தந்திரோபாயத் தவறு உள்ளுராட்சி ஆட்சி அமைப்பு ஆதரவில் ஏற்பட்டுவிட்டது

(Karunakaran, Saakaran)

தேவையைப் பெறுவதற்காக எவ்வளவு தூரத்துக்கும் கீழிறங்குவது. காரியம் முடிந்ததும் உதவியவரைக் கை விடுவது மட்டுமல்ல பழித்துரைக்க முற்படுவதெல்லாம் நாகரீகக் கேடாகும். இதனுடைய நேரடி அர்த்தம், இன்பத்தையும் மகிழ்ச்சியையும் பெறுவதற்காக இரகசியமாக ஒருத்தியுடன் கூடி விட்டு, பிறகு பொதுவெளியில் அந்தப் பெண்ணை “தாசி” என்று அம்பலப்படுத்துவதேயாகும்.

(“தந்திரோபாயத் தவறு உள்ளுராட்சி ஆட்சி அமைப்பு ஆதரவில் ஏற்பட்டுவிட்டது” தொடர்ந்து வாசிக்க…)

ஆடைகளும் நிர்வாணங்களும்

(முகம்மது தம்பி மரைக்கார்)
ஒரு கதை சொல்லவா?

‘முஸ்லிம் பாடசாலையொன்று உள்ளது. அங்கு தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியரொருவர், சேலையுடுத்திக் கொண்டு கடமைக்காக வருகிறார். அப்போது, அந்தப் பெண் ஆசிரியரைக் குறித்த பாடசாலையின் அதிபர் அழைத்து, “உங்கள் ஆடை முறை சரியில்லை. நீங்கள் இங்கு சேலை உடுத்திக் கொண்டு வர முடியாது. இது முஸ்லிம் பாடசாலை என்பதால், எங்களுக்கென்று இங்கு ஒரு கலாசாரம் உள்ளது. எனவே, இங்கு கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் உடுத்தியுள்ளமை போன்று, நீங்களும் ஹபாயா அணிந்துதான் வர வேண்டும். முடியாது விட்டால், எங்காவது இந்துக் கல்லூரியொன்றுக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டு சென்று விடுங்கள்” என்று கூறுகிறார்.

(“ஆடைகளும் நிர்வாணங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் முகுந்தன்- முருகநேசன்

வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாக கொண்ட தோழர் முருகநேசன் இலங்கை விவசாய பீடத்தின் அனுராதபுரம் மகா இலுப்பள்ளமையிலும் பின்னர் பேராத…னை பல்கலைக்கழகத்திலும் ஆசிரியராக கடமையாற்றியவர். மகா இலுப்பள்ளமையில் கற்பிக்கும் போதே அவர் எமது இயக்கத்திற்கு வந்தவர். அவருடைய மாணவரும் தோழருமான மானிப்பாய் பாஸ்கரன் ஊடாகவே அவருக்கு இயக்கத்துடன் பரிச்சயம் ஏற்பட்டது. பல்கலைக்கழக வகுப்புக்களுக்கப்பால் மாணவர்களுடன் சினேகிதமான இளம் மாணவ ஆசிரியர். ஓய்வு நேரங்களில் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு கராத்தே உட்பட உடல் உளப்பயிற்சிகளில் மாணவர்களுடன் சேர்ந்து ஈடுபட்டவர்
ஈழப்போராட்டத்தில் ஈபிஆர்எல்எப் இன் வித்தியாசமான அணுகுமுறை பற்றிய கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அவர் மானிப்பாயிலும் வட்டுக்கோட்டையிலுமாக எம்முடன் பல கருத்துப்பரிமாற்றங்களில் ஈடுபட்டவர். தேசியம் சோசலிசம் ஜனநாயகம் நவீன முறையில் விவசாயம் உள்ளிட்ட வளங்களை கையாள்வது உட்பட பல விடயங்களை அவருடன் கலந்துரையாடியிருப்போம்.

(“தோழர் முகுந்தன்- முருகநேசன்” தொடர்ந்து வாசிக்க…)

திருகோணமலை: பெண்கள் உடை அமைப்பு பற்றிய எதிர் வினையாக்கம்

(சாகரன்)
 
திருகோணமலையின் ஒரு பாடசாலையின் ஆசிரியரின் உடையை மையப்படுத்திய நிகழ்வுகளும்… ஆசிரியை பாடசாலை நிர்வாகம் இடையேயான வாக்கு பிரயோகங்களும்…….. அத்து மீறல்களும்…. நிர்வாகச் செயற்பாடுகளும்….. இடமாற்றமும்…. ஒரு ஆரோக்கியான சூழலை தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையே ஏற்படுவதை சற்று தடுமாற்றம் அடையச் செய்த நிகழ்வு மனதிற்கு வருத்தமானதாகவும் இது தவிர்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் என் மனமும் ஏங்கியே நிற்கின்றது.

