(புருஜோத்தமன் தங்கமயில்)
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் எம்.ஏ சுமந்திரன் நுழைந்தது முதல், கூட்டமைப்பை பிளவுபடுத்தும் சதித்திட்டங்களில் ‘ஆமை’ போன்று ஈடுபட்டதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (ஜ.த.தே.கூ – DTNA)) குற்றஞ்சாட்டுகின்றது.
The Formula
Political & Sociology Research
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் ஒரு பிளவு தோன்றியுள்ளது. இறுதியாக மூன்று கட்சிகள் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளாக இருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) என்பனவே அவை. இப்பொழுது மூன்று கட்சிகளும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டன, அல்லது பிரிக்கப்பட்டுவிட்டன.
(வ.அழகலிங்கம்)
இலங்கையின் சட்டத்துறையும் நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் இலகுவில் விலைபோகக் கூடியவர்கள். இலங்கை இந்த நிலைக்கு வந்ததற்கான முதற் காரணம் இதுவாகும். இங்கையின் நீதாவான் கோடு;, பொலீஸ் மற்றும் முழு அரசஜந்திரங்களும் நிர்மூலமாக்கும் வரை இலங்கைக்கு விடுதலை இல்லையென்பதை அறிந்து அதை நிர்மூலமாக்கும் வரை போராட்டங்களை இடைநடுவில் நிறுத்தக் கூடாது.
(வ.அழகலிங்கம்)
(இது பிள்ளையானின் செயலாளரான அசாத் மௌலான ஜெனீவா மனிதஉரிமைச்சபையின் முன் தொடர்ந்து 5 நாட்கள் விசாரணையின்போது சொல்லிய ஒப்புதல் வாக்கு மூலம்.)
இலங்கையில் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் இனக்கலவரங்கள் வரும். இதைக் காலவரிசைப்படி நிறுவுவது மிகவும் எளிதானது. வாழ்க்கை என்பது எளிதான விஷயம் அல்ல.
(புருஜோத்தமன் தங்கமயில்)
“கைகளின் இரத்தக் கறை உள்ளவர்களுடன் என்னை என்னால் இணைத்துப் பார்க்க முடியாது; தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றில் இணைய வேண்டுமாக இருந்தால் தமிழரசுக் கட்சியில் இணைவேன்…” என்று சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்ற சில மாதங்களில் தெரிவித்த விடயம் பெரும் சர்ச்சையானது.
(வீ.ஏ.கந்தசாமி)
(தைப்பாங்கல் தினத்தை முன்னிட்டு, 56 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இக்கட்டுரை, இலங்கையின் இன்றைய நிலைமைக்குமான பொருத்தப்பாடு கருதி பிரசுரமாகின்றது)
மக்களின் உற்பத்திக்கான போராட்டத்தில் உதித்தது பொங்கல் தினம். உழவுத் தொழிலைப் பிரதானமாகக் கொண்ட, சமுதாய நடைமுறையின் வெளிப்பாடாக முன்வந்த பொங்கல் தினம், தமிழர் சமுதாயத்தின் தனித்துவமான தினமாக உயர்ந்து நிற்கிறது.
எமது தேசிய கீதத்தை இயற்றிய
அமரர்.ஆனந்த சமரக்கோன் அவர்களின் ஜனனதினம் இன்று.
(13.01.1911)
எமது தேசிய கீதத்தின் வரலாற்று
காலப்பகுதியை இப்படி வகுக்கலாம்.
1948.ஆம். நமது நாடு சுதந்திர அடையும்
வரை இலங்கையின் தேசிய கீதமாக
God save that queen….. என்று தொடங்கும் பிரித்தானிய தேசிய கீதமே
நமது நாட்டின் தேசியகீதமாக இருந்தது.
வடக்குகிழக்கு மாகாண சபையில் ஓர் உறுப்பினராகச் செயற்பட்டு வந்தேன். அந்தச் சபையில் எல்லா உறுப்பினர்களுக்கும் கிடைத்தது போல எனக்கும் ஒரு பஜிரோ ஜீப் கிடைத்தது. அதை நான் குறுகிய காலத்துக்குள் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு அதை விற்று விட்டேன். அது இலங்கையில் ஒன்றும் புதினமான விஷயமோ பாரியதொரு குற்றமோ அல்ல. அப்படித் தங்களுக்குக் கிடைக்கும் வாகனங்களை விற்கும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளில் நானும் ஒருவன், அவ்வளவுதான்.