பர்தாவுக்கு உரிமை குரல் கொடுக்கும் முஸ்லிம் சமூகம் இப்பதினெட்டு 18 இஸ்லாமிய சிறுமிகளின் துஸ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுக்காதது ஏன்?..
(“வடக்கில் வித்யா.. கம்பஹாவில் சேயா.. கொழும்பில் இவர்களா?..” தொடர்ந்து வாசிக்க…)
Category: அரசியல் சமூக ஆய்வு
Political & Sociology Research
தாயக தேர்தல் கள நிலமை
தமிழ் வாக்காளர்கள் பெரும்பாலானோரின் நிலை – தமிழ்த் தேசியம், பலமான அரசியல் சக்திகள் (ஏக பிரதிநித்துவம்) என்பதாக உள்ளது.
வடக்கில் தமிழ் தேசியத்திற்கு எதிர்ப்பு அல்லது வேறு காரணங்களால் தமிழ் தேசியத்திற்கு அப்பாலன ஆதரவும் இருந்தே வருகிறது(டக்ளஸ்,விஷயகலா,அங்கஜன்)
கிழக்கில் தமிழ்த் தேசியம் என்பது முஸ்லிம் எதிர்ப்பையும் கொண்டது… சில இடங்களில் இதுவே பிரதான நிலைப்பாடு.
தீவிர தமிழ் தேசியவாதம் ஏன் மக்கள் ஆதரவைப் பெறவில்லை என்பது முக்கியமான விடயம்.
சுமந்திரன் சுத்துமாத்து!
செய்தி- ஆயுதக்குழுக்கள் தமிழ்தேசியக்கூட்டமைப்பில் இருந்து தாராளமாக வெளியேறலாம்- சுமந்திரன்
சுமந்திரன் அவர்களே!
இத்தனைநாளும் கூட இருக்கும்வரையில் தெரியவில்லை. இப்போது அவர்கள் பிரிந்துபோகும்போதுதான் ஆயுதக்குழுக்களாக உங்களுக்கு தெரிகிறதா? (“சுமந்திரன் சுத்துமாத்து!” தொடர்ந்து வாசிக்க…)
கட்டாயம் தீர்வு காணப்பட வேண்டிய வட்டமடு காணி பிரச்சினை!
(விருட்சமுனி)
விவசாயம், மாடு வளர்ப்பு ஆகியவற்றை அம்பாறை மாவட்டத்தின் பொருளாதார வளம் அடிப்படையாக கொண்டு உள்ளது. இதே போல இம்மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்களுடைய பொருளாதார வளத்தின் பலம் விவசாயம், மாடு வளர்ப்பு ஆகியவற்றிலேயே தங்கி உள்ளது. உண்மையில் வட்டமடு காணி பிரச்சினை என்பது தமிழ் பேசும் மக்களுக்கு இடையிலான பிரச்சினையாக படம் பிடித்து காட்டப்படுகின்றபோதிலும் இது விவசாயிகளுக்கும், மாட்டு பண்ணையாளர்களுக்கும் இடையிலான பிரச்சினையே ஆகும். தீர்க்க கூடிய இப்பிரச்சினை இனத்துவ அரசியல் சாயம் கொடுக்கப்பட்டு சுயநல அரசியல்வாதிகளால் தீராத பிரச்சினையாக நீட்டிக்கப்பட்டு வருகின்றது. (“கட்டாயம் தீர்வு காணப்பட வேண்டிய வட்டமடு காணி பிரச்சினை!” தொடர்ந்து வாசிக்க…)
நச்சு அரசியல் கலாசாரத்தின் எழுச்சி
உலகளாவிய ஊடகப் பரப்பை, அண்மைக்காலத்தில் அவதானித்து வந்தவர்களுக்கு, “கடும்போக்கு வலதுசாரி அரசியலின் எழுச்சி” என்பது, அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொற்றொடராக இருக்குமென்பது தெரிந்திருக்கும். ஐக்கிய அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தொடக்கம், ஐக்கிய இராச்சியத்தில் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுதல்), பிரான்ஸிலும் ஜேர்மனியிலும் இன்னோரன்ன ஐரோப்பிய நாடுகளிலும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, இந்தியாவின் நரேந்திர மோடியின் கட்சிக்கு அதிகரித்துவரும் செல்வாக்கு என, கடும்போக்கு வலதுசாரி அரசியலின் செல்வாக்கு அதிகரிப்புக்கான உதாரணங்கள், தாராளமாக இருக்கின்றன.
