என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு ! 2

(மாதவன் சஞ்சயன்)

மாணவர்களின் முன் முயற்சியில் உருவான பிரமாண்டமான புத்தர் சிலை அமைந்துள்ள குருணாகல் மாவட்டத்தில் இருந்து தான், ராணுவத்துக்கு அதிகமானோர் இணைந்தனர் என்ற செய்தி என் ஞாபகத்துக்கு வந்த போது, சற்று மனக் குழப்பம் ஏற்பட்டது. 2002ல் ஆரம்பித்து 2015ல் திறந்து வைத்த சிலையை தனி ஒரு மலையில் செதுக்கியது தமிழகத்தை சேர்ந்த சிற்பிகள். உக்கிரமான போர் நடந்த காலத்தில் 10க்கு மேற்பட்ட தமிழர்கள் அங்கு நிரந்தரமாக தங்கி இருந்து பணியாற்ற இனவாதம் விட்டது என்றால், யார் இனவாதிகள் என்ற சுய விமர்சன கேள்வியும் என்னுள் எழுந்தது. காங்கேசன் சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரிந்த சிங்கள அதிகாரி முதல், ரூபவாகினி விக்னேஸ்வரனுடன் வந்த சிங்கள அதிகாரிகள் கொல்லப்பட்டது யாழ் மண்ணில் அல்லவா?
(“என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு ! 2” தொடர்ந்து வாசிக்க…)

கற்றலோனியா: தனிநாட்டுக் கனவு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

தேச அரசுகளின் தோற்றத்தின் போக்கிற் பல்வேறு தேசங்களை ஓர் அரசினுள் இணைத்ததனூடு, தேசங்களின் சிறைச்சாலைகளாக நாடுகள் உருமாறின. இவ்வுருமாற்றம் இயல்பானதல்ல. முதலாளித்துவ விருத்தியுடன் தோன்றிய தேச அரசு என்ற கருத்தாக்கம், தேசிய இனங்களாகவும் தேசங்களாகவும் அமைய வாய்ப்புள்ள சமூகங்களை ஒடுக்கித் தேச அரசுகள் என்ற வரையறைக்குள் கொணர்ந்தன. முதலாளித்துவத்தின் இன்றைய நெருக்கடி, இத் தேசிய இனங்களினதும் தேசங்களினதும் விடுதலைக் கோரிக்கைகளுக்குப் புதிய பரிணாமத்தை வழங்கியுள்ளன.

(“கற்றலோனியா: தனிநாட்டுக் கனவு” தொடர்ந்து வாசிக்க…)

நேற்றும் இன்றும் நாளையும் ஒன்றே !

(எஸ்.எம்.எம்.பஷீர்)

“மெல்ல மெல்ல செல்லுகின்ற
தந்தை செல்வா நாயகம்
சொல்லுகின்ற பாதையிலே
செல்லுகின்ற வீரர் நாம்”
( எஸ்.ஜே. வீ. பற்றிய ஒரு பாடல்)
இலங்கையின் மூன்று மாகாணங்களில் தேர்தல் நடைபெற்றாலும் வட மாகாணத் தேர்தல் , அதுவும் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஒப்பிட்ட அரசியல் முள்ளிவாய்க்கால் கிழக்கிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டவுடன் அங்கு ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை இழந்தவுடன் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் கிழக்கிலே மாகாண சபைத் தேர்தலிலே தோல்வியுற்றவுடன் ஆயர் சொன்னது போல் அங்கு நடந்தது அரசியல் முள்ளிவாய்க்கால் அல்ல , அது அரசியல் மாவிலாறு மட்டுமே , இப்பொழுதுதான் அரசியல் முள்ளிவாய்கால் முதற்போராட்டமே ஆரம்பித்து,அதுவும் இன்றுடன் போராட்டம் முடிவுக்கு வருகிறது, ஆயுத மாவிலாற்றுப் போராட்டத்தில் கிழக்குப் புலிகள் வன்னிப் புலிகளுக்கு எதிராக நின்று போரிட்டனர், பின்னர் மாவிலாற்று அரசியல் போராட்டத்திலும் அவர்கள் தங்களின் போராட்டத்தை புலிகளின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கெதிராக போரிட்டனர், அதிலும் அவர்கள் வென்றனர்.

(“நேற்றும் இன்றும் நாளையும் ஒன்றே !” தொடர்ந்து வாசிக்க…)

என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு !

