அஞ்சலி: கலாபவன் மணி – “அங்கீகாரம் கிடைக்க மரணம் அவசியம்!”

(பனிமலரோன்)
பணம், செல்வாக்கு இருந்தாலும் இங்கிதமாகப் பழகுபவர்களை டவுன் டு எர்த் பெர்சனாலிட்டி என்பார்கள். அதற்கு ஒரு நல்ல உதாரணம் நடிகர் கலாபவன் மணி. பழசை மறக்காத பக்குவம் அவரிடம் கடைசிவரையில் இருந்தது என்பதற்கு அவர் இறந்ததும் சாலக்குடியில் திரண்ட மக்கள் கூட்டமே சான்று.  கலாபவன் மணி இருநூறு தென்னிந்தியப் படங்களில் நடித்திருக்கிறார். கேரள மாநிலம் தாண்டி, மதுரையில், கலாபவன் மணி ரசிகர்கள் மன்றம் இருக்கிறது. மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல் போன்ற நகரங்களிலிருந்து ரசிகர்கள் கலாபவன் மணிக்கு இறுதி மரியாதை செய்வதற்காக சாலக்குடி வந்திருந்தது சாலக்குடி மக்களையும் மலையாளப் பட உலகையும் ஒருசேர நெகிழச் செய்தது.

எடுபிடி வேலையாளாக இருந்த மணி ஆட்டோ டிரைவராகி, மிமிக்கிரி கலைஞனாகி, பின் நடிகர் ஆனவர். கடைசி வரையில் மிமிக்கிரியை மூச்சாக சுவாசித்தவர். வறுமை காரணமாக, பதினெட்டு வயதிலும், மணி மிக ஒல்லியாக இருப்பார். மிமிக்கிரி பயிற்சிக்காக மணி, கொச்சியிலுள்ள ‘கலாபவன்’ பயிற்சி நிலையத்துக்கு வந்தார். தேர்வில், மணி ‘அழைப்பு மணி’யின் ஓசையை மிமிக்ரியில் உருவாக்கினார். அதில் ஈர்க்கப்பட்ட கலாபவன் பொறுப்பாளர், மணியை கலாபவனில் சேர்த்துக்கொண்டார்.

அன்று முதல், ‘கலாபவன் மணி’ ஆனார். நடனம், இசை, நாடகம், மிமிக்கிரி, பாட்டு போன்ற கலைகளைச் சொல்லித்தரும் நிறுவனம் கலாபவன். இயக்குநர்கள் சித்திக், ஹனிபா, நடிகர்கள் ஜெயராம், திலீப், பாடகிகள் சுஜாதா, ஜென்சி ஆகியோர் கலாபவனில் பயிற்சிபெற்றோரில் குறிப்பிடத்தக்கவர்கள்.

தொடக்கத்தில் மணிக்குச் சிறு சிறு காமெடி வேடங்கள்தான் கிடைத்தன. 1999-ல் வெளியான ‘16 வயதினிலே’ படத்தின் சாயல் கொண்ட ‘வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்’ படம் மணியின் நடிப்பில் புதிய பரிமாணத்தைச் சேர்த்தது. மாநில, தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளும் மணியைத் தேடி வந்தன. ஆனால் மணிக்குப் பிடித்த படம் ‘ஆகாசத்திலே பறவகள்’.

கலாபவன் மணி சமையலில் நளன். அஜித் மாதிரி, ஷூட்டிங் சமயத்தில் சமைத்து எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்துவார். ஷூட்டிங் நடக்கும்போது, மணி தங்கும் அறையில் அவர் ஓட்டுநரும் உதவியாளரும் பெட்டில் படுத்து உறங்குவார்கள். அவரோ தரையில் பெட்ஷீட் விரித்துக் கிடப்பார். கேட்டால், “இவங்க வீட்டில் இத்தனை வசதி இருக்காது. இங்கேயாவது அனுபவிக்கட்டும்…” என்பார்.

