தடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்

(ஜனகன் முத்துக்குமார்)

ஐக்கிய அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இவ்வாண்டின் உறவு, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு ஐ.அமெரிக்கா வழங்க இருந்த உதவித்தொகையை நிறுத்திவைத்தல், பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு உதவுகின்றது என்ற தொனிப்பொருளிலான ஒரு டுவிட்டர் செய்தியுடன் தொடங்கியிருந்தது.

(“தடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்” தொடர்ந்து வாசிக்க…)

தொடங்கியது… மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மஜத தேசிய தலைவர் தேவகவுடா, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக ஆளும் 22 மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள்..!

(“தொடங்கியது… மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்!” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவது

முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவது இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு ஆடை குறித்து இஸ்லாமிய சட்டவியல் – பிக்ஹு – நிலைப்பாடு என்பதாகவன்றி அதுவொரு பெண்கள் குறித்த சமூக மனோபாவமாக அர்த்தம் பெற்றிருப்பது தான் பிரச்சனை.

(“முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவது” தொடர்ந்து வாசிக்க…)

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போன கதை

(கே. சஞ்சயன்)
யாழ்ப்பாணத்தில் இம்முறை, மே தினப் பேரணிகள் களைகட்டியிருந்தன. அத்தகைய மே தினப் பேரணியொன்றில், வெளியிடப்பட்ட கருத்து, சமூக ஊடகங்களில் பெரும் வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய, அந்தக் கட்சியின் இரண்டு முக்கிய பிரமுகர்கள் வெளிப்படுத்திய கருத்துகள், இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணமாகியுள்ளன. 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், த.தே.ம.மு, நடத்திய மே தினப் பேரணிகளில் ஒப்பீட்டளவில் இது பெரியது.

(“பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போன கதை” தொடர்ந்து வாசிக்க…)

மாநில சுயாட்சியை முன்வைத்து மோடிக்கு எதிர்ப்பு அணி?

(எம். காசிநாதன்)

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், சென்னையில் தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து விட்டுப் பின்னர், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினுடன், மதிய உணவுடன் கூடிய ஆலோசனையை நடத்தியிருக்கிறார். மத்தியில் ஆளுங்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கின்ற நேரத்தில் எல்லாம், மத்திய அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு, பெரும்பாலான மாநிலங்களில் சர்ச்சைக்குள்ளாகும். குறிப்பாக, மாநிலங்களின் அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்தால் கைப்பற்றப்படும் நிகழ்வுகள் அரங்கேறும்.

(“மாநில சுயாட்சியை முன்வைத்து மோடிக்கு எதிர்ப்பு அணி?” தொடர்ந்து வாசிக்க…)

போருக்கு பிந்திய யாழ். மாவட்டத்தில் இராணுவத்தால்      இந்து ஆலயம் எதுவும் சீரழிக்கப்படவே இல்லை

– கட்டளை தளபதி தர்ஷன அடித்து கூறுகிறார் –

2009 ஆம் ஆண்டுக்கு பிந்திய வருடங்களில் குறிப்பாக கடந்த மூன்று ஆண்டு கால பகுதியில் இராணுவத்தினரின் நடவடிக்கைகள் காரணமாக இந்து ஆலயங்களுக்கு ஏதேனும் சேதாரங்கள், பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்குமானால் அவற்றை இராணுவத்தின் செலவிலேயே நிவர்த்தி செய்து தருவார்கள் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

(“போருக்கு பிந்திய யாழ். மாவட்டத்தில் இராணுவத்தால்      இந்து ஆலயம் எதுவும் சீரழிக்கப்படவே இல்லை” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கும் அய்யூப் அஸ்மின்: பின்னணி இதுதான்!

