கொல்லப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் அரசியல் பிழைப்பும் பேரினவாதிகளும்

யாழ்ப்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கற்கும் இரண்டு மாணவர்கள் இலங்கைப் பொலிசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பான அதிர்வலைகள் மக்கள் மத்தியிலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும் அதன் எதிர்த் தரப்பிலும் பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இலங்கைப் பொலிஸ் படை இரண்டு மாணவர்களை அதிகாலை வேளையில் கொன்று போட்டுவிட்டு அதற்கான தடயங்களை அழித்துவிட்ட சம்பவம் ஒரு வகையான அச்ச உணர்வைச் சமூக மட்டத்தில் தோற்றுவித்துள்ளது. இரண்டு கொலைகளின் பின்புலத்திலுள்ள அரசியல் காரணங்கள் எதுவாயினும், அவற்றை முன்வைத்து நடத்தப்படும் பிழைப்புவாத அரசியல் ஆபத்தானது. இலங்கையின் இன்றைய அரசியல் சூழலின் குறுக்குவெட்டு முகம் கொலைகளின் பின்னே தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது.

(“கொல்லப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் அரசியல் பிழைப்பும் பேரினவாதிகளும்” தொடர்ந்து வாசிக்க…)

மாணவர்களின் கொலைக்கு நீதி கேட்டு நடாத்தப்படும் போராட்டத்திற்கு யார் தலமை தாங்கவேண்டும் …?

(சாகரன்)

மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்தும் இதற்கு நீதிகோரியும் பிரதேசம் தாண்டி இன மத மொழி வேறுபாடுகள் இன்றி மக்கள் இயல்பாக வீதியில் இறங்கி போராடினார்கள். இந்த ஐக்கியமான போராட்டத்தை ஏனைய விடயங்களிலும் விஸ்தரிப்பதற்குரிய தலமையை… செயற்பாட்டை… நாம் இனம் மொழி சமய வேறுபாடுகளைக் கடந்து உருவாக்கியிருக்கு வேண்டும் அவ்வாறு நாம் செய்வில்லை.

(“மாணவர்களின் கொலைக்கு நீதி கேட்டு நடாத்தப்படும் போராட்டத்திற்கு யார் தலமை தாங்கவேண்டும் …?” தொடர்ந்து வாசிக்க…)

பேரவலத்தின் பின்னரும் தொடரும் எம்மவர் அவலம்!?

முள்ளிவாய்க்கால்வரை நீடித்த எமது ஆயுத போராட்டம் அரச பயங்கரவாதத்தால் ஆரம்பித்து, சகோதர படுகொலை வரை தொடந்து பின்னர், ஒரு மொழி பேசும் சகோதர இனத்தின் மீதான வன்மமாக மாறியது மட்டுமன்றி, அப்பாவி சிங்கள பொதுமக்களையும் பலிகொண்டு இறுதியில் தானும் பலியாகிப் போனது. கல்வியில் பண்பாட்டில் விருந்தோம்பலில் ஒழுக்கத்தில் அன்னியரும் மெச்சத்தகு இனமாக இருந்த எம்மவர் வாழ்வில், பதவி அரசியல் எனும் புயல் வீசி அனைத்தையும் கபளீகரம் செய்தது.

(“பேரவலத்தின் பின்னரும் தொடரும் எம்மவர் அவலம்!?” தொடர்ந்து வாசிக்க…)

The Building Storm Against the TPP

The Trans-Pacific Partnership (TPP) is the one of the most recent of the neoliberal trade agreements being proposed. The final proposal was signed off in February 2016 in Auckland, New Zealand by 12 countries – Australia, Brunei, Canada, Chile, Japan, Malaysia, Mexico, New Zealand, Peru, Singapore, the USA, and Vietnam, after 7 years of negotiation. It awaits ratification in each country. It is a companion agreement to the existing NAFTA agreement, and the CETA and TTIP agreements that Canada and the U.S. are respectively negotiating with the EU.

(“The Building Storm Against the TPP” தொடர்ந்து வாசிக்க…)

பல்கலைகழக மாணவர் மரணம்? எம்மவர் விதைத்த வினையே!

