முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பில், கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வந்த சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வொன்று காணப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், நினைவேந்தல் நிகழ்வுகளை நேரடியாக ஒழுங்குபடுத்தவுள்ளது.

(“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம்” தொடர்ந்து வாசிக்க…)

MY TRANSCENDENTAL BIRTH STORY

(by birthindia | May 13, 2018 | Birth, Birth Photography, Birth Story, Home Birth, Hypnobirth, Midwifery, Parenting, Pregnancy, Unassisted birth)

My Transcendental Birth Story
She decided, that a hospital birth wasn’t how she wanted to birth her second baby. Mom Ragavardhini, planned to birth her baby from the comfort of her home and in the warmth of water, and that’s what she did. On mother’s day, she shares her sublime birth story and her all-powerful birth experience!

(“MY TRANSCENDENTAL BIRTH STORY” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை: ‘இறந்தவர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்’

இலங்கையில் இறந்தவர்களின் பிணத்தை வைத்து ஆதாயம் தேடும் நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஒன்றைக் காண்பதில் அவர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் இலங்கையின் மூத்த செய்தியாளர்களும், ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். (“இலங்கை: ‘இறந்தவர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்’” தொடர்ந்து வாசிக்க…)

குழந்தைகள் கொத்துக்கொத்தாக செத்து விழுந்ததை…..

(Rathan Chandrasekar)
உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் ஆக்சிஜன் சிலிண்டர்கள்
இல்லாத காரணத்தால் குழந்தைகள்
கொத்துக்கொத்தாக செத்து விழுந்ததை
இதயம் உள்ளவர்கள் அவ்வளவு எளிதில்
மறக்கமாட்டார்கள். அதேபோல,
கைக்காசை செலவு செய்து ஆக்சிஜன் வாங்கி
பல குழந்தைகளின் உயிர் காத்த டாக்டர்
கஃபீல் அஹ்மத் கானையும்
நம்மால் மறக்கவே முடியாது.

(“குழந்தைகள் கொத்துக்கொத்தாக செத்து விழுந்ததை…..” தொடர்ந்து வாசிக்க…)

வட – தென் கொரிய இணைப்பு: முடிந்தும் முடியாத கதை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

மக்கள் மனங்களைப் போல் வலியது ஏதுமில்லை. மக்கள் மனது வைத்தால், அனைத்தும் சாத்தியம். எல்லைக் கோடுகளும் வேலிகளும், இராணுவமும், மக்களைப் பிரிக்கவியலாது. இதை, வரலாறு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. காலங்கள் செல்லலாம். ஆனால், மக்கள் இணைவதை, அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கவியலாது. இதன் இன்னொரு கட்டம், இப்போது அரங்கேறுகிறது.

(“வட – தென் கொரிய இணைப்பு: முடிந்தும் முடியாத கதை” தொடர்ந்து வாசிக்க…)

அண்மையில் ஒருநாள் இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள கனத்தைப் பொதுமயானத்துக்குச் செல்ல நேர்ந்தபோது அதன் நுழைவாயிலைக் கடந்து சற்றுத் தூரத்தில் இலங்கை வானொலியில் ஒரு சகாப்தம் படைத்த அறிவிப்பாளர் அமரர் KS ராஜா அவர்களை நினைவுகூர அவரது குடும்பத்தினர் நிறுவியுள்ள நினைவுச்சின்னம் கண்ணில் பட்டது அவர் குறித்த சில நினைவுகளை அசை போடச் செய்து விட்டது!

(தொடர்ந்து வாசிக்க…)

“கர்நாடகா… தண்ணீர் தாருங்கள்…”

1960.

இப்போ நடக்கும் இதே பிரச்சனை….

“கர்நாடகா… தண்ணீர் தாருங்கள்…”

தமிழக முதல்வர் காமராஜர் கேட்கிறார்
கர்நாடக முதல்வர் நிஜலிங்கப்பாவிடம்.

அப்போதும் இல்லை என்ற பதில்.

(““கர்நாடகா… தண்ணீர் தாருங்கள்…”” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளைப் பற்றி விமர்சனமும்…..! சுய விமர்சனமும்…..!!