மார்ச் 7 சிவராத்திரி அன்று மணியின் மிமிக்கிரி நிகழ்ச்சி சாலக்குடி அருகே ஒரு கிராமத்தில் ஏற்பாடாகியிருந்தது. வரவேற்பு பேனர்களை மாற்றி, “இனியொரு ஜன்மம் எடுத்து கலாபவன் மணியாகவே திரும்ப வாங்க… நாங்க இல்லாமல் போனாலும் எங்க வாரிசுகளைப் பாட்டால், மிமிக்கிரியால் சந்தோஷப்படுத்துங்க” என்று எழுதி வைத்திருந்தார்கள். இதைவிட நெகிழ்ச்சியான அஞ்சலி இருக்குமா?
அதிகம் பாடல்கள் பாடி நடித்திருக்கும் பெருமையும், ‘த கார்டு’ (The Guard) முழுநீளத் திரைப் படத்தில் ஒற்றைக் கதாபாத்திரமாக நடித்த பெருமையும் மணிக்கு உண்டு. சில தொழில்நுட்பக் காரணங்களால் அது கின்னஸில் இடம்பெறவில்லை.

திக்கித் திக்கிப் பேசி ‘ராட்சஷ ராஜாவு’ படத்தில் வில்லனாக மிரட்ட, ‘ஜெமினி’ படத்தின் வில்லன் ஆனார். அதில் விலங்குகளின் உடல்மொழியில் மிரட்டினார். தொடர்ந்து, வில்லனாகத் தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் ஒரு சுற்று வந்தார்.
மணியின் ‘உடல் மொழி’ அபாரமானது, அசாதாரணமானது. புருவம், கண், உதடுகள், மூக்கு, கன்னம், கை, கால் எல்லாமே நடிக்கும். கவர்ந்திழுக்கும் குரல் மாடுலேஷன் மணிக்குச் சொந்தம். பேச்சில் சாதுர்யம். டான்ஸிலும் அசத்துவார். நாட்டுப்புறப் பாடல்களை எழுதி, பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதில், மணிக்கு நிகர் மணிதான். “மேடை என்பது எனக்கு ‘ஓணப் பண்டிகை ஸத்யா’ (மதிய விருந்து) மாதிரி. திருப்தி வரும்வரை விட மாட்டேன். ரசிகர்களைத் திருப்திப்படுத்தாமல் மேடையை விட்டு இறங்கவும் மாட்டேன்” என்பார்.

மணி வீட்டிலிருந்தால், கொண்டாட்டம்தான். அதுவும் பழைய நண்பர்கள் வந்துவிட்டால், பொழுதுபோவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார். நண்பர்கள் கிளம்பும்போது, அவர்கள் அன்று வேலை செய்திருந்தால் என்ன சம்பளம் கிடைத்திருக்குமோ அதைவிட இரண்டு மடங்கு கொடுத்து அனுப்புவார்.

ஒருமுறை, முன்பணம் கொடுக்க இயக்குநர் ஒருவர், மணியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அவரிடமிருந்து வாங்கிய முன்பணத்தை அப்படியே அங்கேயிருந்த ஒரு அம்மாவிடமும் இளம்பெண்ணிடமும் எண்ணிக்கூடப் பார்க்காமல் கொடுத்துவிட்டார் மணி. அந்த இளம் பெண்ணின் திருமணத்துக்கான உதவி அது. சாலக்குடியில், தன் தந்தை நினைவாக ஒரு நூலகம் கட்டியுள்ளார் மணி. பள்ளிகளுக்கும், அரசு மருத்துவமனை, காவல் நிலைய பராமரிப்புக்கும் கணிசமான தொகையையும் தந்திருக்கிறார் அவர்.

