பல தடம் பதித்த தமிழ் தேசியம்

(வல்வை ந.நகுலசிகாமணி)

(இந்தத் தமிழரசுக்கட்சியின் வழித்தோன்றல்கள்தான் புலிகளும் அவர்களால் உருவாக்கபபட் தமிழ் தேசியக் கூட்டமைப்பும். முள்ளிவாய்கால் அவலங்களுக்கு இவர்கள் யாபேரது பங்களிப்பு சமனாக இருந்ததே உண்மை – ஆர்)

1947ல் நடைபெற்ற தேர்தலில் தமிழரின் உரிமைக்குரலாக இனங்காட்டிய தமிழ்க் காங்கிரஸ் பின்னர் சலுகை அரசியலில் நாட்டம் காட்டியவேளையில் தமிழ்த் தேசியத்தின் காவலனாக அதன் கேடயமாக தந்தை செல்வா தலைமையில் எழுச்சிபெற்ற தமிழினத்தின் விடிவெள்ளியாக 1949ல் ஆரம்பித்ததுதான் இந்தப்பேரியக்கம். கல்லடியும் சொல்லடியும் பொல்லடியும் பெற்று செங்குருதி சிந்தி, சிறை நிரப்பி வடகிழக்கு என்ற பேதம்களைந்து தமிழர்களை ஒருங்கிணைத்த பேரியக்கம் தமிழரசுக்கட்சி.

(“பல தடம் பதித்த தமிழ் தேசியம்” தொடர்ந்து வாசிக்க…)

கலைக்கப்படுமா வடக்கு மாகாணசபை?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தோன்றியிருக்கும் முரண்பாடுகளையடுத்து, வடக்கு மாகாணசபையைக் கலைக்குமாறு பரிந்துரை செய்வது குறித்து, கொழும்பில் ஆலோசனை நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. வடக்கு மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாததால், அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலரே, இத்தகைய ஆலோசனைகளில் ஈடுபட்டதாகவும் செய்தி ஒன்றில் கூறப்பட்டிருந்தது.

(“கலைக்கப்படுமா வடக்கு மாகாணசபை?” தொடர்ந்து வாசிக்க…)

பலாலியில் சர்வதேச விமான நிலையமாக மாற்ற அரசாங்க இணங்கியுள்ளது – மாவை சேனாதிராசா ?

விக்கியாரின் பேரவை, புதுவருட வாழ்த்துகள் இவைகளுக்கு போட்டியாக நேற்று இன்னும் ஒரு விடையமும் இங்கே உலாவிக்கொண்டிருந்தது. யாழ்ப்பாணம் பலாலியில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற அரசாங்க இணங்கியுள்ளதாக மாவை சேனாதிராசா கூறியதாகவே அந்த செய்தி உலவியது. இந்த செய்தி உண்மையா என்பதைவிட இந்த விமானநிலையத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் எனறு சிலர் பெயர் கண்டுபிடிக்கும் முயறசிகளிலும் இறங்கிவிட்டனர்.
முதலில் விமான நிலையம் அமையட்டும் அதன் பின்பு பெயரை பற்றி சிந்திப்போம்.

(“பலாலியில் சர்வதேச விமான நிலையமாக மாற்ற அரசாங்க இணங்கியுள்ளது – மாவை சேனாதிராசா ?” தொடர்ந்து வாசிக்க…)

மலரும் புத்தாண்டில் மனிதம் பேணுவோம்!.

எத்தனை சோதனைகள்? எத்னை துன்பங்கள்? அத்தனையும் கண்டு முள்ளிவாய்கால் வரை சென்று முள்வேலி முகாமில் முடங்கி இன்றும் சொந்த மண்ணில் சொந்த வீட்டில் வாழ முடியாது வாழ்ந்து வரும் எம் உறவுகள் இழக்காத ஒன்று நம்பிக்கை மட்டுமே. துன்பத்தை தொடக்கி வைத்தவர் அகிலம் எல்லாம் தஞ்சம் புகுந்து தம் சொந்த மண்ணில் காணாத சுகம் எல்லாம் சுகித்து முடவன் வாய் தேன் என ருசித்து மகிழ்ச்சியின் உச்ச நிலை அடைந்து சொர்க்க வாசலை தாம் வாழும் நாடுகளில் கண்டவரின் சொந்த நாட்டில் சோகம் சுமந்து வாழும் எம்மவர் துயர் தீர்க்கும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும்.

