கர்நாடகத்தில் முதல்வராகப் பதவியேற்ற வேகத்தில் ராஜினாமா செய்திருக்கிறார் எடியூரப்பா. ஜனநாயகம் தற்காலிகமாகத் தப்பிப் பிழைத்திருக்கிறது. 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்ட மன்றத்தில் 222 இடங் களுக்குத் தேர்தல் நடந்தது. 104 இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தாலும், ஆட்சி அமைப்பதற் கான எண்ணிக்கை அதனிடம் இல்லை. மாறாக, 78 தொகுதிகளில் வென்ற காங்கிரஸின் ஆதரவுடன், 37 தொகுதிகளில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைப்பதற்குப் போதிய எண்ணிக்கையுடன் ஆளுநரை அணுகியது. மஜத தலைவர் குமாரசாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்திருக்க வேண்டியதே ஆளுநர் வஜுபாய் வாலா எடுத்திருக்க வேண்டிய சரியான முடிவு. ஆனால், குமாரசாமியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு, அந்த வாய்ப்பை பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு வழங்கினார் ஆளுநர். கூடவே, பெரும்பான்மை வலுவை நிரூபிக்க தாராளமாக 15 நாட்கள் அவகாசமும் எடியூரப்பாவுக்கு அளித்தார் ஆளுநர்.
(“ஜனநாயகம் பிழைத்திருக்கிறது தற்காலிகமாகவேனும்!” தொடர்ந்து வாசிக்க…)