(சாகரன்)

ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் இடையேயான முக்கிய வேறுபாடு புலிகள் தமது தவறுகளை தமது ஸ்தாபன முடிவாக எடுத்து மேற்கொண்டனர் ஏனையவர்கள் நடைமுறைத்தவறுகளை செய்தனர். அதாவது புலிகளின் தவறு கொள்கை ரீதியான தவறு ஏனையவர்கள் கொள்கை ரீதியாக இத் தவறுகளை செய்யவில்லை. இவற்றில் கூட ஒரு தவறை மற்றொரு தவறால் சரிசெய்யும் அளவு கோல் என்ற பார்வையே தவறானது. ஆனாலும் அளவுகளிலும் தமிழீழவிடுதலைப் புலிகளின் தவறுகள் மிக அதிகமானது. இதில் முக்கியமானது தமது மக்களின் விடுதலைக்காக போராடுவதற்குரிய ஜனநாயக உரிமையை மறுத்து அவ் அமைப்புக்களை தடைசெய்தல் என்பதை ஆரம்பித்து சகோதரப்படுகொலையை ஸ்தான ரீதியில் மேற்கொண்ட செயற்பாடுகள் தவறு என்பதை இதுவரை ஐயரில் இருந்து ஆரம்பித்து தமிழ் கவி வரை யாரும் பொதுவெளியில் கூறவில்லை.. உணரவில்லை…. வருந்தவில்லை. ரெலோ மீதான தாக்குதலே விடுதலைப் போராட்டததை படுகுடியிற்குள் தள்ளிய ஆரம்ப புள்ளியாக அமைந்தது என்பதை நாம் ஏற்றுகொண்டே ஆகவேண்டும்.

தவறு செய்பவர்களை தண்டிக்கும் அதிகாரம் மக்களுக்கே உண்டு மாறாக ஒரு ‘விடுதலை’ அமைப்பு தானே இதனை ஏகபோகமாக எடுத்துக் கொண்டது மிகப் பெரிய தவறு. பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் தாம் செய்த நடைமுறைத்தவறுகளுக்காக பொது வெளியில் பல காலங்களிலும் பல தரப்பிலும் தலமை உட்பட தோழர்களாக ஏன் இன்றும் இன்னமும் கருத்தரங்குகள் பொது கூட்டங்களில் இதற்கான வருத்தங்கள் சுய விமர்சனங்கள் மன்னிப்புகள் என்பனவற்றை செய்தே வருகின்றனர் வேண்டியளவு செய்து விட்டனர் எனலாம் இவர்களின் வெளியீடு கூட்டங்களில் இதனை நிறையவே காணலாம் (இதனை எத்தனை பேர் வாசித்தனர் கேட்டனர் என்பது அவரவர் பிரச்சனை) அதாவது அமைப்பு ரீதியாக முழுமையாக இதனை செய்து முடித்திருக்கும் அமைப்பு அவ் அமைப்பாகும்.

யாரும் இது வரை தமது தவறுகளுக்கான சுய விமர்சனங்களை செய்யவில்லை என்று பொத்தாம் பொதுவில் கூறுவது என்பது தவறு. கட்டுரையில் ஓரிடத்தில் சிலர் செய்ததாக கூறியும் இன்னொரு இடத்தில் யாரும் செய்யவில்லை என்றும் முரண்பாடாக கூறியதை நான் எழுத்து ஓட்டத்தில் ஏற்பட்ட தவறாக உணர்கின்றேன். போராடுவதற்குரிய ஜனநாயகத்தை மறுத்தது. மாற்றுக் கருத்துகளுக்கான இடைவெளியை மறுத்து அவர்களை கொலை செய்தது. பன்முகப்படுதப்பட்ட தலமையை மறுத்து ஏகபோகமாக செயற்பட்டது.

