துரையப்பா விளையாட்டரங்கத்தை மோடி திறந்துவைப்பார்

மீளவும் செப்பனிடப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜானதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ வசதியுடனேயே அவர், இந்த வைபவத்தில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்துகொண்டு திறந்துவைக்கவுள்ளார். இந்த வைபவம் எதிர்வரும் 18ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைபவத்தில் பிரதம அதிதிகளாக பங்கேற்கும் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவிலிருந்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணத்திலிருந்து உரையாற்றுவர்.

பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 43 )

கிண்ணியாவில் இருந்து குணராசா (செங்கை ஆழியான்) இவரை இடம் மஜீத் இடம் மாற்றியதால் அந்த இடத்தை தற்காலிமாக பற்குணம் பொறுப்பேற்றார். கூடவே தம்பலகாம்மும் அவரின் கீழே இருந்தது.ஒரு நாள் அவருடன் நான் கிண்ணியா போய் கொண்டிருந்தேன்.ஒருவர் நடந்தே பொய்க் கொண்டிருந்தார்.அவரைக் கண்டதும் காரை சற்று அருகே நிறுத்திவிட்டு என்னை பின்னால் இருக்க சொன்னார்.வழமையாக யாரை அவர் ஏற்றினாலும் நான் நானாகவே பின்னால் சென்றுவிடுவேன்.காரணம் வயதுக்கு மரியாதை.

(“பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 43 )” தொடர்ந்து வாசிக்க…)

மாறி வரும் நம் மரபுகள்-கலியாணம்

என் சிறு வயது முதல் பல கலியாண வீடுகளை எங்கள் சேனையூர் கட்டைபறிச்சான் பிரதேசத்தில் பார்த்திருக்கிறேன்.எனக்கு நினைவில் உள்ள முதல் கலியாண வீடு அப்புச்சியின் தங்கச்சி சின்னமாமியின் கலியாணம்.அந்த வீட்டு முற்றத்தில் பரப்பப் பட்ட வெண் மணலும் வாழை கமுகம் தென்னம் குருத்து அலங்காரமும் கொட்டகையும் வரிசைக் கால்களும் நிலவொளியில் பட்டுத்தெறிக்கும் அழகாய் பூத்த நாடகள்.

(“மாறி வரும் நம் மரபுகள்-கலியாணம்” தொடர்ந்து வாசிக்க…)

‘ஈழக் கனவை தோல்வியடைய செய்வோம்’

நாட்டுக்குள்ளும் வெளியேயும் உள்ள ஈழம் என்ற கனவு மற்றும் விடுதலை புலிகளின் சித்தாந்தத்தை நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இல்லாதொழிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவிட்டால் வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் நிலை உருவாகலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தெஹிவளை – கல்சிசை நகரமண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். 27 வருடங்களாக வடக்கு மக்கள் முகாம்களில் இருந்தனர். நான் கேட்கின்றேன் உங்களால் அவ்வாறு இருக்க முடியுமா? அதனால் நாம் அனைவரும் எமது பிரச்சினை போலவே அவர்களது பிரச்சினைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்’ என்று ஜனாதிபதி கூறினார்.

கிழக்கு முதல்வருக்கு எதிராக மனுத்தாக்கல்

திருகோணமலை, சம்பூர் பாடசாலையொன்றில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, கடற்படை உயரதிகாரியொருவரை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் ஏசிய விவகாரத்தைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில், உயர்நீதிமன்றத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (07), அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு முதலமைச்சரின் நடவடிக்கை காரணமாக, மேற்படி கடற்படை உயரதிகாரியினதும், சம்பவத்தின் போது மேடையில் நின்றிருந்த பாடசாலை மாணவர்களினதும் கௌரவம் சீர்குலைக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி, பி.லியனாரச்சி என்ற சட்டத்தரணியால், மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

(“கிழக்கு முதல்வருக்கு எதிராக மனுத்தாக்கல்” தொடர்ந்து வாசிக்க…)

கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!(பகுதி 3)

தோழர் ஸ்ராலின் அண்ணாவிற்கு வாழ்கைத் துணையாக அமைந்த அண்ணி இந்திரா திருச்சியைப் பாரம்பரியமாக கொண்டவர். இவர் தனது உறவினர்களை பார்க்க இடையிடையே குடந்தை(கும்பகோணத்தை குடந்தை என்று அழைப்பர் நாம் திருகோணமலையை திருமலை என்று அழைக்கவில்லையா அதுபோல்)யில் இருந்து போய் வருவதுண்டு. தமிழ் நாட்டுப் பெண்கள் கணவரைவிட்டு தனியே பயணம் செய்யும் வழக்கங்களை தவிர்க்கும் கலாச்சாராப் பிடிக்குள் கட்டுப்பட்டு இருந்தவர்கள். ஆண்களும் இவற்றை அனுமதிக்காத ஆண் மேலாதிக்க சிந்தனையில் பலரும் இருந்தனர். தமது மனைவியை தனக்கு கீழானவர் என்று நடத்தும் பண்புகளுக்கு மத்தியில் அண்ணியை இந்திரா என்று அன்புடன் விழிப்பதைத் தவிர நான் வேறு எந்த முறையிலும் அழைப்பதைக் காணவில்லை.

