பலவீனங்களுக்குப் பரிகாரம் தராத பலவீனங்கள்

(காரை துர்க்கா)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பலவீனம் அடைந்துள்ளது” என அண்மையில் தெரிவித்திருந்தார். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் இதையே சுட்டி நிற்கின்றன.

(“பலவீனங்களுக்குப் பரிகாரம் தராத பலவீனங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் நிலை

(அ.விஜயன்)

சிவகங்கை மாவட்டம் தாழையூர் முகாமில்  வசித்துவரும், சுரேஸ்குமார், சிவாஜினி தம்பதிகள் யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்தவர்கள். இலங்கையில் எற்பட்ட அசாதாரன சூழ்நிலையால் 2009 இல் அகதிகளாக தழிகத்துக்கு இடம்பெயர்ந்தவர்கள்  வினோதரன், சாதுரியா என இரண்டு பிள்ளைகள் இதில் வினோதரன் தேவகோட்டையில் உள்ள இன்பான் ஜீசஸ் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.

(“தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் நிலை” தொடர்ந்து வாசிக்க…)

உலகக் கிண்ணத்தில் யார் யார் விளையாடுவர்?

(Shanmugan Murugavel)

ரஷ்யாவில் இவ்வாண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கான அணிகளை அறிவிப்பதற்கு முன்னராக இறுதிச் சுற்று சிநேகபூர்வ கால்பந்தாட்ட போட்டிகள் இவ்வாரம் முடிவடைந்திருந்தன. இந்நிலையில், ஏறத்தாழ உலகக் கிண்ணத்தில் தாம் களமிறக்கப் போகும் அணிகளையே இவ்வார, கடந்த வார போட்டிகளில் அணிகள் களமிறக்கியிருந்தன.

(“உலகக் கிண்ணத்தில் யார் யார் விளையாடுவர்?” தொடர்ந்து வாசிக்க…)

ஜனநாயகம் பிழைத்திருக்கிறது தற்காலிகமாகவேனும்!

கர்நாடகத்தில் முதல்வராகப் பதவியேற்ற வேகத்தில் ராஜினாமா செய்திருக்கிறார் எடியூரப்பா. ஜனநாயகம் தற்காலிகமாகத் தப்பிப் பிழைத்திருக்கிறது. 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்ட மன்றத்தில் 222 இடங் களுக்குத் தேர்தல் நடந்தது. 104 இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தாலும், ஆட்சி அமைப்பதற் கான எண்ணிக்கை அதனிடம் இல்லை. மாறாக, 78 தொகுதிகளில் வென்ற காங்கிரஸின் ஆதரவுடன், 37 தொகுதிகளில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைப்பதற்குப் போதிய எண்ணிக்கையுடன் ஆளுநரை அணுகியது. மஜத தலைவர் குமாரசாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்திருக்க வேண்டியதே ஆளுநர் வஜுபாய் வாலா எடுத்திருக்க வேண்டிய சரியான முடிவு. ஆனால், குமாரசாமியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு, அந்த வாய்ப்பை பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு வழங்கினார் ஆளுநர். கூடவே, பெரும்பான்மை வலுவை நிரூபிக்க தாராளமாக 15 நாட்கள் அவகாசமும் எடியூரப்பாவுக்கு அளித்தார் ஆளுநர்.

(“ஜனநாயகம் பிழைத்திருக்கிறது தற்காலிகமாகவேனும்!” தொடர்ந்து வாசிக்க…)

கர்நாடகத் தேர்தல் காங்கிரஸுக்குக் கற்றுத்தந்த பாடம்!

(ஷிவ் விசுவநாதன்)

இந்தியாவில் எங்கு, எப்போது தேர்தல் நடந்தாலும் தோற்பதே காங்கிரஸின் வழக்கமாகிக்கொண்டிருக் கிறது. பார்வையாளர்களான மக்கள் திகைத்துக் கரகோஷம் செய்யும்போது, தொப்பிக்குள்ளிருந்து முயல்களாக இழுத்துத் தள்ளும் மந்திரவாதியைப் போல, பாஜக தொடர்ந்து வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறது.

(“கர்நாடகத் தேர்தல் காங்கிரஸுக்குக் கற்றுத்தந்த பாடம்!” தொடர்ந்து வாசிக்க…)

பிஹார் முதல் கர்நாடகம் வரை: பாஜகவின் 4-வது தப்புக் கணக்கு

 

பிஹாரில் தொடங்கி கர்நாடகத் தேர்தல் வரை அரசியல் மரபுகளையும், ஒழுக்கத்தையும் மீறி செயல்பட்டதால் தலைக்குனிவு சம்பவங்களை பாஜக தொடர்ந்து சந்தித்து வருகிறது. இந்த சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கும் என்ற எண்ணுகையில், கர்நாடகாவிலும் தப்புக் கணக்கு போட்டு ஆட்சியைக் கபளீகரம் செய்ய நினைத்து பாஜக தோல்வி அடைந்துள்ளது.