சாலக்குடி சாலைகளைச் செப்பனிடவும் விசால மனசு கொண்ட மணி மறக்கவில்லை. சொந்த ஆட்டோ, பைக், கார் ஆகியவற்றுக்கு எண் ‘100’ என்றுதான் வைத்திருந்தார். ஆனால் 45 வயதில் காலமாகிவிட்டார்.  கலாபவன் மணி இறந்ததும் மலையாள முன்னணி நடிகர்கள் பலர், அவரை ‘ஆஹா, ஓஹோ’ என்று பாராட்டி இரங்கல் தெரிவித்திருந்தார்கள். ஆனால். கலாபவன் மணியின் திறமையை அவர் உயிருடன் இருந்தபோது அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பது கசப்பான உண்மை. “ஒரு கலைஞனுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்கு மரணம் அவசியம்… அவன் மரணம் அடைந்த பிறகுதான் அங்கீகாரம் கிடைக்கும்… நான் இறந்த பிறகு, என் எதிரிகள்கூட என்னைப் பாராட்டுவார்கள்” என்று கலாபவன் மணி அடிக்கடி சொல்லி வந்தார். அது பலித்தேவிட்டது.

சிரிய அகதிகள்: அடுப்புக்கும் பானைக்கும் நடுவே

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அகதி வாழ்வின் அவலம் சொல்லி மாளாது. போரின் முதற்பலி, உண்மை. ஆனால், அதன் இறுதிப் பலி அகதி. வீடு திரும்ப இயலாது, அந்நிய மண்ணில் அலைதலே வாழ்க்கையாகி, நிச்சயமின்மையே நிச்சயமாகிவிடும் துயரத்தை யாரிடம் சொல்ல முடியும். அகதி என்ற அடையாளம் அனைத்தையும் அழித்துத் துடைத்துவிட்ட பின், வாழ்க்கை என்னவோ திரிசங்கு நிலைதான். சிரியாவிலும் சூழவும் ஏற்பட்டுள்ள போரும் பேரழிவும், பல இலட்சக்கணக்காணோரை அகதிகளாக்கியுள்ளன. மத்திய-கிழக்கு, வட-ஆபிரிக்க நாட்டவர்கள் தங்கள் உயிர்களைக் காப்பதற்காகச் சொந்த இடங்களிலிருந்து பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர். அவர்களிற் பெரும்பாலோர் சிரியாவைச் சேர்ந்தவர்கள்.

(“சிரிய அகதிகள்: அடுப்புக்கும் பானைக்கும் நடுவே” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய வம்சாவளித் தமிழர் என்றே அழைக்கப்பட வேண்டுமா?

(சாகரன்)
“….தொடர்ந்தும் மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் இந்திய வம்சாவளித் தமிழர் என்றே அழைக்கப்பட வேண்டுமா? அவர்கள் இலங்கை நாட்டுக்குரியவர்கள். அவர்கள் இலங்கைத் தமிழர்களாகக் கொள்ளப்படுதல் வேண்டும். அதற்கு வடகிழக்கு தமிழர்கள் என்ன கருத்தினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை அறிய ஆவலாக உள்ளேன்……” – அநுரகுமார திஸநாயக்க ( எதிர்கட்சி பிரதம கொறடா, தலைவர் JVP)

(“இந்திய வம்சாவளித் தமிழர் என்றே அழைக்கப்பட வேண்டுமா?” தொடர்ந்து வாசிக்க…)

ராஜீவ் காந்தியைக் கொன்றது மிகப் பெரிய தவறு என பாலசிங்கம் ஒப்புக்கொண்டார்! – சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகள் செய்ததிலேயே மிகப் பெரிய தவறு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததுதான் என்று அன்டன் பாலசிங்கம் தன்னிடம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதாக நோர்வே முன்னாள் சிறப்புத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டவர் சொல்ஹெய்ம். அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து மார்க் சால்டர் என்பவர், 549 பக்கங்களைக் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். “To End A Civil War” என்ற பெயரில் அந்த நூல் வெளியாகியுள்ளது. அந்த நூலில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தனக்கு இருந்த தொடர்புகள், பாலசிங்கம், பிரபாகரன் உள்ளிட்டோர் குறித்து விவரித்துள்ளார் சொல்ஹெய்ம்.

