‘பிரித்தானிய அரச குடும்பத்தினரின் ‘Megxit’

(Rajes Bala)
பிரித்தானிய அரசகுடும்பத்தினர் இன்று வெளியிட்ட அறிக்கை,பிரித்தானியா மகாராணியின் மூத்த மகனின் இரண்டாவது மகனான இளவரசர் ஹரியும் அவரின் மனைவியான மேகனும் இன்றிலிருந்து பிரித்தானிய அரசகுடும்பத்துக் கடமைகளிலிருந்து வெளியேறிச் சாதாரண பிரஜைகளாக வாழ்க்கையை நடத்துவதை மகாராணியார் அங்கிகரிப்பதாக வெளியிடப்பட்டிருக்கிறது.

‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’

(காரை துர்க்கா)
யாழ்ப்பாணம், திருநெல்வேலி வழியாக, கடந்த மாதம் சென்று கொண்டிருந்த போது, திடீரென மழை கொட்டியது. அவ்வேளையில், வீதி ஓரமாக இருந்த கடையில் தரித்து நிற்கும் எண்ணத்துடன் ஒதுங்கும் போது, அவ்வாறு வேறு சிலரும் ஒதுங்கினார்கள். அவர்களில், நடுத்தர வயதுடைய ஒரு தம்பதியும் அடங்குவர். மழையின் இரைச்சலுக்கு மத்தியிலும் அருகில் நின்ற அத்தம்பதிகளின் உரையாடல் காதுகளில் விழுந்தது…

ஐ. அமெரிக்கா – ஈரானிய முறுகல்களின் வெற்றியாளர் யார்?

(Shanmugan Murugavel)

சமகால விடயங்களில் தற்போது அனைவரினது முணுமுணுப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஈரானிடையேயான யுத்தத்தின் எதிர்பார்ப்பே காணப்படுகிறது அதன் விளைவே யாழ்ப்பாணத்தில் பெற்றோல் நிலையங்களில் நேற்று நிலவிய நீண்ட வரிசை முதல் மசகெண்ணை, தங்கம் விலை அதிகரிப்பு, பங்குச்சந்தை வீழ்ச்சி வரை நீள்கிறது.

கிழக்கின் நிலை உணர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப்

(இலட்சுமணன்)

இன்றைய சமகால அரசியல் சூழ்நிலையில் தமிழர் தேசிய அரசியல் போக்குகளும் அதுதொடர்பான கருத்தாடல்களும் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. கட்சிகளுக்கு இடையில் நிலவும் அதிகாரப் போட்டிகளும் தனிப்பட்ட குத்து வெட்டுகளும் காழ்ப்புணர்வுகளும் தமிழ்த் தேசிய அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது, இன்று தமிழ் மக்களுக்குள் எழுந்துள்ள அச்ச நிலையாக உள்ளது.

ஜனவரி 10 : மலையகத் தியாகிகள் தினமாகப் பிரகடனம்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10ஆம் திகதியை மலையக தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்துவோம்!!!

டெவோன் தோட்டத்தில் சிவனு லெட்சுமணனின் கல்லறையில் நாளை அதற்கான நிகழ்வு ஏற்பாடு!!

மலையக தியாகிகளை நினைவுக்கூறுவதை எமது சமூகத்தின் மத்தியில் வளர்க்கும் நோக்கில் மலையக உரிமைக்குரல் அமைப்பு சில முயற்சிகளை எடுத்துள்ளது.

ஆப்பசைத்த டிரம்ப்!

ஒரே நாளில் உச்சத்துக்கு சென்ற டிரம்ப், இப்பொழுது சற்றும் எதிர்பாரா அடியில் தலைகீழாக தொங்கி கொண்டிருக்கின்றார், இனி அவருக்கு மாபெரும் சிக்கல் ஏற்படலாம் அவரின் அரசியல் வாழ்வே நொறுங்கிவிடலாம்

Nepal’s communist regime backs MCC compact despite internal dissent

(by Editor January 7, 2020 in Development news, Nepal)
Nepal’s communist regime backs MCC compact despite internal dissent
Officials gather after the signing of the Nepal Compact, Thursday, Sept. 14, 2017 in Washington. The five-year, $500 million compact will help strengthen Nepal’s energy sector, improve regional energy connectivity and control transportation costs to encourage growth, private investment and job creation.

