சுலைமானி படுகொலையின் வழி ஈரான் ஜனநாயகத்துக்கு ட்ரம்ப் இழைத்த கேடு என்ன?

(ஸ்டான்லி ஜானி)

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் மிக முக்கியமான ராணுவத் தலைவர் காசிம் சுலைமானியின் மரணம், அந்நாட்டு அரசுக்கு மிகப் பெரிய இழப்பு. மேற்காசியா முழுவதற்கும் ஈரானின் அதிகாரம் பரவுவதற்கான வழியைக் கண்டுபிடித்ததல்லாமல் அதை பரவச் செய்தவர் அவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானிய இஸ்லாமியப் புரட்சிப் படையின் மூலம் உளவு வேலையையும் புறப்பாதுகாப்பையும் அவர் நிர்வகித்துவந்தார். பாக்தாத் விமான நிலையத்துக்கு வெளியே ஜனவரி 3-ல் அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டார்.

யாழ் இல் ஆறுமுகநாவலரின் வாரிசுகள்

(வி. சபேசன்)
·
யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டிருக்கிறாள். இன்னொரு ஆணுடன் தொடர்பு கொண்டிருந்தாள் என்கின்ற ஆத்திரத்தில் கணவனே கொலை செய்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதை பல ஈழத்து சங்கிகள் ஆதரித்து எழுதிக் கொண்டிருப்பதையும் காணக் கூடியதாக இருக்கிறது.

ஓமான் க‌ம்யூனிச‌ப் புர‌ட்சியை ஒடுக்கிய ச‌ர்வாதிகாரி க‌பூஸ் ம‌ரணம் குறித்து….

(Kalai Marx)
ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் 50 வ‌ருட‌ங்க‌ள் ச‌ர்வாதிகார‌ ஆட்சி ந‌ட‌த்திய‌ க‌பூஸ் ம‌றைவு குறித்து ஊட‌க‌ங்க‌ள் இர‌ங்க‌ல்பா பாடி ஓய்ந்து விட்ட‌ன‌. அநேக‌மாக‌ எல்லா ஊட‌க‌ங்க‌ளும் அவ‌ரைப் ப‌ற்றி ந‌ல்ல‌தாக‌வே சொல்லி புக‌ழார‌ம் சூட்டின‌. சமூக வலைத்தளங்களில் கூட எதிர்மறையான விமர்சனத்தைக் காணவில்லை. யாரும் ச‌ர்வாதிகாரி என்ற‌ சொல்லை பாவிக்க‌வில்லை. ஏனென்றால் க‌பூஸ் மேற்க‌த்திய‌ நாடுகளுக்கு விசுவாச‌மான‌ அரசிய‌ல் த‌லைவ‌ர். அதனால் அவர் இறந்த பின்னரும் போற்றப் பட்டார்.

பௌத்த, சமண ஆதித்தமிழர்களை கழுவேற்றி படுகொலை செய்த இந்து மதம்..

(Douglas Muthukumar)

இந்து மத வர்ணாசிரமம், சடங்கு சம்பிரதாயம், மனிதர்களை பலியிடுத்தல், விலங்கை யாகம் என்று கொள்ளுதல் போன்ற கொடூரசெயல்களில் ஈடுபட்ட அறிவுக்கு முரண்பாடாக உள்ள இந்து மதத்தை எதிர்த்து கேள்விகள் எழுப்பி அதை அழிக்க தோன்றியதே பகுத்தறிவு பௌத்தமும், சமரச சமணமும்.

‘தியாகம்’ செய்கிறாரா சோனியா?

(எம். காசிநாதன்)
தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் திடீரென்று ‘அறிக்கைப் போர்’ வெடித்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளூராட்சித் தேர்தலில், தி.மு.க பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதும், இந்தக் குழப்பம் தொடங்கியுள்ளது.

துறவறமும் திருமணமும்: பாப்பரசர் எதிர் பாப்பரசர்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
காலமாற்றத்துடன் மாற்றங்கள் நிகழ்வது இயற்கை. ஆனால், இம்மாற்றங்கள் நிச்சயம் நிகழும் என்பதற்கான உத்தரவாதம் எதுவுமில்லை. மாற்றங்கள் தேவைப்பட்டாலும், தவிர்க்க இயலாததாக இருப்பினும், அவை நிகழாமலும் இருந்திருக்கின்றன. இது மாற்றத்தை வேண்டிநிற்கும் விடயமும் அதுசார் அமைப்பும் தொடர்பானது ஆகும்.

‘பிரித்தானிய அரச குடும்பத்தினரின் ‘Megxit’

(Rajes Bala)
பிரித்தானிய அரசகுடும்பத்தினர் இன்று வெளியிட்ட அறிக்கை,பிரித்தானியா மகாராணியின் மூத்த மகனின் இரண்டாவது மகனான இளவரசர் ஹரியும் அவரின் மனைவியான மேகனும் இன்றிலிருந்து பிரித்தானிய அரசகுடும்பத்துக் கடமைகளிலிருந்து வெளியேறிச் சாதாரண பிரஜைகளாக வாழ்க்கையை நடத்துவதை மகாராணியார் அங்கிகரிப்பதாக வெளியிடப்பட்டிருக்கிறது.

‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’

(காரை துர்க்கா)
யாழ்ப்பாணம், திருநெல்வேலி வழியாக, கடந்த மாதம் சென்று கொண்டிருந்த போது, திடீரென மழை கொட்டியது. அவ்வேளையில், வீதி ஓரமாக இருந்த கடையில் தரித்து நிற்கும் எண்ணத்துடன் ஒதுங்கும் போது, அவ்வாறு வேறு சிலரும் ஒதுங்கினார்கள். அவர்களில், நடுத்தர வயதுடைய ஒரு தம்பதியும் அடங்குவர். மழையின் இரைச்சலுக்கு மத்தியிலும் அருகில் நின்ற அத்தம்பதிகளின் உரையாடல் காதுகளில் விழுந்தது…

ஐ. அமெரிக்கா – ஈரானிய முறுகல்களின் வெற்றியாளர் யார்?

(Shanmugan Murugavel)

சமகால விடயங்களில் தற்போது அனைவரினது முணுமுணுப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஈரானிடையேயான யுத்தத்தின் எதிர்பார்ப்பே காணப்படுகிறது அதன் விளைவே யாழ்ப்பாணத்தில் பெற்றோல் நிலையங்களில் நேற்று நிலவிய நீண்ட வரிசை முதல் மசகெண்ணை, தங்கம் விலை அதிகரிப்பு, பங்குச்சந்தை வீழ்ச்சி வரை நீள்கிறது.

கிழக்கின் நிலை உணர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப்

(இலட்சுமணன்)

இன்றைய சமகால அரசியல் சூழ்நிலையில் தமிழர் தேசிய அரசியல் போக்குகளும் அதுதொடர்பான கருத்தாடல்களும் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. கட்சிகளுக்கு இடையில் நிலவும் அதிகாரப் போட்டிகளும் தனிப்பட்ட குத்து வெட்டுகளும் காழ்ப்புணர்வுகளும் தமிழ்த் தேசிய அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது, இன்று தமிழ் மக்களுக்குள் எழுந்துள்ள அச்ச நிலையாக உள்ளது.