(முருகானந்தன் தவம்)
2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்வதாக அறிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.(தேசிய மக்கள் சக்தி) அரசு, அதனடிப்படையில் இரண்டு அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்துள்ளதுடன், புதிய அமைச்சர் ஒருவரையும், புதிதாக 5 பிரதி அமைச்சர்களையும் நியமித்துள்ளது.