(மாதவன் சஞ்சயன்)

Oct102015_1

பயணங்கள் எமக்கு நல்ல/கெட்ட அனுபவங்களை மட்டுமல்ல பல உண்மைகளையும் பகர்கின்றன. அவற்றை உங்களுடன் பகிர்கிவதே இந்த தொடர் கட்டுரையின் நோக்கம். திட்டமிடப்படாத என் பயண ஆரம்பமே நல்ல சகுனமாக அமைந்தது. திறந்து விடப்பட்ட ஓமந்தை சாவடியூடாக முதல் முதலில் பயணித்த வாகனங்களில் நான் பயணித்த பேரூந்தும் அடங்கும். இது பற்றி எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளேன். அதுவரை சுற்றி வளைத்து சோதனை சாவடியில் இறங்கி ஏறும் எம்மை, தேர்தல் காலத்தில் மட்டும் சோதனை இடாது போக அனுமதிப்பர். உடன் அறிக்கை வரும் சொர்க்க வாசல் திறந்து என்று. தேர்தல் முடிந்ததும் வைகுண்ட வாசலில் மீண்டும் சோதனை நடவடிக்கை தொடரும். அறிக்கை விட்டவர் எம்மவரிடம் படமாளிகையில் வைத்து வேறு விடயம் பற்றி காதில் பூ சுற்றுவார் ( றீல் விடுவார் ).

(தொடர்ந்து வாசிக்க…)

நேற்று ஒரு நண்பரின் பதிவில் Subculture என்ற சொற்பதத்தை பார்த்தேன்….

(Ratnasingham Annesley)

Subculture என்பது தமிழ் மக்களிடையே பரவக்கூடாது என்று ஆணித்தனமாக அடித்து சொல்வதை கவனித்தேன்… அப்பிடி அந்த சொல்லை பாவித்தவர் தன்னை ஒரு பெரிய சோஷலிச கருத்தாளன் என்று புளுகி கொள்பவர்….இந்த துணைக்கலாச்சாரம் (Subculture ) என்ற ஒன்றை தவிர்க்க வேண்டும் என்று நினிப்பவர்களில் முக்கியம் ஆனவர்கள் சாதி வேறுபாட்டை ஆதரிப்பவர்களாக இருக்கும்….. அதைவிட இனவெறி பிடித்தவர்களும் இந்த சொற்பதத்தை மிகவும் கடைப்பிடிப்பார்கள்…. ஆகவே ஒரு சாதி வெறியனும் ..இனவெறியனும் ஒரு போதும் ஒரு சோஷலிசவாதியாக இருக்க முடியாது வாய்ப்பே இல்லை…. ஆனால் யாழ்ப்பாணத்து சாதிவாதிகளிடம் இந்த கலப்பு வரக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள்……

(“நேற்று ஒரு நண்பரின் பதிவில் Subculture என்ற சொற்பதத்தை பார்த்தேன்….” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் காலத்தில் சமூக சீர்கேடுகள்…….?

புலிகள் காலத்தில் சமூக சீர்கேடுகள் இப்போது உள்ள நிலையுடன் ஒப்பிட்டால் அளவில் குறைவாகவே இருந்தது என்கின்ற ஒரு உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அந்த நிலை 2007 ஆரம்பம் வரையுமே இருந்தது. அதன் பின் 2009 மே மாதம் நடுபகுதிவரை என்றுமில்லாத வகையில் தமிழ் மக்கள் அடக்குமுறைகளையும் சமூக சீரழிவுகளையும் அனுபவித்தனர். புலிகளே இதற்கு காரணமாகினர் என்கின்ற குற்றச்சாட்டையும் நிராகரிக்கவும் முடியாது.

(“புலிகள் காலத்தில் சமூக சீர்கேடுகள்…….?” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவின் பொருளாதாரம் நலிந்தது

கனடாவில் வேலைவாய்ப்புகள் நிறைந்த மகாணம் ஒன்ராறியோ. நலிந்த மாகாணங்களில் கடல் தொழிலை முதன்மைப்படுத்தும் நியூபவுண்லான்ட்; உம் ஒன்று. ஒன்ராறியோவின் தொழில் வாய்ப்பு அதிகமான வியாபர நகரமான ரொறன்ரோவில், நியூபவுண்லான்ட் வாகனங்களை இடைக்கிடை காண முடியும். இவ் வாகனங்கள் நலிவடைந்த நிலையில் இருக்கக் காணப்படும். இவர்கள் எல்லாம் வேலை தேடி ரொறன்ரோவிற்கு வருபவர்களாக இருப்பர். இது வழமையாகக் காணக்கூடிய ஒன்று. அண்மை காலங்களில் கனடாவின் எண்ணை வளம் நிறைந்த ‘வளமான” அல்பேட்டா மாகாணத்தின் வாகனங்களையும் ரொறன்ரோ வீதிகளில் அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த வாகனங்கள் நலிந்த நிலையில் இல்லை. அப்படியாயின் இவர்கள் உல்லாசப் பிரயாணிகள் என்றால் அதுதான் இல்லை. உல்லாசப் பயணிகள் பொதுவாக நல்ல நிலையில் உள்ள வாகனத்தில் வருபவர்களாக காணப்படுவர். அல்பேட்டா அமெரிக்க கூட்டமைப்பினரால் ரஷ்யாவை பொருளாதாரத்தின் மூலம் வீழ்த்த எடுத்த எண்ணை விலைக் குறைப்பில் கல்லெறி வாங்கிய கனடாவின் மாகாணம். எண்ணை விலைக் குறைப்பு இந்த மாகாணத்தையும் கனடிய பொருளாதாரத்தையும் தாக்கியுள்ள நிலையில் அல்பேட்டா மாகாணத்தில் வேலை வாய்பின்மைனால் நலிவடைந்த தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பு கூடியதாக கருதப்படும் ரொறன்ரோவிற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவே ரொறன்ரோ வீதிகளின் அல்பேட்டா மாகாணத்தவரின் வாகனங்களின் பிரசன்னம். மொழி, நிறம் ஒன்று… பாகுபாடுகள் அதிகம் இல்லாததனால் மாகாணம் விட்டு மாகாணம் மாறி வேலைக்கு அலைய முடிகின்றது இங்கு. நாம் நமது நாட்டில் இது போன்று தலைநகரம் கொழும்பிற்கு அலைய முடியவில்லை இந்த அளவு சுதந்திர உணர்வுடன். பாகுபடுத்திப் பார்க்கும் மனநிலையும், மொழித் தடையும், இனத் தடையும் எம்மைப் பிரித்தே வைத்திருத்தன, பிரித்தே வைத்திருந்தனர் பாராளுமன்றவாதிகள் தமது பாராளுமன்றக் கதிரைகளுக்காக.