(“திருகோணமலை: பெண்கள் உடை அமைப்பு பற்றிய எதிர் வினையாக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

ஓர் இனப்பிரச்சனையும் ஒர் ஒப்பந்ததும் நிகழ்வில்…

கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை முதல் அமைச்சர்  வரதராஜப்பெருமாளின் உரை (காணொளி….)

சிரியா: பேரரங்கின் சிறுதுளி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
போர் சிக்கல்களைத் தீர்ப்பதில்லை. அது சிக்கல்களுக்கு இன்னொரு வடிவத்தைக் கொடுக்கிறது. போர்கள் தொடுக்கப்படுவதற்குச் சொல்லப்படும் காரணங்கள், பெரும்பாலும் தொடுக்கப்பட்ட போருக்கான உண்மையான காரணமாக இருப்பதில்லை. இதை வரலாறெங்கும் கண்டு வந்திருக்கிறோம். அதன் இன்னோர் அத்தியாயம், இப்போது அரங்கேறுகிறது.

(“சிரியா: பேரரங்கின் சிறுதுளி” தொடர்ந்து வாசிக்க…)

அபாயாக்களும் உரிமைகளும் யதார்த்தங்களும்

(Gopikrishna Kanagalingam)
திருகோணமலையிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில், ஆசிரியர்கள் அபாயா எனப்படும், இஸ்லாமிய உடையை அணிவது தொடர்பில், அண்மைக்காலத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்க்க முடிகிறது. இது, சமூக வலைத்தளங்களில் அதிகப்படியான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

(“அபாயாக்களும் உரிமைகளும் யதார்த்தங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

ஆசிரியர் அபாயா அணியலாம்

இப்பொழுது என்ன சொல்ல வருகின்றீர்கள் ? தமிழர் சிறுபான்மையாகத் திகழும் பாடசாலைகளிலோ அல்லது, நிறுவனங்களிலோ குறித்த இடத்தின் பெரும்பான்மையான இனத்தின் கட்டுப்பாட்டுக்களுக்கு உட்பட்டு, அடி பணிந்து நடப்போம் என்பதா ? அல்லது எவ்வித பகுத்தறிவுமல்லாமல் தான்தோன்றித் தனமாக, தனி நபர் பிரபல்யத்திற்காகவும், வாக்கு வங்கியினை விருத்தி செய்வதற்காகவும் வீதிக்கு இறங்கிச் சுய இன்பம் காணப் போகின்றீர்கள் என்பதா ?

(“ஆசிரியர் அபாயா அணியலாம்” தொடர்ந்து வாசிக்க…)

‘நான் உண்மையில் குற்றவாளிதானா…? இல்லை…இல்லவேயில்லை…!’

உயிரைக் காப்பாற்றி ஹீரோ ஆக முயற்சித்தார் என்ற குற்றத்திற்காக உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தும் அவரது படை பரிவாரங்களும் சிறையிலடைத்த டாக்டர். கஃபில் கானின் கடிதத்தின் தமிழாக்கம் (முடிந்தவரை அதிகமானவர்களிடம் கொண்டு சேருங்கள்.)
*********************************************************

“ஜாமீன் கிடைக்காத சிறை வாசத்தில் எட்டு மாதங்கள் கடந்து விட்டன… நான் உண்மையாகவே குற்றவாளியா…?”

சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தாங்கமுடியாத சித்திரவதைகளுக்கும் அவமானங்களுக்கும் பிறகும் கூட ஒவ்வொரு நிமிடமும் கடந்து போன ஒவ்வொரு காட்சியையும் கண் முன்னே நடப்பது போலவே நினைத்துப் பார்க்கிறேன்…!

சிலநேரங்களில் நான் எனக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டுகொள்கிறேன்… “நான் உண்மையிலேயே குற்றவாளி தானா..? இந்த கேள்வி எனக்குள் எழும்போதெல்லாம் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து அதன் பதில் உயர்ந்து வரும்…”இல்லை” என்று…

(“‘நான் உண்மையில் குற்றவாளிதானா…? இல்லை…இல்லவேயில்லை…!’” தொடர்ந்து வாசிக்க…)

விக்னேஸ்வரனுக்காகக் களமாடுவது யார்?

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு, எதிர்வரும் ஜூன் மாதமளவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக ஓய்வுநிலை அதிபர் கந்தையா அருந்தவபாலன், வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இரு வாரகால இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடு திரும்பிய அன்றே, மாநாட்டுக்கான குழு தொடர்பிலான அறிவிப்பும் வெளியாகி இருக்கின்றது.

(“விக்னேஸ்வரனுக்காகக் களமாடுவது யார்?” தொடர்ந்து வாசிக்க…)