(மாதவன் சஞ்சயன்)
மாணவர்களின் முன் முயற்சியில் உருவான பிரமாண்டமான புத்தர் சிலை அமைந்துள்ள குருணாகல் மாவட்டத்தில் இருந்து தான், ராணுவத்துக்கு அதிகமானோர் இணைந்தனர் என்ற செய்தி என் ஞாபகத்துக்கு வந்த போது, சற்று மனக் குழப்பம் ஏற்பட்டது. 2002ல் ஆரம்பித்து 2015ல் திறந்து வைத்த சிலையை தனி ஒரு மலையில் செதுக்கியது தமிழகத்தை சேர்ந்த சிற்பிகள். உக்கிரமான போர் நடந்த காலத்தில் 10க்கு மேற்பட்ட தமிழர்கள் அங்கு நிரந்தரமாக தங்கி இருந்து பணியாற்ற இனவாதம் விட்டது என்றால், யார் இனவாதிகள் என்ற சுய விமர்சன கேள்வியும் என்னுள் எழுந்தது. காங்கேசன் சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரிந்த சிங்கள அதிகாரி முதல், ரூபவாகினி விக்னேஸ்வரனுடன் வந்த சிங்கள அதிகாரிகள் கொல்லப்பட்டது யாழ் மண்ணில் அல்லவா?
(“என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு ! 2” தொடர்ந்து வாசிக்க…)