நான் இலங்கையில் பிறந்தவனாக இருந்தாலும் இதுவரை வாழ்ந்த எனது வாழ்வுக்காலத்தில் கொழும்பு ஐ கடந்து இலங்கையின் தென்பகுதியின் எந்த பகுதிக்கும் சென்றவன் அல்ல. இதற்கான விருப்பு என்னிடம் இருந்தாலும் இதற்கான வாய்ப்புக்கள் ஏற்படவில்லை. இந்த பிரதேச மக்கள் பற்றி தகவல்களை வாசிப்புக்கள் ஊடு மட்டும் அறிந்திருந்தேன். இலங்கையின் ஏனைய சிறுபான்மை மக்களுடன் இவர்களுக்கான தொடர்புகள் குறைவாக இருந்ததினால் பேரினவாதத்தின் செல்வாக்கு இவர்களிடத்து அதிகம் காணப்படுவதாக ஒரு பொதுப் பார்வை இருக்கின்றது. இதில் உண்மைகளும் உண்டு. அரசியல்வாதிகள் இதனை தமது பாராளுமன்ற வெற்றிகளுக்காக பாவித்துக் கொண்டனர். ஆனால் தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டமும் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்து அரசியல் செயற்பாடுகளும் ஜேவிபி இனரின் செயற்பாடுகளும் இந்தப்பகுதி மக்களிடம் இருந்து பேரினவாத சிந்தனைகளை குறைத்திருக்கின்றது என்ற எனது பார்வைக்கு வலுச் சேர்பது போல் எனது இலங்கையின் தென்பகுதிக்கான பயண அனுபவம் எனக்கு தந்திருக்கின்றது.
(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…..!(Part 9)” தொடர்ந்து வாசிக்க…)