பாலசிங்கத்துக்கே தெரியாமல் சொல்ஹெய்ம் கூறுகையில், ராஜீவ் காந்தி கொலை குறித்து பாலசிங்கத்திடம் முதலிலேயே தெரிவிக்கவில்லை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன். ராஜீவ் காந்தி மே 21, 1991ல் கொல்லப்பட்டார். அதன் பிறகு சில வாரங்கள் கழித்தே பிரபாகரனும், பொட்டு அம்மானும், பாலசிங்கத்திடம் விவரத்தைக் கூறியுள்ளனர். ராஜீவ் காந்தி கொலை குறித்து நான் பின்னர் பாலசிங்கத்திடம் கேட்டபோது, விடுதலைப் புலிகள் இயக்கம் செய்த மிகப் பெரிய தவறு இது என்று உடனடியாக ஒத்துக் கொண்டார். மிகப் பெரிய வரலாறு என்று அவர் திரும்பவும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், இது ஒட்டுமொத்த சீரழிவு என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை என்றும் கூறினார் பாலசிங்கம். இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் அமைதிப் பணிக்காக வந்த இடத்தில் தமிழர்களைக் கொன்று குவித்தது. இந்த நிலையில் 91 தேர்தலில் மீண்டும் ராஜீவ் வென்று ஆட்சிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி நடந்தால் அவர் மீண்டும் படையை அனுப்பலாம். அது தங்களுக்கு பாதகமாக அமையும் என்று பிரபாகரன் எதிர்பார்த்தார். இதனால் ராஜீவ் காந்தியைக் கொல்லும் முடிவை அவர் எடுத்தார்.

சொல்ஹெய்ம் மேலும் கூறுகையில், அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகளை பாலசிங்கம் ஏற்படுத்தி வந்தாலும் கூட, இந்தியா மீதுதான் அவருக்கு தனிப் பிரியம் இருந்தது. அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தை கடுமையாக விமர்சித்தவரான நீலன் திருச்செல்வத்தை விடுதலைப் புலிகள் கொன்றதை நியாயப்படுத்தினார் பாலசிங்கம். அவரைக் கொன்றது நாங்கள்தான். காரணத்தைச் சொல்ல நாங்கள் தயார். கேட்க நீங்கள் தயாரா என்று என்னிடம் பட்டென்று கேட்டார் பாலசிங்கம்.

பிரபாகரனை போர் தாகம் கொண்டவர் என்று ஒருமுறை என்னிடம் வர்ணித்தார் பாலசிங்கம். அதேசமயம், பிரபாகரன் உட்பட விடுதலைப் புலிகள் தலைமை, தங்களது அமைப்பை ஒரு அரசியல் அமைப்பாக மாற்ற முயன்று வருவதாகவும் கூறினார். அன்டன் பாலசிங்கம் மிகவும் வெளிப்படையானவர். தவறுகளை ஒப்புக் கொள்வார். விடுதலைப் புலிகள் இயக்கம் செய்த பல தவறுகளை என்னிடம் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள், குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று என்னிடம் பலமுறை கூறியுள்ளார். மிகச் சிறந்த மனிதர். அவர் மீதான மரியாதை எனக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேதான் இருந்தது. எனக்கு நல்ல நண்பராக இருந்தார் என்று கூறியுள்ளார் சொல்ஹெய்ம்..

சிங்கக்கொடி ஏற்றி தேசியவாதி வேடத்தைக் கலைத்த விக்னேஸ்வரன்

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் புலம்பெயர் பிழைப்புவாதிகளுக்குத் தீனி போட ஆரம்பித்து இப்போது அண்ணளவாக இரண்டு வருடங்கள் நிறைவுறுகின்றன. சமூக வலைத்தளங்கள், தேசியம் என்ற பெயரில் ஊடக வியாபாரம் நடத்திய இணையங்கள், அரசியல் கட்சிகள் என்று விக்னேஸ்வரனை காட்டி மக்களை ஏமாற்றிய கும்பல்கள் பொதுவாகப் புலம்பெயர் நாடுகளிலேயே நிலை கொண்டிருந்தன. இவர்களில் பொதுவாக அனைவருமே மக்களின் அவலங்களையும் கண்ணீரையும் தமது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டனர். விக்கியை இயக்குவதற்கென்றே புலம்பெயர் நாடுகளில் குழுக்களும் தனி நபர்களும் உருவாகியிருந்தனர். அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலைகொண்டிருந்த இக் குழுக்களும் தனி நபர்களும் இந்திய மற்றும் அமெரிக்க நலன்களுக்காகச் செயற்படுபவர்களாகக் காணப்பட்டனர்.