அண்மையில் கொக்குவில் குளப்பிட்டி சந்தி அருகில் அகால மரணமடைந்த இரண்டு இளையவர் பற்றிய விசாரணை பல கேள்விகளை எழுப்புகிறது. நள்ளிரவை அண்மித்த நேரம் அதேவேகமாக பயனித்தவரை பொலிசார் நிறுத்தமுற்பட்ட வேளை அவர்கள் கட்டளைக்கு பணியாது பயணம் தொடர்ந்ததால், அவர்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணை அறியத்தருகிறது. அதன்படி சில பொலிசார் பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரணை தொடர்கிறது. அது கூட நல்லாட்சியின் நாயகன் மைத்திரியிடம், எதிர்கட்சி தலைவர் சம்மந்தன் மனம்வருந்தி வைத்த, சுதந்திரமான விசாரணைக்கான கோரிக்கையால் தான் நடந்ததாம்.

(“பல்கலைகழக மாணவர் மரணம்? எம்மவர் விதைத்த வினையே!” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டு ஒப்பந்தம் மலையக தொழிற்சங்கங்களின் இயலாமையும் அரசியல் தலைமைகளின் ஆளும் வர்க்க சார்பையும் வெளிப்படுத்தியுள்ளது – மக்கள் தொழிலாளர் சங்கம்

தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா கோரி கடந்த காலங்களில் தமது போராட்டங்களை மேற்கொண்டிருந்த போதும் புதிய சம்பள கூட்டு ஒப்பந்தம் வெறும் 730 ரூபா என்று தீர்மானிக்கப்பட்டு கம்பனிகள் சார்பாக இலங்கை முதலாளிமார் சம்மேளனமும் தொழிலாளர்கள் சார்பாக இ.தொ.கா., இ.தே.தோ.தொ.ச., மற்றும் தொழிற்சங்க கூட்டு கமிட்டி என்பவும் கைச்சாத்திட்டுள்ளன. அடிப்படை சம்பளம் வெறும் 50 ரூபா அதிகரித்துள்ள புதிய சம்பள கூட்டு ஒப்பந்தத்தில், ஏற்கனவே வழங்கப்பட்ட விலைக்கேற்ற கொடுப்பனவு 30 ரூபா அப்படியே வழங்குவதற்கும், ஏற்கனவே 75சதவீத வரவுக்கு வழங்கப்பட்ட 140 ரூபாய் 60 ரூபாயாக குறைக்கப்பட்டும், இது வரை இல்லாத உற்பத்தித்திறன் கொடுப்பனவு என்ற புதியவகை கொடுப்பனவாக 140 ரூபாயும் சேர்க்கப்பட்டுள்ளன.

(“கூட்டு ஒப்பந்தம் மலையக தொழிற்சங்கங்களின் இயலாமையும் அரசியல் தலைமைகளின் ஆளும் வர்க்க சார்பையும் வெளிப்படுத்தியுள்ளது – மக்கள் தொழிலாளர் சங்கம்” தொடர்ந்து வாசிக்க…)

இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 4)

(சிவகாமி)

வாழ்வின் பின்னோக்கிய பயணமிது

அந்த 49 நாட்கள் சிறைவாசத்தின் போது சில காட்டிக்கொடுப்பவர்கள் என்று ஓர் நள்ளிரவில் 3 பெண்களைக் கொண்டு வந்தார்கள். அதில் ஓர் பெண் மனநலம் பாதிக்கப்பட்ட படித்த பெண் . அவர் அங்கிருக்கும் வரைக்கும்  யாருடனும் பேசவேயி்ல்லை. மற்ற பெண்கள் இரவு உடைகள் மிகவும் கிழிந்த நிலையில்  முகமெல்லாம் காயங்களுடன் கொண்டு வரப்பட்டாரார்கள். அப்போது  அடைத்து வைத்திருந்த  அறைக்குள்ளேயே முகாமின் தலைவி சுதா என்ன நடந்தது என்று விசாரித்தார்.

