(Sutharsan Saravanamuthu)
செருப்பு தைத்தவரின் மகனான
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் இலிங்கன் February 12 இல் பிறந்தார், அவர்தான் ஜனநாயகம், மக்களுக்காக மக்களால் மக்களைக்கொண்டு நடத்தப்படுகிறது’ என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு தந்த தலைவன் ஆவார்,அவருக்கு என் இனிய பிறந்தனாள் வாழ்த்துக்கள்!
Category: கட்டுரைகள்
Articles
இன்று கன்பொல்லை தியாகிகளின் 50 ஆவது நினைவுதினம்.
ஆம் ஆத்மியின் அபார வெற்றி சொல்லும் செய்தி என்ன?
மீண்டும் கேஜ்ரிவாலின் வெற்றிக்கொடி பிரம்மாண்டமாகப் பறக்கத் தொடங்கியிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி (ஆஆக) செய்த சாதனைகளை வைத்தே மக்கள் அந்தக் கட்சிக்குப் பெருவாரியான ஆதரவைத் தருவார்கள் என்று கணித்தது பொய்க்கவில்லை. பாஜக காட்டிய முனைப்புக்குப் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. ஷீலா தீட்சித் தலைமையில் (1998-2013) தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது என்றாலும், அதன் பிறகு தேசிய அளவில் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியும், கட்சியின் அமைப்பு சீர்குலைந்ததும் காங்கிரஸுக்குத் தொடர் தோல்விகளையே அளித்துவருகிறது. இந்த முறை டெல்லியில் காங்கிரஸுக்கும் சில தொகுதிகளாவது கிடைக்க வேண்டும் என்று கட்சித் தலைமை முயன்றது; ஆனால், காங்கிரஸால் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முடியவில்லை.
முதல் கோணல்!
கோத்தபாயா ராஜபக்சா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இரண்டு மாதங்களில் எடுத்த நடவடிக்கைகள் நாட்டு மக்கள் மத்தியில் அவர்மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. அதன்மூலம் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அவர்மீது செய்யப்பட்டிருந்த அவதூறு பிரச்சாரம் கூட ஓரளவுக்கு தமிழ் மக்கள் மத்தியிலும் மறையத்தொடங்கி இருந்தது.
ஒட்டுமொத்த சமூகமும் கவலைப்பட வேண்டும்: அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பேட்டி
கற்றல் மோசம் என்றாலே அரசுப் பள்ளிகளை நோக்கிக் கை காட்டுவது நம் சமூகத்தின் மோசமான இயல்புகளில் ஒன்றாகிவிட்டது இன்று. தனியார் பள்ளிகளைக் காட்டிலும் எண்ணிக்கை அடிப்படையில், அரசுப் பள்ளி மாணவர்களிடத்தில் கற்றல் திறன் மோசம் என்றே வைத்துக்கொள்வோம். அரசுப் பள்ளிகளின் சூழல் தொடர்பில் ஆசிரியர்களிடம் யாரும் பேசுவதில்லை. அங்கே சூழல் என்ன? வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஒருவரிடம் உரையாடியதிலிருந்து…
அவுஸ்ட்விட்ச் 75: ஒடுக்கப்பட்டோரில் இருந்து ஒடுக்குவோராக…
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வரலாற்றின் சில இருண்ட பக்கங்கள் பயங்கரமானவை, திகிலூட்டுபவை, அச்சத்தை விதைப்பவை. அந்தப் பக்கங்கள், அரிய பல பாடங்களை எமக்குச் சொல்லிச் சென்றுள்ளன. தேசியவாதம், தேசியவெறியாக மாறுகின்ற போது, நிகழக்கூடிய ஆபத்துகளையும் இனவெறி ஏற்படுத்தக்கூடிய விபரீதங்களையும் காட்டும் குறிகாட்டிகள் வரலாறெங்கும் உண்டு. அவற்றை, இன்று நாம் நினைவுகூரும் போது, அந்த இருண்ட பக்கங்களுக்கு இட்டுச் சென்ற காரணிகளையும் கவனமாய் மனத்தில் இருத்துதல் வேண்டும்.
இனவாதமாக மாறும் கொரோனா வைரஸ் அச்சம்
(எம்.எஸ்.எம். ஐயூப்)
சீனாவில் பெருமளவில் பரவி, தற்போது ஏனைய சில நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ், உலக சுகாதார அமைப்பால் 2019-CoV என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறது. இந்த நோயைப் பற்றி, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பாரியதோர் ஊடகப் பரபரப்பு உருவாகி இருக்கிறது. இதில் நன்மையைப் போலவே, தீமையும் இருப்பதாகவே தெரிகிறது.