(“சிங்கக்கொடி ஏற்றி தேசியவாதி வேடத்தைக் கலைத்த விக்னேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)

மனிதாபிமானம் வேண்டாமா?

மதுரை மாவட்டத்தில் நடந்திருக்கும் இலங்கை அகதியின் தற்கொலை நம் அமைப்பின் முன் பல கேள்விகளை முன்வைக்கிறது. மதுரை மாவட்டம், உச்சபட்டி அகதிகள் முகாமில் வசித்தவர் ரவீந்தரன். முகாம்களில் வசிக்கும் அகதிகளுக்கு முக்கியமான வாழ் வாதாரம், அரசு சார்பில் ஆட்களைக் கணக்கிட்டு வழங்கப்படும் மாத உதவித்தொகை. அப்படியான மாத உதவித்தொகைக்கான கணக்கெடுப்புக்கு மறுவாழ்வுத் துறை ஊழியர்கள் சென்றிருக்கின்றனர். அன்றைய தினம் ரவீந்திரன் வீட்டில் அவருடைய மகன் வெளியே சென்றிருந்திருக்கிறார். மகன் வீட்டில் இல்லாததால், அவருடைய பெயரைக் கணக்கில் சேர்க்க ஊழியர்கள் மறுத்திருக்கின்றனர். கணக்கில் சேர்க்கவில்லை என்றால், அவருடைய மகனுக்கான உதவித்தொகை கிடைக்காது என்பதால், ரவீந்திரன் கெஞ்சியிருக்கிறார். ஊழியர்கள் தொடர்ந்து கெடுபிடி காட்டவும் மன உளைச்சலுக்குள்ளான ரவீந்திரன், உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போதும் பலன் கிடைக்காததால், அதிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

(“மனிதாபிமானம் வேண்டாமா?” தொடர்ந்து வாசிக்க…)

உலகில் தலைசிறந்த கல்வியில் ‪#‎பின்லாந்து‬ முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத்

தொடங்குகிறது…

😰ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை…

😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை…

👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்…

(“உலகில் தலைசிறந்த கல்வியில் ‪#‎பின்லாந்து‬ முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?” தொடர்ந்து வாசிக்க…)

மங்கையர்கரசி என்ற தைரியமான பெண்மணி….இவரின் இழப்பு எமக்கும் வலிக்கின்றது

(தோழர் ஜேம்ஸ்)

தனது மதுரக் குரலால் தமிழ் இளைஞர்களை தட்டி எழுப்பியது இன்னமும் கண் முன்னே இருக்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் 1983 இற்கு பின்னர் தமிழ் நாட்டில் அஞ்ஞாத வாசம் செய்த போது அவ்வப் போது அமிர் அண்ணனை சந்திக்க செல்லும் போதெல்லாம் இன்முகத்துடன் விருந்தோம்பல் செய்வது கண் முன்னே வந்து செல்கின்றது. எமக்குள் பல அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் அமிர்தலிங்கத்தின் கொலையை நாம் என்றும் ஏற்கவில்லை இவரின் மரணச் சடங்கை செய்ய யாவரும் பயந்திருந்த வேளை அவ்வேளை இணைந்த வடக்கு கிழக்கு மாகாண அரசை ஆட்சி செய்த ஈபிஆர்எல்எவ் இனர் வடக்கு கிழக்கு எங்கும் அமிரின் பூத உடலை எடுத்துச் சென்று உரிய மரியாதையுடன் அடகம் செய்த போது இறுதியாக இவரை சந்தித்தது மட்டும் ஞாபகம். அமிருடன் இணைந்து செயற்பட்ட ஒரு வலிமையான பெண்மணி.. மனது கனக்கின்றது.