(சாகரன்)

காட்டுப் பயணம்… கைகளில் விதை… மரபுப் பள்ளி குழந்தைகளின் சுற்றுலா அனுபவங்கள்…

இயற்கை சார்ந்த இடத்திற்கு குழந்தைகளைச் சுற்றுலா அழைத்துச் செல்வது செம்மை மரபுப் பள்ளியின் கல்வி முறையில் ஓர் அங்கம். அதன்படி, மரபுப் பள்ளி குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கடந்த 3ம் தேதி சனிக்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து இரண்டு பேருந்துகளில் கிளம்பினர். இந்தச் சுற்றுலாவிற்கு மரபுப் பள்ளியின் தலைவர் திரு.ம.செந்தமிழன் தலைமை தாங்கினார். அதற்கு முதல் நாள் இரவு சென்னை மற்றும் அருகமை மாவட்டங்களில் பெய்த கனமழை, மனதையும், சூழலையும் சில்லிட வைத்திருந்தது. குழந்தைகள், பெற்றோர், மரபுப் பள்ளி ஆசிரியர்கள், செம்மை குடும்பத்தினர் என சுமார் நூறு பேர் கொண்ட குழுவினர், முதலில் இறங்கிய இடம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம்.

(“காட்டுப் பயணம்… கைகளில் விதை… மரபுப் பள்ளி குழந்தைகளின் சுற்றுலா அனுபவங்கள்…” தொடர்ந்து வாசிக்க…)

இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ? (2)

(மாதவன் சஞ்சயன்)

இறுதித் தீர்வு 13ல் தானா என கேட்கும் பலர் இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தை நினைவில் கொள்ளவேண்டும். இன்று பறையடித்து “வீ வோன்ட் தமிழ் ஈழம்” என கத்துபவர்களில் பலர் அன்று பிறந்தே இருக்க மாட்டார்கள். இந்தியா எம்மை ஏமாற்றிவிட்டது என்பவர்களில் பலர் அன்று போராட்ட காலத்தில் ஒதுங்கி இருந்தவர்கள். சம்மந்தரையும் சுமந்திரனையும் சீண்டுபவர்கள் ஒருதடவை பொலிஸ் அடியுடன் அடங்கியவர்களும், வழக்கில் தப்பியபின் தம் வாழ்க்கையை கொழும்பில் முடக்கியவரும், கொழு கொம்பு கிடைத்ததும் பற்றிப் பிடித்து படர்ந்து, தலைமையை துதிபாடி குளிரவைப்பவரும், புலம்பெயர் தமிழர் சாவிக்கு ஆடும் பொம்மைகளும் தான் என்பது பகிரங்க உண்மை.

(“இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ? (2)” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய மீனவரின் இலங்கை கடலுக்குள் அத்து மீறும் பிரச்சனை

இதைப்பற்றிய முழுமையான புரிதல் எனக்கு இல்லைதான். இருந்தாலுமே, இந்த மீனவனின் கருத்துக்கள், நிறையவே சென்சிபிள் ஆக இருக்கிறது. படித்துப்பாருங்கள்… தீராத தலைவலியான இந்த ராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்னையை மத்திய அரசு எப்படி தீர்த்து வைத்திருகிறது என்பதையும், தமிழ் நாட்டு தலவைர்கள் கட்ச தீவை மீட்க வேண்டும் என்று எப்படி அரசியல் ஆதாரத்துக்காக நாடகம் ஆடுகிறார்கள் என்பதையும், இலங்கை கடற்பகுதியில் நம் மீனவர்கள் செய்யும் அட்டூழியங்களையும் இதில் பார்ப்போம்..

(“இந்திய மீனவரின் இலங்கை கடலுக்குள் அத்து மீறும் பிரச்சனை” தொடர்ந்து வாசிக்க…)