ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி

(புருஜோத்தமன் தங்கமயில்)

குற்றமிழைத்தவர்களே, நீதி விசாரணை நடத்துவதும், தீர்ப்பை எழுதுவதும் இலங்கைக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. அப்படியான, சமூக – அரசியல் ஒழுங்கிணை ஒரு பாரம்பரியமாக, இலங்கை பேணி வருகிறது. அதன் அண்மைக்கால உதாரணம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவரின் நீதிக்கு முரணான அத்துமீறிய செயற்பாடுகளால், நாட்டையும் நாட்டு மக்களையும் அலற வைத்திருக்கிறார். அது மாத்திரமின்றி, அவரின் செயற்பாடுகளுக்குள் அவரே, ‘ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்டு’ம் முழிக்கிறார்.

(“ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி” தொடர்ந்து வாசிக்க…)

காரைநகரில் நடமாடும் ஆவணக் காப்பகம்

(ஜெரா)

இலங்கையின் வடபாகத்தின் தனித்துவங்களுக்குள் முதன்மையானவை எவை எனக் கேட்டால், யாழ்ப்பாண நகரம், ஆரியகுளம் சந்தி, யாழ்ப்பாணக் கோட்டை, நல்லூர் கோவில், வல்லிபுரம், பருத்தித்துறை, மாதகல், கந்தரோடை எனப் பல இடங்களைக் குறிப்பிடலாம். ஆனால், எம்மில் எவருக்கும் இலகுவில் நினைவுக்கு வராத வட பாகத்தின் தனித்துவ அடையாளங்கள்தான், யாழ்ப்பாணத்தைச் சூழக் காணப்படும் தீவுக் கூட்டங்கள். மண்டைதீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, காரைநகர் என நீளும் தீவுக்கூட்டங்களுக்குள்தான், வட பாகத்தின் மனித நிலவுகைக்கான தொடக்கம் நிகழ்ந்ததென்பார், பேராசிரியர் பொ. ரகுபதி. அவரின் தொல்லியல் ஆய்வு நூலான “Early Settlement of Jaffna” (யாழ்ப்பாணத்தின் ஆரம்பகாலக் குடியேற்றம்) என்பதில், இந்த விடயம் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம். (“காரைநகரில் நடமாடும் ஆவணக் காப்பகம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 16)

(Thiruchchelvam Kathiravelippillai)
திருக்கோணமலை மாவட்டத்தில் கண்டி-திருக்கோணமலை வீதியில் தம்பலகமம் உள்ளது. கந்தளாயக்குளம், வெண்டரசன்குளம், கல்மெட்டியாவகுளம், புலியூற்றுக்குளம், கடவாணக்குளம், சேனைவெளிக்குளம், போன்ற குளங்களிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற நீர் மூலமாக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
தம்பலகமம் வெளி என்பது ஏறத்தாள 7000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் நெற்செய்கை செய்யப்படும் வயல்வெளியாகும்.
தம்பலகமத்தில் பல யாழ்ப்பாணத் தமிழர்கள் அந்நாட்களில் அரசபணி நிமிர்த்தமாக வாழ்ந்துள்ளனர். யாழ் வடமராட்சியிலிருக்கும் மக்களுக்கும் தம்பலகமம் மக்களுக்கும் நெல் வியாபாரம் மற்றும் நெற்செய்கை காரணமாக தொடர்புகள் அதிகமாக இருந்தன. ஆரம்பத்தில் தம்பலகமத்திலிருந்து நெல் கொள்வனவு செய்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்றவர்கள் பின்னர் தம்பலகமத்தில் வயல் நிலங்களை 10, 15, 20 ஏக்கர்கள் என்ற வகையில் தமதுடமையாக்கியுள்ளனர். இன்றும் தம்பலகமத்தில் பல யாழ்ப்பாணத்தவர்களுக்கு வயல்நிலங்கள் உரித்துடையவையாக உள்ளன.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 16)” தொடர்ந்து வாசிக்க…)

விஜயின் கணிப்புப் பலிக்குமா?

(எம். காசிநாதன்)

‘சர்க்கார்’ பட சர்ச்சை, இளைய தளபதி விஜய்க்கு, இலவச விளம்பரத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
‘தேவர் மகன்-2’ என்று, நடிகர் கமல்ஹாசன் தலைப்பு வைக்கக் கூடாது என்று, ஓர் எதிர்ப்புக் கிளம்பியிருக்கின்ற நிலையில், அ.தி.மு.க அரசாங்கத்தின் இலவசங்களையும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் விமர்சனம் செய்வதாக, அ.தி.மு.க தொண்டர்கள் திரையரங்குகள் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்திப் பரபரப்பாக்கி இருக்கிறார்கள்.