(“பிஹார் முதல் கர்நாடகம் வரை: பாஜகவின் 4-வது தப்புக் கணக்கு” தொடர்ந்து வாசிக்க…)

இன அழிப்புக் குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மேல் மட்டுமல்ல, புலிகளின் மேலும் இருந்தது

இன அழிப்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று துடியாய் துடிப்பவர்கள் நிச்சயமாக இந்த முயற்சியைக் கைவிடக் கூடாது. ஏனெனில் இன அழிப்புக் குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மேல் மட்டுமல்ல, புலிகளின் மேலும் இருந்தது என்பதை நவநீதம்பிள்ளையின் அறிக்கை நிரூபிக்கும். இப்படியான விசாரணை ஒன்று நடைபெற்றால் தான், தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கப் போவதாகப் போராடியதாகச் சொன்ன புலிகள் தங்கள் சொந்த மக்களைப் படுகொலை செய்தார்கள் என்ற உண்மைகள் எல்லாம் வெளியே வரும். தூக்கிச் சென்று ஹாக் நகரில் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை செய்வதற்கு தலைவர் இல்லாவிட்டாலும், தமிழ் மக்களுக்கு புலிகளால் இழைக்கப்பட்ட இந்த அநீதிகள் வெளிக் கொணரப் பட வேண்டும்.

(“இன அழிப்புக் குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மேல் மட்டுமல்ல, புலிகளின் மேலும் இருந்தது” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளுக்கு எதிரான விமர்சனங்கள் 

ஊருக்கு நூறு பேர்.இது ஜெயகாந்தனின் நாவல்.

ஒருவன் நக்கல்பாரி இயக்கத்தில் பயிற்சி பெற செல்கிறார்.அவரை ஆயுதங்கள் சகிதம் சிலர் வந்து வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்கள்.பயிற்சிக்காக செல்பவர் கொஞ்சம் யோசித்துவிட்டு நீங்கள் என்னை கடத்திச் செல்வது போல உணர்கிறேன் என்றார்.அதைக் கேட்ட மற்ற தோழர்கள் சிரித்துவிட்டு ஒருவர் தனது துப்பாக்கியை பயிற்சிக்கு வந்தவரிடம் கொடுத்தார்.அவரும் வாங்கிப் பார்த்தார்.அவரையே வைத்திருக்கும்படி கூறுகிறார்கள்.அவரும் புன்னகையோடு வைத்திருக்கிறார்.வாகனம் தொடர்ந்து பயணிக்கிறது.இப்போது தோழர்கள் கேட்டார்கள்.இப்போது எப்படி உணருகிறீர்கள்.என் தோழர்களோடு தோழர்களோடு தோழர்களாக பயணிக்கிறேன் என்றார்.

(“புலிகளுக்கு எதிரான விமர்சனங்கள் ” தொடர்ந்து வாசிக்க…)

போரில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலிகள்.

இது யாரால் ஏற்பட்டது ? சகோதர படுகொலைகளும், இரு நாடுகளின் இருபெரும் தலைவர்களான ராஜீவ் காந்தி, பிரேமதாசா உட்பட,  பத்மநாபா, அமிர்தலிங்கம் ,துரையப்பா ,லக்ஸ்மன் கதிர்காமர் , ஆகிய பெரும் தலைவர்களையும்  புலிகள் கொன்றது தான் முள்ளிவாய்க்காலின் அவலத்துக்கு முக்கிய காரணமாகும். மூர்க்கத்தனமாகவும் ,முட்டாள்தனமாகவும் செயல்பட்ட புலிகள் இந்த சகோதரப்படுகொலைகளையும், தலைவர்களையும் கொன்றவுடனே  செத்துவிட்டார்கள்.

(“போரில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலிகள்.” தொடர்ந்து வாசிக்க…)

ராகுலுக்கு கைகொடுத்த சமூக நீதியும், கைகொடுக்காத‌ சாஃப்ட் இந்துத்துவாவும்!

(இரா.வினோத்)

காங்கிரஸ் தேசிய‌த் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக தேர்தலில் சமூக நீதி, சாஃப்ட் இந்துத்துவா இரண்டையும் கூட்டி ‘வெற்றி’க் கணக்கு போட்டார். குஜராத் தேர்தலின்போது பின்பற்றிய அதே ‘ஆலய தரிசனம்’ பாணியை கொஞ்சம் மாற்றி, கர்நாடகாவில் இந்து கோயில்கள் மட்டுமல்லாமல் மற்ற மத வழிபாட்டுத் தளங்களும் படையெடுத்தார். கர்நாடக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் லிங்காயத்து, ஒல்லிகர், பிராமணர் உள்ளிட்ட சாதிகளின் மடங்களுக்கும் சென்று ஆசிபெற்றார். ஆனால் ராகுல் போட்ட கணக்கு தேர்தலில் பலிக்காமல் போய்விட்டது.

(“ராகுலுக்கு கைகொடுத்த சமூக நீதியும், கைகொடுக்காத‌ சாஃப்ட் இந்துத்துவாவும்!” தொடர்ந்து வாசிக்க…)