(“மலரும் புத்தாண்டில் மனிதம் பேணுவோம்!.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவை சாதிக்குமா? பாதிக்குமா? – நிர்மானுசன் பாலசுதந்தரம்

இருபதுபேரோடு 2012 மார்ச் 10 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கற்றலன் தேசியஅவை, ஆறு மாதங்களில் ஒன்றரை மில்லியன் மக்களை ஒரு பேரணியில் ஒருங்கிணைத்தது. ஏழரைமில்லியன் மக்களைக் கொண்ட கற்றலோனியாவில் ஒன்றரை மில்லியன் மக்கள் 2012 செப்டெம்பர் 11 தமது தேசத்துக்கான சுதந்திரத்தை வேண்டி பேரணியாய் திரண்டார்கள். சிங்களவர்கள் வாக்களர்களாக அதாவது கட்சி சார்ந்து சிந்திக்கிறார்கள். ஆனால், தமிழர்களோ இனம் சார்ந்து சிந்திக்கிறார்கள். இது சிங்களவர்களிடம் உள்ள பலவீனமாகவும், தமிழர்களின் பலமாகவும் காணப்படுகிறது என சிரால் லக்திலக்க அவர்கள் 2005 – 2006 காலப்பகுதியில் அடிக்கடி கூறுவார்.

(“தமிழ் மக்கள் பேரவை சாதிக்குமா? பாதிக்குமா? – நிர்மானுசன் பாலசுதந்தரம்” தொடர்ந்து வாசிக்க…)

காற்றுள்ள போதே தமிழர்கள் தூற்றிக் கொள்வார்களா? அல்லது புதிய பொறிமுறைகள் தேடிவரும் எனக் கனவுலகில் காத்திருப்பார்களா?

(தோழர் வரதராஜபெருமாள்)
காற்றுள்ள போதே தமிழர்கள் தூற்றிக் கொள்வார்களா? அல்லது புதிய பொறிமுறைகள் தேடிவரும் எனக் கனவுலகில் காத்திருப்பார்களா?
புதிய அரசுடன் தமிழரசுக் கட்சி ரகசியமாக எவ்வாறானதொரு தீர்வைப் பேசப்போகிறது என யாருக்காயினும் தெரியுமா?
அடைந்தால் சமஷ்டி இல்லையெனில் எதுவும் வேண்டாமா? அல்லது அடைய ஏதாவது உண்டா?;
எவ்வாறான அரசியற் தீர்வு வேண்டும் என்பதில் பெரும்பான்மையான தமிழர்களிடையே ஒருமித்த கருத்து அவசியமாகும்.

(“காற்றுள்ள போதே தமிழர்கள் தூற்றிக் கொள்வார்களா? அல்லது புதிய பொறிமுறைகள் தேடிவரும் எனக் கனவுலகில் காத்திருப்பார்களா?” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரன் தான் குமார் பொன்னம்பலத்தை கொன்றார் கூறுகிறார் கருணா

டக்ளஸ், கருணாவை பேரவையில் இணைக்கலாம் என்று விக்கி ஐயா கூறிய கருத்திற்கு சில யாழ் நண்பர்கள் துடியாய் துடித்து துரோகிகளை பேரவையில் இணைக்கவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள் அதற்கான சுருக்கமான விளக்கத்தைத்தர கடமைப்பட்டுள்ளேன்! ஏன் எல்லாரும் அவதிப்படுகின்றீர்கள் நான் சேரப்போவதாக கூறவில்லையே இதில் கருணா என்பது முக்கியமில்லை இதில் கருத்து தெரிவித்திருக்கும் நீங்கள் அனைவரும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் உங்களின் உள்மனங்களை மக்கள் புரிந்து கொள்வதற்கு இது சிறந்த உதாரணம் நாம் அரசியல் பிச்சை கேட்கவில்லையே விக்கினேஸ்வரன், குமார்பொன்னம்பலம் அவர்களின் கருத்து, கொள்கைகள் எங்களுக்கு பிடித்திருக்கின்றது அவ்வளவுதான்.

