தங்களது ஆவியினால் மக்களை பாதுகாக்கின்றார்கள்.” தமழ் தேசிய கூட்டமைபின் தலைவரின் வார்த்தைகள் “ஆயுத போராட்டம் முறைமையானதும், காலத்தின் தேவையுமாய் இருந்தது.”

(“தமிழர்களினதும் அவர்களின் தலைவர்களினதும் அவலநிலை” தொடர்ந்து வாசிக்க…)

மே 18 (பகுதி 13)

(அருண் நடேசன்)

இந்தியாவின் தேசியக் கட்சிகளான இடதுசாரிகளும் பாரதீய ஜனதாவும் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசுக்கெதிர் போக்கையும் வெளிப்படுத்தியிருந்தமை பிரபாகரனுக்கும் நடேசனுக்கும் அதிக நம்பிக்கையளித்தது. ஆனால், இந்திய மத்திய அரசின் போக்கில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. மாற்றம் ஏற்பட வாய்ப்புமில்லை. தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவும் அவற்றின் இணைந்த நிலைப்பாடுகளும் எவ்வாறு இருக்கும் என்பதெல்லாம் பிந்தியே புலிகளுக்கு விளங்கியது.

(“மே 18 (பகுதி 13)” தொடர்ந்து வாசிக்க…)

பயனற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பொது அமைப்புகளும் அதிகாரிகளும் விசனம்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று 29-05-2017 மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்களான வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆகியோர் சமூகமளிக்காத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் அங்கஜன் இராமநாதன் இருவரின் தலைமையிலேயே இன்றையக் கூட்டம் நடைப்பெற்றது.

(“பயனற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பொது அமைப்புகளும் அதிகாரிகளும் விசனம்” தொடர்ந்து வாசிக்க…)

மட்டக்களப்பிலிருந்து காலிவரை

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென, பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய, மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, தங்களது முதல் தொகுதி நிவாரணப் பொருட்களை, மட்டக்களப்பு சிவில் சமூகத் தலைவர் மாமாங்க ராஜாவிடம் செவ்வாய்க்கிழமை மாலை கையளித்தனர்.

(“மட்டக்களப்பிலிருந்து காலிவரை” தொடர்ந்து வாசிக்க…)

மே 18 (பகுதி 12)

(அருண் நடேசன்)

ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் எந்தவிதமான விமர்சனங்களுமற்று பிரபாகரனை வழிபட்டனர். புலிகளை நிபந்தனைகளற்ற முறையில் ஆதரித்தனர். ஆனால் இதைப் புலிகள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியதும் புலம்பெயர் தமிழர்கள் இதற்குப் பலியானதும் ஒன்றாகவே நடந்தன. புலிகள்மீதான விமர்சனத்தை வைத்து ஈழப் போராட்டத்தை விரிந்த தளத்தில் ஜனநாயக உள்ளடக்கத்துடன் முன்னெடுக்க வேண்டும் என்ற புலம்பெயர் தமிழர்களும் புத்திஜீவி களும் ஏற்கனவே புலிகளின் ஆதரவுச் சக்திகளால் ஓரங்கட்டப்பட்டு மௌனிக்கப்படுத்தப்பட்டிருந்தனர்.

(“மே 18 (பகுதி 12)” தொடர்ந்து வாசிக்க…)

மூதூர் மல்லிகை தீவு பெருவெளி சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம்

மூதூர் மல்லிகை தீவு பெருவெளி எனும் இடத்தில் ஞாயிற்று கிழமை அறநெறி வகுப்புக்கு சென்ற மூன்று சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு திருமலை தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நாம் நேரில் சென்று உண்மை நிலவரத்தை பெற்றோரிடம் கேட்டு தெரிந்து கொண்டோம். பெற்றோர் கூறியதாவது… முக நூலில் வேறு சில சம்பவத்தின் புகைப்படங்களை போட்டும், பிள்ளைகள் இறந்ததாகவும் செய்தியை பரப்பி வருகின்றனர். இது தமக்கு மிகவும் மன உளைச்சல்களை உருவாக்குகிறது என்றும் கூறினார்”.

(“மூதூர் மல்லிகை தீவு பெருவெளி சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம்” தொடர்ந்து வாசிக்க…)