(“விஜயின் கணிப்புப் பலிக்குமா?” தொடர்ந்து வாசிக்க…)

ரஷ்யாஎமதுஇறைமைக்குள்தலையிட்டதேயில்லை – தயான்ஜெயதிலக

உலகளாவியகூட்டாட்சிதலைமைக்குள்இழுத்துக்கொள்ளப்படும்முயற்சிகளில்இலங்கைதன்னைஈடுபடுத்திக்கொள்ளாதுஎன்றுரஷ்யாவுக்கானஇலங்கைத்தூதுவர்தயான்ஜயதிலக்ககூறினார். உலகின்சிலதலைநகரங்களில்இருந்துமேற்கொள்ளப்படும்சிலகொள்கைபிரசாரங்களையிட்டுஇலங்கைமகிழ்ச்சியாகஇல்லைஎன்றுஅவர்மேலும்கூறினார். “உலகின்சிலபகுதிகளில்உள்ளஎமதுநண்பர்களிடம்இருந்துகேட்கும்குரல்கள்எங்களுக்குமகிழ்ச்சியைதருவதாக இல்லை. ஏனெனில்உலகின்சிலதலைநகரங்களில்இருந்துவரும்கொள்கைபிரசாரங்களாகஅமைந்துள்ளன.

(“ரஷ்யாஎமதுஇறைமைக்குள்தலையிட்டதேயில்லை – தயான்ஜெயதிலக” தொடர்ந்து வாசிக்க…)

கலைந்தது பாராளுமன்றம்

பொதுத் தேர்தல் 2019 − ஜனவரி 5
வேட்பு மனுத்தாக்கல் 19−26 வரை
புதிய பாராளுமன்றம் ஜனவரி 17 இல் கூடும்

பாராளுமன்றம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் கலைக்கப்பட்டது.

இதற்கான, விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியாகியது.

ஜனாதிபதியினால் ஒப்பமிடப்பட்ட இதற்கான விசேட வர்த்தமானி நேற்று இரவு அரசாங்க அச்சக கூட்டுத்தாபன அச்சகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

(“கலைந்தது பாராளுமன்றம்” தொடர்ந்து வாசிக்க…)

பாதிக்கப்பட்டிருக்கும் முல்லை கிராமங்கள் காட்டு யானைகள், குரங்குகளின் அட்டகாசத்தால்

(ஜது பாஸ்கரன்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரிய மற்றும் சிறிய காடுகளைக் கொண்ட எல்லைப்புறக்கிராமங்களிலும் இதேபோன்று வவுனியா மன்னார் போன்ற எல்லைப்புறக் கிராங்களிலும் வாழுகின்ற மக்கள் அன்றாடம் இந்த யானை பிரச்சினையால் பெரும் துன்பங்களை எதிர் கொள்கின்றனர். வாழ்வாதாரத்தையும் தொழில் வாய்ப்பையும் தினமும் தேடி அலையவேண்டிய நிலையில் வாழும் இந்த மக்கள் இவ்வாறான யானைகளின் தொல்லைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

(“பாதிக்கப்பட்டிருக்கும் முல்லை கிராமங்கள் காட்டு யானைகள், குரங்குகளின் அட்டகாசத்தால்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதிசார் பயன்கள் /படிகள்

  1. பின்வரும் படிகள் 2017.01.01 இலிருந்து வலுவிற்கு வரும் வகையில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.

படிகள் அனைத்து அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்வுப் படி ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்திற்கும் சமுகமளிப்பதற்காக ரூ. 2,500/=. குழுப் படி        அமர்வு இல்லாத தினங்களில் குழு நடைபெறும்போது ஒவ்வொரு குழுக் கூட்டத்திற்கும் சமுகமளிப்பதற்காக ரூ. 2,500/=. (அமர்வு தினங்களில் நடைபெறும் குழுக்கூட்டத்திற்கு சமுகமளிப்பதற்கு படியெதுவும் செலுத்தப்படுவதில்லை.)

(“இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதிசார் பயன்கள் /படிகள்” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.அமெரிக்காவில் பெண்களின் அலை

உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும், #MeToo இயக்கம் மூலமாக, பெண்களின் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் மத்தியகாலத் தேர்தலிலும், அக்குரல்கள் ஓங்கி ஒலித்திருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கு, 100க்கும் மேற்பட்ட பெண்கள் தெரிவாகியிருக்கின்றனர். இது, அந்நாட்டு வரலாற்றில், முதன்முறையாக நடந்துள்ளது. தற்போதைய பிரதிநிதிகள் சபையில், 84 பெண்கள் தான் காணப்படுகின்றனர்.

(“ஐ.அமெரிக்காவில் பெண்களின் அலை” தொடர்ந்து வாசிக்க…)

கொழும்புக் குழப்பமும் தமிழ்த் தேசிய அரசியலும்

(கே. சஞ்சயன்)

இலங்கையின் அரசியலில் ஜனாதிபதி ஏற்படுத்திய குழப்பம், தெற்கு அரசியல்வாதிகளை மாத்திரமன்றித் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளையும் குழப்பி விட்டிருப்பதாகவே தெரிகிறது. இந்த நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது என்ற விடயத்தில், அறிவுரை சொல்வதாக நினைத்துக் கொண்டு, தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் முன்வைத்த கருத்துகள், நடைமுறைக்கு ஒத்துவராதவை.

(“கொழும்புக் குழப்பமும் தமிழ்த் தேசிய அரசியலும்” தொடர்ந்து வாசிக்க…)