ஆரம்பத்தில் 1986 களில் நிலவிய ஜக்கிய முன்னணியின் ஜனநாயக மத்தியத்துவத்தை ஏகோபித்த முடிவு என்ற வீற்ரோ அதிகாரத்தை பாவித்து ஐக்கிய முன்ணியை உடைத்தது இதில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட சகோதரப்படுகொலையே ஈற்றில் தனித்து நின்று எதிரியினால் அழிந்து போனதற்கு காரணமாக அமைந்தது என்பதை தமிழீழ விடுதலைப்புலிகள் தமது சுய மீள்பார்வை மூலம் உணரப்பட வேண்டும். மாற்று இனங்கள் மீதான வன்மம் எமக்கான நட்புசக்திகளை அரிதாக்கி பகைவர்களை உள்ளும் வெளியேயும் எற்படுத்தி சர்வ தேசத்தில் தனிமைப்பட்டுப் போன நிலமை இறுதிக்காலத்தில் ஒருவர் கூட ஆகாய மார்க்கமாகவேனும் (அது நோர்வேயாக இருந்தாலும்) காப்பாற்றப்பட முடியாமல் தலமைகள் கூட மடிந்து போன நிலமைக்கு இட்டுச் சென்றது.
இவர்கள் (புலிகள்) நம்பகத்தன்மையற்றவர்கள் என்று (ஆரம்பத்தில் கம்பளம் விரித்தவர்கள் கூட) நம்பும் அளவிற்கு புலிகளின் வரலாற்றில் நடைபெற்ற பல நிகழ்வுகள் காரணமாக அமைந்தன. விருந்திற்கு அழைத்துவிட்டு நஞ்சும் வைப்பார்கள்… பேசிக் கொண்டு இருக்கும் போதும் சுட ஆரம்பிப்பார்கள்… போர் நிறுத்தத்தை ஒரு நடுநிலையாளரின் உதவியுடன் ஆரம்பித்து இடை நடுவில்லை இதற்கு பாதகமாக செயற்படுவர்… இப்படி பல அடுக்கலாம் இவற்றை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக 1990 களின் பின்பு சர்வதேச சமூகத்தின் தார்மீக ஆதரவை எமது போராட்டம் பெறுவதை தவறிவிட்டது. மாறாக விழும் மரணங்களின் எண்ணிக்கை மூலம் வென்று விடலாம் அது காற்று புக முடியாத இடத்தில் புகுந்து கூட என்று அதீதமாக இராணுவாதத்தை நம்பி அழிந்து போனதுவே எமது மக்களுக்கான விடுதலைப் போராட்டம். வருந்துகின்றேன்….. இந்நிலமைகளுக்கு இவற்றை நாம் மீள் பார்வைக்கு உள்ளாக்க வேண்டும்.

இன்றும் இன்னமும் வன்முறையற்றை ஆரோக்கிய விவாதம் கலந்துரையாடலுக்கும் தயாரில்லா நிலமையே தொடருகின்றது பல இடங்களில் புலிகளின் உறுப்பினர்கள் கருத்தரங்குகள் புத்தக வெளியீடுகளை வன்முறை மூலம் குழப்பும் வெருட்டி நிறுத்தும் நிகழ்வுகள் தொடரவே செய்கின்றன.

(இக்கட்டுரை கீழ் இருக்கும் முகநூல் பதிவு ஒன்றிற்காக எழுதப்பட்டது)

Thamil Mathy

எம்மை போஸ்மோட்டம் செய்யமுன் முதலில்
உங்கள் கடந்தகாலங்களை தோண்டி போஸ்மோட்டம் செய்யுங்கள்

ரெலோ தோழர்களுக்கும் மற்றும் ஏனைய இயக்த்தோழர்களுக்கும் வணக்கம்,

கடந்தகால தமிழர் ஆயுதப்போராட்ட வரலாறு சம்மந்தமாகவும் அதன் ஆரம்பம் பின்னர் எழுச்சி அதன்பின் முரன்பாடுகள் அதனூடான சகோதர ஆயுதமோதல்கள் பின்னர் தமிழர்களுக்கு ஏகோபித்த தலைமையேற்று 2009, May 19 முள்ளிவாய்க்கால் வரையும் விடுதலைப்புலிகளின் வீரம்செறிந்த போராட்டம் அந்த போராட்டத்தில் நடந்த சாதக பாதக விடயங்கள் தந்திரோபாயத் தவறுகள் என்பனவை பற்றிய நீதியானதும்
நேர்மையானதுமான ஆய்வுகளும் சுயவிமர்சனங்களும் நிச்சயம் தேவைதாயானதுதான் அது வரவேற்கப்படவேண்டியதுதான்,அதில் எமக்கு மாற்றுக்கருத்தில்லை