(“கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!(பகுதி 3)” தொடர்ந்து வாசிக்க…)

வெளிநாட்டவர்களுக்கு இரத்தப் பரிசோதனை அவசியம்

இலங்கையில் தங்கியிருக்கும் நோக்கத்தில் விமானம் மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் ஹோட்டல், சுற்றுலா சம்பந்தப்பட்ட தொழில்களுடன் தொடர்புடையவர்கள் இரத்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என சுகாதார அமைசர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 25 இலட்சம் ரூபாய் செலவில் களுத்துறை, கட்டுகஹேன பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘சுவதிவி’ மருத்துவ மையத்தை திறந்துவைத்து உரையாற்றும் போது இதனைக் கூறினார். நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கு மலேரியா, எயிட்ஸ் போன்ற நோய்கள் இருக்கின்றதா என்று அறிந்துகொள்ளுவதற்காக இவ்வாறு இரத்தப் பரிசோதளை செய்யப்படுவதாக அமைச்சர் மேலும் கூறினார்.

பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 42 )

தம்பலகாமம் ஏ.ஜி.ஏ ஆக பொறுப்பேற்ற பின் தம்பலகாமம் பற்றி அவர் தன் பலகலைக்கழக நண்பர் சின்னராசா என்பவர் மூலம் அங்குள்ள நிலைமைகளை கேட்டு அறிந்தார்.அவர் அப்போது தம்பலகாமம் ப.நோ.கூ. சங்க முகாமையாளராக பணியாற்றினார்.அரசியல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் இருந்தன. இதன் காரணமாக அதன் தலைமைப் பொறுப்பை பற்குணம் ஏற்றார்.இதுவும் அமைச்சர் மஜீத் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

(“பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 42 )” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் தோழர் ஸ்ராலின் அண்ணாவிற்கு அஞ்சலி நிகழ்வு

ஆரம்ப ஈபிஆர்எல்எவ் இற்கு தாங்கு சக்தியாக விளங்கிய தோழர் ஸ்ராலின் அண்ணாவிற்கு அஞ்சலி நிகழ்வு இன்று(June 05, 2016) கனடாவில் நடைபெற்றது. தோழர் ஜேம்ஸ் இன் வீட்டில் அமைந்துள்ள மண்டபத்தில் கூடிய பத்மநாபா மக்கள் முன்னணி(PPF)யினர் தமது கட்சியான தழிழர் சமூக ஜனநாயக் கட்சி – கனடா(SDPT- Canada) கிளை சார்பில் இந்நிகழ்வை நடாத்தினர். இதில் SDPT இன் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு தமக்கும் ஸ்ராலின் அண்ணாவிற்கும் இடையேயான உறவு பற்றி பகிர்ந்து கொண்டனர். ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் அர்பணிப்பு செய்து செயலாற்றியவர் தோழர் ஸ்ராலின் அண்ணா என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

(“கனடாவில் தோழர் ஸ்ராலின் அண்ணாவிற்கு அஞ்சலி நிகழ்வு” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் எம்மவருடன் சிவன் பவுன்டேசன்

 

சிவன் பவுன்டேசன் மோகன் என்ற கணேஸ் வேலாயுதம் உடன் சமூக வேலை ஆர்வலர்களுடனான சந்திப்பொன்று இன்று ரொறன்ரோ கனடாவில் நடைபெற்றது. கனடா செல்வசன்னதி ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ரெலோ சர்வதேசம் உறுப்பினர்கள், காட்லி கல்லூரி பழைய மாணவர் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)யின் உறுப்பினர் தோழர் ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள், உதவிகள், புனர்வாழ்வு, வேலைவாய்பு. கல்வி ஊக்குவிப்பு என்பவற்றில் செயற்பாடுகளைக் கொண்டிருக்கும் சிவன் பவுன்டேசன் கனடாவின் எமது உறவுகளின் உதவியுடன் தமது சேவையை தொடர்வதற்கான ஆலோசனையும் செயற்திட்டங்கள் பற்றியும் இவ் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. மத்திய அரசு, மாகாண சபைகள்(குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண சபைகள்) தூரநோக்கு பார்வையுடனான செயற் திட்டங்களும், செயற்பாடுகளும், ஆக்கபூர்வமான சிந்தனைகளும் அற்று செயற்படும் தற்போதைய நிலமையில் இது போன்ற மக்களுக்கான சேவை முன் நகர்த்திச் செல்வதில், செயற்படுத்துவதில் உள்ள தடங்கலகள் பற்றி தோழர் ஜேம்ஸ் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

(“கனடாவில் எம்மவருடன் சிவன் பவுன்டேசன்” தொடர்ந்து வாசிக்க…)