தரம் ஐந்து புலமைப்பரிசில் மாயையில் இருந்து பெற்றோர் விடுபட்டாக வேண்டும்

த ரம் ஐந்து புலமைப்பரிசில் திட்டம் என்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் நடைமுறையில் உள்ளது. படிப்பில் ஆர்வமும் திறமையும் கொண்ட மாணவர்களை பத்து வயதிலேயே இனம் கண்டு, அம் மாணவர்கள் ஏழைகளாக இருப்பின் பண உதவி மூலமாகவும் சிறந்த பாடசாலைகளில் அம் மாணவர்களை சேர்ப்பதன் மூலமும் முழுமையான கற்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதன் ஊடாகவும் நாட்டின் எதிர்கால சுபீட்சத்துக்கு பங்களிப்பு செய்யக் கூடிய திறமைசாலிகளான இளைஞர்களை உருவாக்குவதே இந்த புலமைப் பரிசில் திட்டத்தின் நோக்கமாகும். எனினும் இருபது ஆண்டுகளுக்கு முன்னரெல்லாம் இப் புலமைப்பரிசிலை பெற்றோர் ‘நீயா நானா’ போட்டியாக எடுத்துக் கொள்ளவில்லை. தமது குழந்தைகள் தேர்ச்சி பெற்றால் மகிழ்ச்சி; தேர்ச்சி அடையாவிட்டால் பரவாயில்லை என்ற மன நிலையிலேயே பெற்றோரும் ஆசிரியர்களும் இருந்தனர்.

(“தரம் ஐந்து புலமைப்பரிசில் மாயையில் இருந்து பெற்றோர் விடுபட்டாக வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

பூநகரியில் ஒரு குளம் அமைக்கப்பட வேண்டும்

உவர் நீரையும், மண்ணையும் மாற்றி அமைப்பதற்கு

‘பூநகரியின் ஆறாயிரம் ஏக்கர் பயிர்ச்செய்கை நிலம் கடல் நீர் உட்புகுந்ததால் உவர் மண்ணாகவும், உவர் நீராகவும் மாறியுள்ளது. இங்குள்ள சில குளங்களை உள்ளடக்கி ஏழு கி.மீ. அணை ஒன்று அமைக்கப்பட்டு பெரிய குளம் ஒன்று அமைக்கப்படுமானால் உவர் நீராகக் காணப்படும் கிணறுகள் நன்னீராகும். இரு போகங்கள் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்’

(“பூநகரியில் ஒரு குளம் அமைக்கப்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

Me Too … எனக்கும் நடந்தது….! எனக்கும் இந்த கொடுமை நடந்தது….!!

(சாகரன்)

Me Too….. எனக்கும் நடந்தது…..! எனக்கும் இந்த கொடுமை நடந்தது…..!! என்று கடந்த ஒரு வருட காலமாக உலகில் ஏற்பட்டுவரும் பாலியல் பலாத்காரம் பற்றிய விழிப்பு பல பிரபல்யங்களை சுற்றி வந்து அது அமெரிக்கா என்று ஆரம்பித்து வட இந்தியா, கேரளா என்று ஆசியாவை நோக்கியும் நகர்ந்து இன்று தமிழ் நாடு வரை வந்துள்ளது. அமெரிக்க நீதித்துறை, வட இந்திய திரைப்பட பிரபல்யங்கள், கேரளத்து மத பீடங்கள், தமிழ்நாட்டு கவிஞர் என்று படர்ந்து அது இன்று அரசியலாக்கப்பட்டு மழுங்கடிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

(“Me Too … எனக்கும் நடந்தது….! எனக்கும் இந்த கொடுமை நடந்தது….!!” தொடர்ந்து வாசிக்க…)

நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு……….

……….. இன்னும் சேரி என்ற சொல்லும் வாழ்வும்
உங்கள் நாட்டில் இருப்பதால் சேரிப்பையன்
– மாரிசெல்வராஜ்

நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு
ஒரு சேரிப்பையனின் பகிரங்க கடிதம்:
வணக்கம் எனக்கு எட்டு வயசாகும்போது என் கண்முன்னே எங்கள் வீடு எரிந்துகொண்டிருந்த நடு இராத்திரி ஒன்றில் எழுத நினைத்த கடிதம் .வெகு காலதாமதம் ஆகிவிட்டது இந்த இருக்கையும் கணிப்பொறியும் எனக்கு கிடைப்பதற்கு .