அகதிகளுக்கு எதிரான அவுஸ்திரேலிய வலதுசாரிகளின் கூப்பாடு

(ப. தெய்வீகன்)

யாழ்ப்பாணத்தில் உள்ள நண்பர் ஒருவருடன் அண்மையில் பேசும்போது சொன்னார் – “இங்கு மகிந்த ராஜபக்ஷவின் கட்-அவுட்டுக்கு அடுத்ததாக ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கட் அவுட்டுக்கள்தான் சந்திக்கு சந்தி உயரமாக கட்டப்பட்டிருக்கின்றன” – என்று.

அவுஸ்ரேலியக் காடுகள் ஏன் எரிகின்றன?

(ஜெயக்குமாரன் சந்திரசேகரம்)

1. ஏன் அவுஸ்திரேலியக் காடுகள் மாத்திரம் இப்படி எரிகிறது?

முக்கிய காரணம் இங்குள்ள காடுகளில் நிறைந்திருக்கும் யூகலிப்டஸ் மரங்கள். எங்கள் ஊர்ப்பாசையில் சொன்னால் விக்ஸ் அல்லது தைல மரங்கள். அம்மரங்களில் இலகுவில் தீப்பற்றக்கூடிய யூகலிப்டஸ் எண்ணெய் இருக்கிறது. அதனால் பல மரங்கள் வெப்பநிலை அதிகமாகும்போது சூடேறி வெடிக்கவும் செய்யும்.

பொலிவியா

பொலிவியாவின் இதயமாக இருக்கும் ஈவோ மொரேல்ஸின் அரசியல் கோட்டையான விவசாயப்பகுதிகளுக்குள் செல்லுகிற பாதை இப்போதுகூட கடக்கமுடியாததாகத்தானிருக்கிறது.டயர்கள், முள்வேலிகள், மரத்தடுப்பு அரண்கள் என்று கண்ணுக்கெட்டியதூரம்வரை பாதைகள் மறிக்கப்பட்டிருக்கின்றன.

பயணிகள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். மொரேல்ஸின் ஆதரவாளர்களிடம் போராட்டத்தைக் கைவிடும்படி சொல்லுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வழியில் கிட்டத்தட்ட 100 தடுப்புகளில் ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான காவலர்கள் – தடிகள் மற்றும் ஆணிப் பலகைகள் ஆகியவற்றுடன் எதிர்ப்பட்டு – உள்நுழையும் அனுமதிச்சீட்டு அல்லது மருத்துவக் காரணங்கள் இல்லாவிட்டால் திருப்பியனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

நான் 100 மைல் தூரம் பயணித்த பின்னர், ஆண்டியன் அடிவாரத்தில் ஒரு பசுமையான நதிப் பள்ளத்தாக்கில் வெப்ப நகரமான வில்லா துனாரியை அடைந்தேன். நாட்டின் முதல் சுதேசி ஜனாதிபதியான மொரேல்ஸ் தனது அரசியல் வாழ்க்கையை இங்கேதான் தொடங்கி முடித்தார்.

இங்கே இன்னமும் அந்த மனிதரைக் கோயில் கட்டிக் கும்பிடாத குறைதான்.

வில்லா துனாரியை பொலிவியாவின் புதிய இடைக்கால அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத் தலைமையகம் என்றே சொல்லலாம்போல.

பொலிவியாவின் பிரதான நெடுஞ்சாலையைத் தடுத்து, அதன் தேசிய பொருளாதாரத்தை முடக்கி, ஆயிரக்கணக்கான கோகோ விவசாயிகள் – குழந்தைகள் உட்பட – நகரத்தின் முக்கிய நதிப்பாலத்தை சுற்றி முகாமிட்டுள்ளனர். பொருட்களின் போக்குவரத்து இல்லாததால், முக்கிய நகரங்களெங்கும் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை.

முற்றுகைப்போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக 30 மைல் தாண்டி வந்திருக்கும் கோகோ விவசாயி அன்டோனியெட்டா லெடெஸி “மொரேல்ஸ் எங்களுக்குத் தந்தையைப் போன்றவர்” என்கிறார் : “அவர் திரும்பி வராவிட்டால், பொலிவியாவில் அமைதி திரும்பாது!”

புதிய அரசாங்கம் தேர்லுக்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. அதில் மொரேல்ஸ் போட்டியிடத் தடை விதித்திருக்கிறார்கள். ஆனால் வில்லா துனாரியில் உள்ள விவசாயிகள், நாடு கடத்தப்பட்ட தங்கள் தானைத் தலைவனைத் திரும்ப அழைப்பதற்காகத் தங்கள் உயிரைக் கொடுக்கவும் சித்தமாயிருக்கிறார்கள்.

