பொறுமை இழக்கலாமா?

நாட்டில் இப்போது என்ன நடக்கிறது? ஒவ்வொரு பிரஜையும் எழுப்புகின்ற கேள்வி இது. உயரிய மக்கள் சபையான பாராளுமன்றம் கூட்டப்படுவதும், அடிதடி சண்டைகளுடன் ஒத்திவைக்கப்படுவதும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகள் சபையொன்றில் நடக்கின்ற மயிர்க் கூச்செறியும் சண்டைக் காட்சிகளை மக்கள் தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்றாலும் ஏக்கப் பெருமூச்சு ஒன்றுதான் அவர்களது உணர்வு வெளிப்பாடாக இருக்கின்றது.

(“பொறுமை இழக்கலாமா?” தொடர்ந்து வாசிக்க…)

ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் செயற்பட வேண்டும்

தங்கள் ஏழ்மையை ஓரளவுக்கு இது துடைக்கும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்

(யது பாஸ்கரன்)

இலங்கையின் மிகவும் வறுமை மிகுந்த மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. இவ்வாறு இந்த மாவட்டத்தின் வறுமைக்கு, முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் பதினேழாயிரத்துக்கும் அதிகளவான இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பின்றி இருப்பதே காரணமாக அறிய முடிகின்றது. அதுபோல மாவட்டத்தில் தொழில் வாய்ப்பின்மை காரணமாக வறிய மற்றும் நடுத்தர குடும்பங்கள் அல்லப்படுகின்றன.

(“ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் செயற்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

இன்றைய உடனடித் தேவை பரந்துபட்ட கூட்டணியே

70 ஆண்டு சுதந்திரத்தின் உச்ச கட்ட சீரழிவு

(சிராஜ் மஷ்ஹூர்)

1948 இல் இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இப்போது 2018 இல் இருக்கிறோம். இந்த 70 ஆண்டு கால சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையின் அரசியல் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், தீர்க்க முடியாத பாரிய இழப்புகளும் வேதனைகளுமே எஞ்சியிருக்கின்றன. மிகப்பெரும் சீரழிவுகளே தொடர்கதையாகி வருகிறது. ஐ.தே.க. வும், சு.க வுமே இந்தச் சீரழிவின் பிரதான பங்குதாரர்கள்.

(“இன்றைய உடனடித் தேவை பரந்துபட்ட கூட்டணியே” தொடர்ந்து வாசிக்க…)

உண்மைகளின் வெளிப்பாட்டு அனுபவம்

காங்கேசன்துறையிலிருந்து புகையிரதம் காலை 5.30 மணிக்குப் புறப்பட்டது. மேற்கு ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த அந்த தமிழ் மகனும் பயணியாக இருந்தார். புகையிரதம் மல்லாகம், இணுவில், யாழ்ப்பாணம்,சாவகச்சேரி என நிலையங்கள் ஒவ்வொன்றாக கடந்து பயணித்துக் கொண்டிருந்தது. மேற்கு ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த அந்த தமிழ் மகனுக்கு பசிக்களைப்பு. சிற்றுண்டி சாப்பிட்டு தேநீர் குடிக்கும் வேண்டும் போல ஓர் தவிப்பு . (“உண்மைகளின் வெளிப்பாட்டு அனுபவம்” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்க இடைத் தேர்தல்: முடிவுகள் கூறுவது என்ன?

அமெரிக்காவில் நவம்பர் 6-ல் நடந்த இடைத் தேர்தலில், பிரதிநிதிகள் அவையில் பெரும்பான்மை வலு ஜனநாயகக் கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. 435 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் அவையில் குடியரசுக் கட்சியிடமிருந்து 26 இடங்களை அக்கட்சி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, செனட், பிரதிநிதிகள் அவை இரண்டிலும் குடியரசுக் கட்சிக்கு இருந்த பெரும்பான்மை குறைந்திருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் தனக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி என்று டிரம்ப் சொல்லிக்கொண்டாலும், இரு அவைகளிலும் பெரும்பான்மை குறைந்துவிட்டதால் தனது எஞ்சிய பதவிக் காலத்தில், கொள்கைகளை மறுபரிசீலனை செய்து அமல்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார் டிரம்ப்.

(“அமெரிக்க இடைத் தேர்தல்: முடிவுகள் கூறுவது என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

பத்திரிகைகளுக்காக வெளியிடப்படும் அறிக்கை – 13-11-2018 – SDPT

ஆளுநரின் ஆட்சிக் காலத்தில் மாகாண சபையின் அதிகாரங்கள் பறிபோகாது ஜனாதிபதியும் ஆளுநரும் அதனை பராமரித்து பாதுகாக்க வேண்டும்.