(“இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 4)” தொடர்ந்து வாசிக்க…)

விசுவானந்த தேவனுடன் அந்த இரண்டு நாட்கள்

(ஈழப் போராட்டம் என்பது விடுதலைப் புலிகள் அல்லது பிரபாகரனுடன் தொடங்கி முடிவது அல்ல. இதோ ஒரு இடதுசாரி ஆயுதப் போராளியின் வரலாறு. யார் அவரைக் கொன்றார்கள்? இந்தக் கேள்விக்கான விடையை உங்களால் ஊகிக்க முடியும்தான்.அவருடனான எனது இரண்டு நாள் நினைவுகள் இங்கே.)

தோழர் விசுவானந்த தேவன் என்னை விட மூன்றாண்டுகள் இளைஞர். எனினும் அவரை ஒரு மூத்த தோழராகத்தான் கருதித் தோழமை கொண்டிருந்தேன். அப்படி ஒன்றும் அவருடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இருந்ததில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன். கொண்டிருந்த குறைந்த காலப் பழக்கத்தில் அந்த உறவு அப்படித்தான் இருந்தது. ஒரே ஒருமுறைதான் அவரை நான் சந்தித்தேன். அது 1986 ஜூலை அல்லது ஆகஸ்ட். துல்லியமாக நினைவில்லை. முதல் நாள் காலையும் அடுத்த நாள் மாலையும் தஞ்சையிலிருந்த என் “12/28, அம்மாலயம் சந்து” வீட்டில் அமர்ந்து நெடு நேரம் அவர் பேச நான் கேட்டுக் கொண்டிருந்தேன். இரவு அவரைக் கொண்டு சென்று பேருந்தில் ஏற்றிவிட்டு வரும் வரை இடையிடையே சிறு கேள்விகளைத் தவிர நான் வேறொன்றும் பேசவில்லை.

(“விசுவானந்த தேவனுடன் அந்த இரண்டு நாட்கள்” தொடர்ந்து வாசிக்க…)

நாகா இன‌த்த‌வ‌ர் த‌மிழ‌ர்க‌ள்…….?

ஈழ‌த்தில் வாழ்ந்த‌ ப‌ண்டைய‌ நாகா இன‌த்த‌வ‌ர் த‌மிழ‌ர்க‌ள் என்று வாதாடும் போக்கு, ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌ர்க‌ள் ம‌த்தியில் ப‌ர‌வ‌லாக‌ உள்ள‌து. ஆனால், அவ‌ர்க‌ளிட‌ம் “நாகர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள்” என்பத‌ற்கு ஆதார‌ம் என்ன‌வென்று கேட்டால் கிடைக்காது. அண்மையில் புதுவிதி (15-10-2016) ப‌த்திரிகையில், முனைவ‌ர் ஜெ. அர‌ங்க‌ராஜ் எழுதிய‌ “பௌத்த‌மும் ஈழ‌மும்” க‌ட்டுரையில் ஒரு ஆதார‌த்தை காட்டுகின்றார்.

(“நாகா இன‌த்த‌வ‌ர் த‌மிழ‌ர்க‌ள்…….?” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் சித்திரவதை அடையாளங்களாக அங்கே காணப்பட்டது

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் உப தாற்கந்தோருக்கு அருகில் புலிகளின் மோசமான சித்திரவதை முகாம் ஒன்றை 58வது படைப்பிரிவினர் கண்டுபிடித்தார்கள். புலிகளுக்கு எதிரானவர்கள், வேண்டப்படாதவர்கள் ஆண்கள், பெண்களென இந்தச் சித்திரவதை முகாம்களில் அடித்துவைக்கப் பட்டிருந்தார்கள். மூன்று அறைகள் கொண்டதும் சிறைவீட்டில் யானைகளைக் கட்டி வைக்கும் இரும்புச் சங்கிலிகள் காணப்பட்டன.10-12 அடி உயரம் கொண்ட இரும்புக் கூண்டுகள் அங்கே காணப்பட்டன. இரத்தக் கறைகள், பிய்ந்த தலைமுடிகள் ஆகியன புலிகளின் சித்திரவதை அடையாளங்களாக அங்கே காணப்பட்டது. கைதிகள் தப்பிச் செல்லாதபடி கூரைகள் முட்கம்பிகளால் தடுக்கப்பட்டிருந்தன.

(“புலிகளின் சித்திரவதை அடையாளங்களாக அங்கே காணப்பட்டது” தொடர்ந்து வாசிக்க…)