(“நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு……….” தொடர்ந்து வாசிக்க…)

விழாவில் கலந்து கொள்ள வைரமுத்துவின் நிபந்தனை

கவிஞர் வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் கல்லூரி தமிழ் இலக்கிய விழாவில் உரை ஆற்ற அழைத்தோம்.
முதலில் அவர்களுடைய உதவியாளரை தொடர்பு கொண்டு பேசினோம். கவிஞரை நேரில் சந்திப்பதற்கு அனுமதி பெற்றோம். அவர்களை நேரில் சந்தித்தபோது அழைப்பிதழை வழங்கினோம். பின்பு விழாவினைப்பற்றிய விவரங்களை கேட்டறிந்தார் . அதன் பின் மகிழ்ச்சியோடு கலந்து கொள்வதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் தரப்பில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டது. அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றோம். இறுதியாக ஒரு நிபந்தனை அதில் அவர் எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற புத்தகத்தை 500 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று கூறினார்கள். (“விழாவில் கலந்து கொள்ள வைரமுத்துவின் நிபந்தனை” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த… (Part 8)

இலங்கை விமான நிலையத்தில் இறங்கி யாழ் நோக்கிய பிறந்த மண்ணுக்கான பயணத்தில் வவுனியா வரைக்கும் கிலோ மீற்றர் ஒன்றிற்கு நாலு ஐந்து என்று வீதி ஓரக் கடைகளை காணமுடியும் இது இளநீரில் ஆரம்பித்து ரம்புட்டான் மங்குஸ்தான் , கொய்யா பழ வகைகள் என்று விரிந்து மண்சட்டியில் சூட்டடுப்பில் சமைத்த சுவையான சாப்பாடு என்று விரிந்திருக்கும். எங்கு வேண்டுமானாலும் வாகனத்தை தரித்து தேவையானவற்றை வாங்கி சாப்பிடலாம். சுவையாக மட்டும் அல்ல சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தன. எங்கும் அப்பம் கட்டுச்சம்பல் இஞ்சி பிளேன் ரீ. ஆனால் இன்னமும் ரொய்லெர் மாத்திரம் தேவையான தரத்திற்கு வளர்ச்சியடையவில்லை என்பது ஒரு மிகப் பெரிய குறையே. வவுனியா தாண்டியதும் இந்த வீதியோரக் கடைகளை காணமுடியாது?. சிங்கள மக்களின் இந்த சிறிய தொழில் முயற்சிகள் தமிழ் பகுதிகளில் இல்லை. நான் குறிப்பிடுவது நிரந்தரக் கடைகளை அல்ல. இளநீர் கடைகள் போன்றவற்றை. இயக்கச்சி தாண்ட மிகக் குறைவாகவேனும் ஒன்று இரண்டு என்று தமது வீடுகளில் உற்பத்தியாகும் பழம் இளநீரை. நுங்கு என்பன காணக்கிடைத்தன.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த… (Part 8)” தொடர்ந்து வாசிக்க…)

விக்னேஸ்வரனுக்கான காத்திருப்பு

(புருஜோத்தமன் தங்கமயில்)

வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம், இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவுக்கு வருகின்றது. அது, கடந்த ஐந்து ஆண்டுகளாக “வடக்கின் முதலமைச்சர்” என்கிற அடையாளத்தோடும் அங்கிகாரத்தோடும் வலம்வரும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தன்னுடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், தெரிவுகள் தொடர்பில் உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய நெருக்கடியை வழங்கியிருக்கின்றது. (“விக்னேஸ்வரனுக்கான காத்திருப்பு” தொடர்ந்து வாசிக்க…)

வைரமுத்துவும் சிக்கியிருக்கின்ற ‘#நானும்’

(Gopikrishna Kanagalingam)

உலகின் முக்கிய விருதுகளில் ஒன்றாக முன்னர் கருதப்பட்டு, இப்போது பெரிதளவுக்குக் கவனத்தை ஈர்க்காத விருதுகளில் ஒன்றாக மாறியிருக்கும், அமைதிக்கான நொபெல் பரிசு, முக்கியமான தெரிவொன்றை, இவ்வாண்டு மேற்கொண்டிருந்தது. போரிலும் ஆயுத முரண்பாடுகளிலும், பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டமைக்காக, டெனிஸ் முக்வெகி, நாடியா முராட் ஆகிய இருவருக்கும், சமாதானத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

(“வைரமுத்துவும் சிக்கியிருக்கின்ற ‘#நானும்’” தொடர்ந்து வாசிக்க…)

இன்று சேவின் இறந்த நாள்.

1967 அக்டோபர் 8…. தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம்.

சேவின் இறுதி நாள் இப்படியாக இருந்தது, காலை 10.30… யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ‘சே’ கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார். (“இன்று சேவின் இறந்த நாள்.” தொடர்ந்து வாசிக்க…)

சொர்க்கத்தின் சாத்தான் யாழ்ப்பாணத்தில்!

– ஜீவா.
இலங்கை தமிழ் சமூகம் குறிப்பாக யாழ்பாண சமூகத்தின் விழுமியங்கள் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி’ அதுவும் தேய்ந்து சூனியமாகியிருக்கிறது.
ஒருவருடைய கருத்தை என்ன? அபிப்பிராயத்தைக் கூட செவிமடுக்கமுடியாத முண்டங்களாகிவிட்டது. அப்படியிருந்தும் மாற்று வழிகளில் ஏதாவது ஒரு விடயம் முகிழ்புப் பெறுமாயின் அதனை கருக்கிவிடுவதில் தமிழ் சமூகத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை.

(“சொர்க்கத்தின் சாத்தான் யாழ்ப்பாணத்தில்!” தொடர்ந்து வாசிக்க…)