– அ. வரதராஜா பெருமாள்

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண சபைகள் கலைக்கப்பட்டு இப்போது ஆளுநரின் தலைமையின் கீழ் மாகாண ஆட்சி நடைபெறுகிறது. இதனvaratha் அர்த்தம் மாகாண ஆட்சி முறை குலைந்து போனதாக அர்த்தமாகாது. இவ்வாறான காலகட்டத்தில் மத்திய அரசாங்கம் மாகாண ஆட்சியின் அதிகாரங்களைக் கையிலெடுத்து செயற்படும் எனக் கருதுவதும் தவறாகும். அவ்வாறான தவறான அர்த்தத்தில் மாகாண ஆட்சி முறையை கடந்த காலங்களில் கையாண்டதனாலேயே 13வது அரசியல் யாப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் மாகாண சபை முறை கொண்டிருந்த ஆட்சித் தத்துவங்களெல்லாம் காலப்போக்கில் கரைக்கப்பட்டு மலினப்படுத்தப்பட்டன.

(“பத்திரிகைகளுக்காக வெளியிடப்படும் அறிக்கை – 13-11-2018 – SDPT” தொடர்ந்து வாசிக்க…)

சுமந்திரன் சாப்பிட்ட அப்பம்?

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்காலத்தடை தொடர்பில் சுமந்திரனை முன்னிறுத்தி பாடப்பட்டுவருகின்ற வழிபாடுகள் சமூக வலைத்தளமெங்கும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அதேவேளை சிறிலங்காவின் நீதித்துறை குறித்து பிரதஷ்டை அடிக்கும் அடியார்கள் கூட்டமொன்றும் முகநூலில் அதிகரித்திருக்கிறது. இவை இரண்டுமே தமிழ் மக்களின் அரசியலுக்கும் இருப்புக்கும் ஆபத்தானது.

(“சுமந்திரன் சாப்பிட்ட அப்பம்?” தொடர்ந்து வாசிக்க…)

இடைக்காலத் தடை விதித்திருப்பது நீதித்துறையின் சுயாதீனத்தைக் காட்டுகிறது

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது நீதித்துறையின் சுயாதீனத்தைக் காட்டுகிறது.

“இலங்கையில் நீதித்துறையும் அரசியல் அதிகாரத்தின் பிடிக்குள் சிக்கியுள்ளது. நீதியாளர்களும் விலைபோயிருக்கிறார்கள்” என்று சொல்லப்பட்ட அபிப்பிராயங்களுக்கு மாறாகவே உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது ஓரளவு ஆறுதலளிக்கும் விசயம்.

(“இடைக்காலத் தடை விதித்திருப்பது நீதித்துறையின் சுயாதீனத்தைக் காட்டுகிறது” தொடர்ந்து வாசிக்க…)

ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி

(புருஜோத்தமன் தங்கமயில்)

குற்றமிழைத்தவர்களே, நீதி விசாரணை நடத்துவதும், தீர்ப்பை எழுதுவதும் இலங்கைக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. அப்படியான, சமூக – அரசியல் ஒழுங்கிணை ஒரு பாரம்பரியமாக, இலங்கை பேணி வருகிறது. அதன் அண்மைக்கால உதாரணம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவரின் நீதிக்கு முரணான அத்துமீறிய செயற்பாடுகளால், நாட்டையும் நாட்டு மக்களையும் அலற வைத்திருக்கிறார். அது மாத்திரமின்றி, அவரின் செயற்பாடுகளுக்குள் அவரே, ‘ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்டு’ம் முழிக்கிறார்.

(“ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி” தொடர்ந்து வாசிக்க…)

காரைநகரில் நடமாடும் ஆவணக் காப்பகம்

(ஜெரா)

இலங்கையின் வடபாகத்தின் தனித்துவங்களுக்குள் முதன்மையானவை எவை எனக் கேட்டால், யாழ்ப்பாண நகரம், ஆரியகுளம் சந்தி, யாழ்ப்பாணக் கோட்டை, நல்லூர் கோவில், வல்லிபுரம், பருத்தித்துறை, மாதகல், கந்தரோடை எனப் பல இடங்களைக் குறிப்பிடலாம். ஆனால், எம்மில் எவருக்கும் இலகுவில் நினைவுக்கு வராத வட பாகத்தின் தனித்துவ அடையாளங்கள்தான், யாழ்ப்பாணத்தைச் சூழக் காணப்படும் தீவுக் கூட்டங்கள். மண்டைதீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, காரைநகர் என நீளும் தீவுக்கூட்டங்களுக்குள்தான், வட பாகத்தின் மனித நிலவுகைக்கான தொடக்கம் நிகழ்ந்ததென்பார், பேராசிரியர் பொ. ரகுபதி. அவரின் தொல்லியல் ஆய்வு நூலான “Early Settlement of Jaffna” (யாழ்ப்பாணத்தின் ஆரம்பகாலக் குடியேற்றம்) என்பதில், இந்த விடயம் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம். (“காரைநகரில் நடமாடும் ஆவணக் காப்பகம்” தொடர்ந்து வாசிக்க…)