தைரியமாக பெண்களையும் வீதிக்கு இறக்கி சத்தியாக்கிரகம் என்ற சாத்வீகப் போராட்டத்தில் ஆண்களுக்கு சமனாக சமராடிய உன்னத செயற்பாடு என்னை இவர்பால் விமர்சனங்களுக்கு அப்பால் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இடதுசாரியத்திற்கு எதிரான இவர்களின் நிலைப்பாடு என்னை எப்போதும் இவர்கள் மீது முரண்பாட்டை ஏற்படுத்தினாலும் தமிழ் மக்களுக்கான தேசிய அடையாளத்தை சர்வதேச அரங்கில் ஏற்படுத்திய உழைப்பில் அமிர் அண்ணாவுடன் தோள் கொடுத்து செயற்பட்டது வரலாற்றில் இடம்பெற்றுத்தான இருக்கப்போகின்றது. முரண்பாடுகளை பேசும் ஒரு வகை அலைவரிசையை இந்தத்தம்பதியினர் கொண்டிருந்ததும் வேறு எந்த மிதவாதத் தலைவர்களிடமும் இல்லாத சிறப்பு அம்சம்ஆழ்ந்த வருத்தங்கள் அமிருடன் அவரின் சகாத்தம் முடிந்துவிட்டது என்ற ஆதங்கங்களும் உண்டு.

வடக்கு-கிழக்கு பிரிவு

(விஜய் பாஸ்கரன்)
இன்றைய அரசியலில் அதிகம் பேசப்படும் வடக்கு கிழக்கு இணைப்பு அல்லது பிரிவு விவகாரம்.இணந்து இயங்கிய வட_ கிழக்கு மாகாண சபையை ஜே.வி.பி வழக்குப் போட்டு பிரித்து வெற்றி கண்டது.இதன் பின்னால் முன்னைய அரசும் காரணமாக இருந்தது. 1970 ம் ஆண்டு முதற்தடவையாக என் சகோதர்ர் குச்சவெளி பிரிவு காரியாதிகாரியாக பொறுப்பேற்றார் .இது கட்டுக்குளம் பற்று என அழைக்கப்பட்டது.இதில் நிலாவெளி,இறக்கண்டி,கும்புறுப்பிட்டி,இரணைக்கேணி,குச்சவெளி,திரியாய்,புல்மோட்டை,தென்னமரவாடி ,பறண மதவாச்சி கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசம்.இதில் ஏழு கிராம சேவகர் பிரிவுகள் இருந்தன.நிலாவெளியில் இருந்து முல்லைத்தீவைப் பிரிக்கும் பறையனாறு,கொக்கிளாய் கடலேரி வரை பரந்த எல்லையைக் கொண்டிருந்தது.

(“வடக்கு-கிழக்கு பிரிவு” தொடர்ந்து வாசிக்க…)

என் மனவலையிலிருந்து……

சர்வதேசப் பெண்கள் தினம்.

(சாகரன்)

இன்று சர்வதேசப் பெண்கள் தினம். வருடத்தின் ஒவ்வொரு நாட்களையும் ஒரு தினமாக பிரகடனப்படுத்தி அன்றுடன் அதற்கு முற்றுப் புள்ளி வைத்து மீண்டும் அடுத்த ஆண்டு நினைவு கூரும் செயற்பாட்டின் வடிவங்கள் தற்போது எல்லாம் முன்னிலை பெற்று வருகின்றன. இதில் அன்னையர் தினம், தந்தையர் தினம், பெண்கள் தினம், தொழிலாளர் தினம் என்பன அன்றுடன் இத் தினங்களுடன் சம்மந்தப்பட் விடயங்கள் ‘கொண்டாடப்பட்டு ஏனைய தினங்களில் இவற்றின் தாற்பரியங்களை மறக்கும் வடிவங்களை முன்னிறுத்தும் உலகின் புதிய ஒழுங்கிற்குள் நாம் வீழ்ந்து வருகின்றோம் என்பதை சற்ற ஆழமாகப் பார்த்தால் புரியும்.

(“என் மனவலையிலிருந்து……” தொடர்ந்து வாசிக்க…)