இந்த ஆய்வுகளும்,விமர்சனங்களும் ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும்,எமது சமூகத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துதாக இருக்கவேண்டும் தவர விமரசனம் ஆய்வு என்ற பெயரில் கொச்சைப்படுத்தலையும் உண்மைகளை மறைத்து பொய்மைகளையும் திரிபுபடுத்தல்களையும் திட்டமிட்டு செய்தல் ஆய்வுகளுமில்லை சுயவிமர்சனமுமில்லை
அதன் பெயர் கொச்சைப்படுத்ல் எமது கடந்தகால வரலாற்றை அடுத்த சந்ததிக்கு பொய்மைகளுடன் விட்டுச்செல்லும் வரலாற்று தவறை நீங்கள் செய்கிறீர்கள்,

சுயவிமர்சனம் என்பது ஒரு தனிநபரோ அல்லது ஒரு அமைப்போ தம்மை தாமே ஆய்வு செய்யும் விடயம் அதாவது தமது கடந்தகால சரி தவறுகளை தாமே தமக்குள்
பேசுபொருளாக்கி அவைகளை ஆய்வுக்குட்படுத்தி கடந்தகாலத்தில் தாம் விட்ட தவறுகளை எதிர்காலத்தில் விடாமல் இருப்பதற்காக செய்யப்படும் ஆய்வே சுயவிமர்சனமாகும் ஆனால் தற்போது ரெலோ இயக்கத்தின் முன்னாள் போராளிகள் எனச்சொல்லப்படுபவர்கள் சயவிமர்சனம் என்ற பெயரில் செய்யும் ஆய்வானது உன்மையில் சுயவிமர்சனமில்லை மாறாக அவர்கள் செய்வது தமது கடந்தகால மாபெரும் தவறுகளையும் கழிசறைத்தனங்களையும் மறைத்து தம்மை எந்தவொரு மாபெரும் தவறுகளின் துவக்கப்புள்ளிக்கும் வித்திட்டவர்கள் எனும் பெரும் வரலாற்றுப்பழியை மறைத்து தனியே விடுதலைப்புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மட்டும் கடந்தாகல சகல விடயங்களுக்கும் குற்றவாளியாக காட்டுவதற்கு எடுக்கும் பெரும் முயற்சியாகும் இந்த வகையான உள்நோக்கம்கொண்ட செயல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் காரணம்
நீங்கள் செய்யும் கடந்தகாலத்தைப்பற்றிய உண்மைக்குப் புறம்பான திரிபுபடுத்தல்களும் கொச்சைப்படுத்தல்களும் எமது தமிழ் சமூகத்தை தற்போதைய நிலையிலிருந்து மேலும் பிளவடையச்செய்யும் மேன்மேலும் ஒற்றுமையை சீர்குலைக்கும் ஏனெனில் உங்கள் ஆய்வுகளில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன பொய்மைகள் விதைக்கப்படுகின்றன,

மற்றும் சுயவிமர்சனம் எனும் கருப்பொருளின்
உள்ளார்ந்த அர்த்தத்தையே மாற்றி நீங்கள் உங்களது கடந்தகாலத்தை விமர்சனம் செய்யாது இன்னுமொரு இயக்கத்தை குறைகூறவதிலும் குற்றம் கண்டுபிடிப்பதிலும்
அதனோடு சேர்த்து உங்களை தூய்மையானவர்களாக காட்டுவதிலுமே குறியாக
இருக்கிறீர்கள் இது எந்தவகையில் சுயவிமர்சனமாகும்?

எனவே விடுதலைப்புலிகளாகிய நாம் எம்மை
அவ்வப்போது சுயவிமர்சனம் செய்துகொண்டுதானிருக்கிறோம் உதாரணம் அரசியல் பிரிவு போராளியான தமிழினி எழுதிய ஒரு கூர்வாழின் நிழலில் குணா கவியழகனின் விடமேறிய கனவு நஞ்சுண்ட காடு போன்றன மற்றும் சமூகவலைத்தளங்களினூடாக நாமும் அவ்வப்போது எமது கடந்தகால தந்திரோபாய தவறுகள் போராட்ட உள்ளகத்தவறுகள் என்பனபற்றி காத்திரமானதும் நியாயமானதுமான சுயவிம்சனங்களை நேர்மையாகவும் நீதியாகவும் உள்ளத்தூய்மையுடனும் மக்கள் முன்வைக்கிறோம் எமது தவறுகளை நாம் சுயவிமர்சனம் செய்யும் அளவுக்கு உங்களது கடந்தகால தவறுகளை நீங்கள் சுயவிமர்சனம் செய்யும் உள்ளத்துணிவு உங்களிடமிருக்கிறதா என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனச்சாட்சியை கேட்கவேண்டும்,