(“பிரபாகரன் தான் குமார் பொன்னம்பலத்தை கொன்றார் கூறுகிறார் கருணா” தொடர்ந்து வாசிக்க…)

பத்மநாபா பற்றிய தகவல் ? என் பார்வையில் !

சூத்திரம் இணையத்தில் வந்த [“”மாகாண அரசிற்கான அதிகாரங்களை தாருங்கள் இல்லாவிட்டால் நாங்கள் அதை எடுத்துகொள்வோம் பத்மநாபா ( 1989 ல் )”” ] என்று தலைப்பிட்டு சுதர்சன் சரவணமுத்து எழுதிய கட்டுரையில் [“” 1985 திம்பு பேச்சுகளுக்கு பின்னரான காலப்பகுதியில் திரு பத்மநாபா அவர்கள் அவரது அமைப்பை சேர்ந்த ஒரு சில முக்கியமானவர்களை வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இரு தடவைகள் நட்சத்திர ஹோட்டல்களுக்கு உணவருந்த அழைத்துச் செல்வது வழக்கம்””] என எழுதியுள்ளார். என்ன நோக்கில்? எந்த ஆதாரத்தில்? இவ்வாறு எழுதப்பட்டது என்பது எனக்கு புரியவில்லை. என்வரையில் நாபாவை 1978 ல் சந்தித்தது முதல் 1990 ல் பறிகொடுத்தது வரை அவருடனான நேரடி தொடர்பில் அவர் பணித்த இயக்க மற்றும் கட்சி வேலைத்திட்டத்தில் ஈடுபட்டவன், அவருடன் இலங்கையில், இந்தியாவில் நீண்ட பயணங்கள் செய்தவன் என்பதால் பின் வரும் தகவலை பதிவு செய்கிறேன்.

(“பத்மநாபா பற்றிய தகவல் ? என் பார்வையில் !” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு மனிதர்: பன்முக பக்கங்கள்/பார்வைகள்

வாழ்வின் காரணங்களையும் விடைகளையும் தேடி…..

இன்று முக்கியமான நாள்.
இந்தப் பதிவின் முதற் பக்கத்தில் நீங்கள் வாசித்த ஒரு மனிதரின் கடைசிக் கணங்கள் பற்றிய ஒரு பதிவு. இந்த சம்பவம் முள்ளிவாய்காலில் நடந்ததுடன் ஒப்பிடும் பொழுது மிகச் சாதாரணமான ஒரு நிகழ்வே. ஆனாலும் தனிமனித உயிர் என்றளவில் முக்கியமானது என்றால் மறுப்பதற்கில்லை.

இக் கதையில் கொல்லப்பட்டு இறந்தவர் கரவை ஏ.சி. கந்தசாமி (Karavai A.C.Kandasamy).
இன்று அவரது இறந்த நாள் (31.12.1994).
இந்த நாளில் அவரைப் பற்றிய வாழ்க்கை குறிப்பை எழுதுவதற்கான முயற்சியை இங்கு அறிமுகப்படுத்தி ஆரம்பிக்கின்றேன்.

(“ஒரு மனிதர்: பன்முக பக்கங்கள்/பார்வைகள்” தொடர்ந்து வாசிக்க…)

அரசியலமைப்புச் சபை வரும் போது கூட்டமைப்பு பிளவுபடுவதா?

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையில் கடந்த 19ஆம் திகதி அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, மக்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே கூற வேண்டும். இது அரசியல் கட்சியா, இல்லையென்றால் இவ்வாறானதோர் அமைப்பு எதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கங்களும் இந்த புதிய அமைப்பின் நோக்கங்களும் ஒன்றா, ஒன்றாக இருந்தால் இரண்டு அமைப்புக்கள் எதற்கு, நோக்கங்கள் முரண்படுவதாக இருந்தால் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அதில் இயங்குவது எவ்வாறு?

(“அரசியலமைப்புச் சபை வரும் போது கூட்டமைப்பு பிளவுபடுவதா?” தொடர்ந்து வாசிக்க…)