(எஸ். ஹமீத்)

கடந்த சில தினங்களாக வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் ஊடகங்களில் பேசு பொருளாகியிருக்கிறார். இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகத்தின் உணர்வுகளை அவர் வெகுவாகக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதனால் ஊடகங்களில் அவர் பலவாறாக விமர்சிக்கப்படுகின்றார். உண்மையில் இதன் பின்னணியில் அய்யூப் அஸ்மினின் மிகக் கேடுகெட்ட ஓர் அரசியல் இருக்கிறது. இதுபற்றி மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.

(“முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கும் அய்யூப் அஸ்மின்: பின்னணி இதுதான்!” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனின் நீட்சியாக கருதப்பட வேண்டியவர் கேபி யே

(யோகா வளவன் தியா)

நான் அறிந்தவகையில் கே பி , பிரபாகரனின் நல்ல நண்பர். அவரது நல்லது கெட்டதுகள் அனைத்திலும் பங்கு பெற்றவர். பிரபாகரனின் திருமணத்தின் போது மாப்பிள்ளை தோழனாக இருந்தது கேபி யே. இயக்கம் அரசியல் எல்லாவற்றுக்கும் அப்பால் பிரபாகரனின் குடும்ப நண்பராகவும் இருந்தார். விடுதலைபுலிகளின் வளர்ச்சியில் பிரபாகரனுக்கு அடுத்தபடி கேபி க்கு முக்கிய பங்கு உண்டு. அதாவது ஆயுத கொள்வனவு. கள்ள சந்தையில் ஆயுதம் வாங்குவது என்பது சாதாரண விடயமல்ல. இங்கு பாங்கில் பணத்தை போட அங்கு ஆயுதம் டிலிவறி செய்யும் விடயமல்ல. நூறு பெயில் டீல்களினுடாகவே நல்ல ஒரு தொடர்பு கிடைக்கும். அவற்றை கேபி செவ்வனே செய்து வந்தார்.

(“பிரபாகரனின் நீட்சியாக கருதப்பட வேண்டியவர் கேபி யே” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியாவிலியங்கும் இந்து பாஸிஸ இயக்கமான ஆர். எஸ் எஸ் இன் பிடியில்….

அண்மைக் நாட்களில் திருகோணமலை இந்துக்கல்லூரி ‘ஆடை மரபு’ சார்ந்து முஸ்லிம் ஆசிரியர்கள் அபயா அணிய தடை விடுக்கப்பட்டு பின் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து முகப்புத்தகத்தில் சூடான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நானும் முன்னெப்பொழுதுமில்லாதவாறு பங்கு பற்றியுள்ளேன். எனது கப்பியூட்டரும் ‘அழகி’யும் மக்கர் பண்ணியதால் ஆங்கிலத்தில் எனது விவாதங்களைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டேன். அதனால், “நீ என்ன தமிழில் பேச முடியாதா,” எனக்கூறி நான் சொன்ன முக்கியவரலாற்று குறிப்புக்களை ஒருவர் தனது போஸ்ட்டிலிருந்து வெட்டியுமுள்ளார். இவ்விவாதங்களில் இந்தியாவிலியங்கும் இந்து பாஸிஸ இயக்கமான ஆர். எஸ் எஸ் இன் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு சில தமிழரும் தீவிரமாக பங்களிக்கின்றனர்.

(“இந்தியாவிலியங்கும் இந்து பாஸிஸ இயக்கமான ஆர். எஸ் எஸ் இன் பிடியில்….” தொடர்ந்து வாசிக்க…)

மேதினம் அறை கூவும் அறம்

இதன் குறிக்கோள் மானிட விடுதலை.
இதுவரை கால வரலாறுகள் யாவும் வர்க்க போராட்ட வரலாறுகளே என்று பிரகடனம் செய்த கார்ல் மாக்சின் பிறந்த தினம் மே 6.
இரத்தம் தோய்ந்த கொடிகளை உயர்த்தி தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப்பதற்காக நடத்திய போராட்டத்தின் நினைவுகளையும் மனித குலத்தின் இடையறாத போராட்டத்தையும் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் வலியுறுத்துவது மேதினம்.

(“மேதினம் அறை கூவும் அறம்” தொடர்ந்து வாசிக்க…)