அத்தோடு மாற்று இயக்கப்போராளிகளாகிய நீங்கள் உங்கள் கடந்தகாலங்களையும் உங்களது போராட்டப்பாதையில் நீங்களும் உங்கள் தலைமையும் விட்ட தவறுகள் சரிகள் என்பனபற்றி எப்போதாவது யாராவது கடந்தகாலங்களில் ஆவணவடிவில் சுயவிமர்சனம் செய்திருக்கிறீரகளா?(புளட்டிலிருந்து பிரிந்து வந்து தீப்பொறியாக இயங்கிய கேசவன் ஜான் மாஸ்ட்டர் ஆகியோரின் புதியதோர் உலகம் தவிர்ந்த வேறு யாராவது)

எனவே முதிலில் நீங்கள் உங்களையும் உங்களது கடந்தகாலத்தையும் போஸ்மோட்டம் செய்யுங்கள் உங்களது கடந்தகாலத்தை தோண்டி எடுங்கள் அங்கு பல அசிங்கமான
உண்மைகள் உயிர்ப்புடன் உறங்கிக்கொண்டிருக்கும் அந்த உண்மைகளை தைரியமும் உள்ளத்தூய்மையும் இருந்தால் தமிழ் மக்கள் முன் வையுங்கள் பார்க்கலாம் உங்களால் அதைச்செய்ய முடியாதபோது விடுதலைப்புலிகளாகி எம்மை நீங்கள் போஸ்மோட்டம் செய்யும் எந்தவொரு தார்மீக உரிமையும் உங்களுக்கு கிடையாது,

ஆகவே எமது மாற்று இயக்கத்தோழர்களான ரெலோ,ஈபிஆர்எல்எப்,பிளட் ஆகிய தோழரகளே நீங்கள் விடுதலைப்புலிகளாகிய எம்மை போஸ்மோட்டம் செய்யமுன் முதலில்
உங்கள் கடந்தகாலங்களை தோணடி போஸ்மோட்டம் செய்யுங்கள் அதன்பிறகு இந்த போராட்டத்தை ஏகபிரதிநிதித்தும் செய்து வழிநடத்தியவர்கள் என்றவகையில்
எம்மை நீங்கள் போஸ்மோட்டம் செய்யலாம்,
அதில் எமக்கு மாற்றுக்கருத்தில்லை ஆனால்
உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கவேண்டுமே தவிர கொச்சைப்படுத்தலாக இருக்ககூடாது,

யாழ் மாநகர சபை குப்பைகள்

ஒவ்வொரு பிரதேச சபைக்கும் நகர சபைக்கும் மாநகர சபைக்குமான கடமை என்பது அந்தந்த சபைகளுக்குரிய அதிகாரத்தின் கீழுள்ள தமது கடமைகளை செய்வது என்பதே. வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் தமிழர்களே. உள்ளூர் யுத்தம் என்பது உயிர் உடமைகளை வரையறை இன்றி காவு கொண்டு ஒரு அழிவில் இருந்து மீண்டு ஒன்பது ஆண்டுகள் எமது சமூகத்தின் கடமைகளை செய்கின்ற சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்தியை மேற்கொள்ளுகின்ற நிர்வாகமும் நிதியும் எமது கையில் வந்த பின்னரும் இன்னும் சுற்றுச்சூழல் மாசடைவதை பார்த்தும் பாராமல் குப்பைகூளங்கள் சபைகளினால் குறிப்பாக யாழ் மாநகர சபையினால் அகற்றப்படாமல் இருப்பது என்பது தமிழ் நிர்வாகத்தின் கையாலாகா தனத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.

(“யாழ் மாநகர சபை குப்பைகள்” தொடர்ந்து வாசிக்க…)