யாழ். மாநகரசபையின் அடுத்த முதல்வர் யார் தெரியுமா?
யாழ்ப்பாண மாநகரசபையின் அடுத்த முதல்வர் யார்? இந்த கேள்விதான் அரசியலரங்கில் சூடான பேசுபொருளாக இருக்கிறது. முதல்வர் கனவுடன் பல கட்சிகள், பல வேட்பாளர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பழம் தின்று கொட்டைபோட்டவர்கள் முதல் நேற்று அரசியலுக்கு வந்தவர்கள் வரை முதல்வர் கனவுடன் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். வாயிருக்கிறவன் எல்லாம் பகோடா சாப்பிட முடியுமா?
(“யாழ். மாநகரசபையின் அடுத்த முதல்வர் யார் தெரியுமா?” தொடர்ந்து வாசிக்க…)
தமிழ் அரசுக்கட்சி போட்டியிடுகிறது. வட-கிழக்கு முழுவதும்.
கட்சியாகவா அல்லது கூட்டமைப்பா எனத்தெரியவில்லை. சாவகச்சேரியில் கட்டுப்பணம் செலுத்திவிட்டார்கள் என்கிறது இன்றய செய்தி. கட்சியில்தான் பணம் கட்டியிருக்கிறார்கள் போலும்… சம்பந்தர் தம் கட்சி அதிகூடிய விட்டுக்கொடுப்பிற்கு தயார் என்ற செய்தியும் வந்திருக்கிறது. அதனால கோஞ்சம் குழம்பியிருக்கிறேன். ரெலொ – புளட் நிலைமை தெரியவில்லை. வரதர் நிலைமை என்ன என்று தெரியவில்லை.
(“தமிழ் அரசுக்கட்சி போட்டியிடுகிறது. வட-கிழக்கு முழுவதும்.” தொடர்ந்து வாசிக்க…)
இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதல் அமைசர் வரதராஜப்பெருமாள் பேட்டி: வசந்தம் தொலைக் காட்சியில்
இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதல் அமைசர் வரதராஜப்பெருமாள் பேட்டி வசந்தம் தொலைக் காட்சியில்
திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எப்போதும் எட்டாப் பழத்துக்கு கொட்டாவி விடும் நபராகவே உள்ளார்.
அதற்கான காரணம் அவருக்கு அரசியல் நெகிழ்வுத் தன்மை அறவே இல்லாதவர் எப்போதும் தேசியம் தேசியம் தேசியம் என்று கூக்குரல் இடும் அவர் அதை எவ்வாறு பெறமுடியும் என்று கேட்டால்? அவருக்கு பதிலளிக்கமுடியாது. ஏனேனில் அவர் பேசும் தேசியம் அவர் சுயமாக கேட்கும் விடயமில்லை. அவரை வெளியில் இருந்து இயக்கும் பினாமிகளுடைய கோரிக்கை அதிலிருந்து அவர் விடுபடவும் முடியாது. (“திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எப்போதும் எட்டாப் பழத்துக்கு கொட்டாவி விடும் நபராகவே உள்ளார்.” தொடர்ந்து வாசிக்க…)
கந்துவட்டி கனடா
கனடா பலருக்கு சொர்க்க பூமி.மேற்கு அய்ரோப்பிய நாடுகள் ஜனநாயக நாடுகள்.வளர்ச்சி அடைந்த நாடுகள்.இப்படித்தான் உலக மக்களின் கற்பனை. நான் மிக வறிய குடும்பத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவன்.குடிசை வீடு.ஏதோ சாப்பாடு கிடைக்கும் .மண் தரையிலோ இல்லை மரங்களின் கீழோ நிம்மதியாக உறங்க முடியும்.எங்களைப் போன்றே பலரது வாழ்க்கை.