50,000க்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பங்கள், தங்களுக்கு அரசியல் குரல் கொடுத்த,உள்கட்டமைப்பில் பெரும் மாறுதல்கள் விளைவித்த, கல்வியாலும் சுகாதாரத்தாலும் தங்களை மேம்படுத்திய – தாங்கள் ஒவ்வொருவரும் ‘ஈவோ ‘ என்று வாயார அழைக்கும் தலைவனுக்காக திரண்டு நிற்கிறார்கள்.

தங்கள் சக விவசாயத்தோழன் என்று ஒவ்வொருவரும் அந்தரங்கமான அணுக்கத்துடன் மோரெல்ஸை நேசிப்பதை உணரமுடிகிறது. ஈவோவைப்பற்றிப் பேசினாலே தடுப்பு அரண்களைத் தாண்டுகிறது கண்ணீர்.

“நாங்கள் பார்த்த ஒரே ஜனாதிபதி அவர்தான்” என்று கோகோ விவசாயி கிரிகோரியோ சோக் கூறுகிறார். “அவர் எங்களுடன் வயல்களில் உழைத்தவர்!”

கடந்த நவம்பர் 10 ஆம் தேதி – நாட்டின் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக மொரேல்ஸ் அறிவித்த நாள் – வில்லா துனாரியில் பொலிவியாவின் விவசாயிகள் ஒன்றுகூடத் தொடங்கினர். இது ஒரு போர் முகாமாக மாறத்தொடங்கியது. எங்கெங்கும் எழும்பிய தற்காலிக கூடாரங்களால் நெடுஞ்சாலை முற்றுகையிடப்பட்டு முடங்கியது.

போர்க்குரல் எழுப்புவதும், தங்களுக்குள் சமைத்து உண்ணுவதும், ஓய்வெடுப்பதும், மீண்டும் போராடுவதுமாக…திரள்திரளாக நாடெங்கிலுமிருந்து குழுமிய விவசாயிகள். இரவு உணவுக்குப்பின்னர் அரசியல் விவாதங்கள். போராட்டத்தளபதிகளின் திட்டமிடல்கள்.

‘பொம்மை ஜனாதிபதி ஜீனைன் ஏனெஸ் பதவி விலகவேண்டும்!’, ‘பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட 30 மொரேல்ஸ் ஆதரவாளர்களின் மரணத்துக்கு நீதி வேண்டும்!’ இதுவே வானுயரும் போர்முழக்கம். படபடக்கிற பதாகைகளின் முழக்கம்.

“இந்த புதிய சட்டவிரோத அரசாங்கத்தை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் ” என்று உள்ளூர் தொழிலாளர் இயக்கத்தில் மொரேல்ஸின் துணைத் தலைவராக செயல்பட்ட ஆண்ட்ரோனிகோ ரோட்ரிக்ஸ் கூறுகிறார், அவர் முன்னாள் ஜனாதிபதியின் வாரிசாக இங்கு பலரால் பார்க்கப்படுகிறார். “ஈவோ தனது பதவிக் காலத்தை முடிக்க அனுமதிக்கப்படவேண்டும். 24 மணி நேரத்திற்குள், 100,000 விவசாயிகளை அணிதிரட்ட எங்களால் முடியும் ” என்கிறவர், “தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை, முற்றுகைப்போராட்டத்தை மாதக்கணக்கில் நடத்தக்கூட எங்கள் விவசாயிகள் தயாராக உள்ளனர் . போராட்ட உறுதியும், போதிய உணவு சேமிப்பும், சரியான களமும் எங்கள் பலம்!” என்று நம்பிக்கையுடன் பெருவிரலுயர்த்துகிறார்.

இதுவரையிலான மூன்றாவது வார முற்றுகைப் போராட்டம் நகர வாழ்க்கையை நிலைகுலைத்துள்ளது. உணவுத்தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் முற்றுகையாளர்களின் உணர்வு மழுங்குவதாயில்லை.

“எங்கள் வயல்களில் பயிர்கள் வாடிக்கருகிக்கொண்டிருப்பதை நினைத்தபடிதான் நாங்கள் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால்,இது ஒரு அவசியமான தியாகம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். ஈவோவின் ஆட்சியில் எங்களுக்கு வழங்கப்பட்ட இதே உரிமைகளை இந்தப்போராட்டம் எங்கள் பிள்ளைகளுக்கும் வழங்கும்!” என்றார் செராபினோ ஆலிவேரோஸ் என்கிற ஒரு கோகோ விவசாயி.

independent.co.uk
11 December 2019